Advertisment

ஜெயக்குமார் தரப்பில் இருந்து எந்த மனுவும் வரவில்லை : நெல்லை எஸ்.பி விளக்கம்

ஜெயக்குமார் தரப்பில் இருந்து தங்களுக்கு எந்த மனுவும் வரவில்லை என்றும்,. மரண வாக்குமூலம் என குறிப்பிட்டு அவர் எழுதிய கடிதத்தை அவர் தங்களுக்கு அனுப்பவில்லை என நெல்லை எஸ்.பி தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Jayakumar Nellai

நெல்லை எஸ்.பி.சிலம்பரசன்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

நெல்லை காங்கிரஸ் தலைவர் மரணம் தொடர்பான வழக்கில் அவரது தரப்பில் எந்து எந்த புகாரும் கொடுக்கப்படவில்லை என்றும், மரண வாக்குமூலம் அவரது அலுவலகத்தில் தான் இருந்தது என்றும் நெல்லை எஸ்.பி சிலம்பரசன் விளக்கம் அளித்துள்ளார்.

Advertisment

தமிழகத்தின் நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தவர் கே.பி.கே ஜெயக்குமார். திசையன்விளை அருகே உள்ள கரைசுத்து புதூரைச் சேர்ந்த இவர் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் ப்ரூசுக்கு ஆதரவாக தீவிரமாக பிரச்சாரம் செய்து வந்தார்.  இதனிடையே கடந்த இரு தினங்களாக ஜெயக்குமாரை காணவில்லை என்று அவரது மகன் புகார் அளித்திருந்தார்.

இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர்கடந்த இரு தினங்களாக ஜெயக்குமாரை தேடி வந்த நிலையில்இன்று ஜெயக்குமார் அவரின் வீட்டுக்கு அருகே எரிந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். ஒரு தேசிய கட்சியில் மாவட்ட செயலாளர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில்அரசியல் தலைவர்கள் இது குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜெயக்குமார் தனது மரண வாக்குமூலத்தை காவல்நிலையத்தில் தாக்கல் செய்திருந்ததாகவும், இதில் சில முக்கிய நபர்களின் பெயர்களை இணைந்திருந்ததாகவும் தகவல் வெளியானது. இது குறித்து அந்த மரண வாக்குமூலத்தில் இடம்பெற்றுள்ளவர்கள் தங்களுக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று விளக்கம் அளித்து வரும் நிலையில், நெல்லை எஸ்.பி.சிலம்பரவன் இது குறித்து காவல்துறை விளக்கத்தை அளித்துள்ளார்.

அதன்படி ஜெயக்குமார் தரப்பில் இருந்து தங்களுக்கு எந்த மனுவும் வரவில்லை என்றும்,. மரண வாக்குமூலம் என குறிப்பிட்டு அவர் எழுதிய கடிதத்தை அவர் தங்களுக்கு அனுப்பவில்லை என்று கூறியுள்ள அவர், அக்கடிதத்தை அவரே வைத்திருந்திருந்தார் .  அந்த கடிதத்தை அவரது உதவியாளர் தான் நேற்று மாலை எடுத்து வந்து புகார் அளித்தார் என்றும் கூறியுள்ள நெல்லை எஸ்.பி.சிலம்பரசன் இந்த மரண சம்பவம் குறித்து 7 தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Tamil Nadu Congress
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment