Advertisment

அதிகரித்து வரும் கொரோனா தொற்று; ரெம்டிசிவிர் மருந்து வாங்க குவியும் மக்கள்!

Overcrowding at Kilpauk hospital to buy Remdesivir Tamil News: கொரோனா அதிகரித்து வரும் நிலையில் சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் ரெம்டிசிவிர் மருந்து வாங்க மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamilnadu news in tamil: Overcrowding at Kilpauk hospital to buy Remdesivir, complaints of poor arrangements

Tamilnadu news in tamil: தமிழகத்தின் முக்கிய நகரங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிப்பட்டவர்களுக்கு கொரோனாவை குணப்படுத்தும் ரெம்டிசிவிர் மருந்து வாங்க, சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். நேற்று தொடர்ச்சியாக 2வது நாளாக நீண்ட வரிசைகள் காத்திருந்து மருந்து வாங்கி சென்றதை காண முடிந்தது. மேலும் மருந்துகள் வழங்க குறைவான மருத்துவ அதிகாரிகளே இருந்ததால் அங்கு கூச்சலும் குழப்பமும் நிலவியது.

Advertisment

ரெம்டிசிவிர் மருந்து வாங்க, மருத்துவரின் பரிந்துரை (புகைப்பட நகல் அல்ல அசல்), மருத்துவமனையின் பெயர், நோயாளியின் ஆர்டி-பி.சி.ஆர் சோதனை அறிக்கையின் நகல், ஆதார் அட்டையின் நகல் (நோயாளி மற்றும் கொள்முதல் செய்பவர்) மற்றும் சி.டி ஸ்கேன் அறிக்கையின் புகைப்பட நகல் போன்ற ஆவணங்கள் கண்டிப்பாக தேவை என்றும் தெரிவிக்கப்பட்டது.

தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகத்தின் (டி.என்.எம்.எஸ்.சி) மருத்துவமனை கவுண்டர்கள் கடந்த திங்கள்கிழமை திறக்கப்பட்ட நிலையில், ரெம்டிசிவிர் மருந்து மருத்துவமனைகளில் கிடைக்கவில்லை என்றும், அதன் சில்லறை விலையை மூன்று முதல் நான்கு மடங்கு கறுப்புச் சந்தையில் விற்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த திங்கள்கிழமை கூட்டம் அதிகமாக இருப்பதாக புகார்களைத் தொடர்ந்து, செவ்வாய்க்கிழமைக்குள் நிலைமைகள் மேம்படும் என்று டி.என்.எம்.எஸ்.சி அதிகாரிகள் உறுதியளித்திருந்தனர்.

இந்த நிலையில், முந்தைய நாள் டோக்கன் பெற்றவர்கள் அதிகாலை 4 மணி முதல் கூட துவங்கினர். மேலும் காலை 10 மணிக்கு கவுண்டர் திறப்பதற்கு முன்பே வரிசை பெருகியது. பில்லிங் மற்றும் சரிபார்ப்பைக் கவனித்துக்கொள்வதற்கு ஒரு சில அதிகாரிகள் மட்டுமே நியமிக்கப்பட்டிருந்ததால், ஒரு நபர் மருந்துகளைப் பெற 20 நிமிடங்களுக்கு மேல் ஆனது. ஆன்லைன் அல்லது அட்டை கொடுப்பனவுகள் இல்லாதது நிலைமையை மோசமாக்கியது. நீண்ட நேரம் வரிசையில் நின்றபின் கவுண்டரை அடைந்த பலர் பணம் இல்லாததால் வெறுங்கையுடன் வெளியேற வேண்டியிருந்தது.

"நாங்கள் விவரங்களைப் பெற்று அவற்றை சரிபார்க்க வேண்டும். அட்டை கட்டணத்தை நாங்கள் அனுமதித்தால், பில்லிங் விவரங்களை நாங்கள் புதுப்பிக்க வேண்டியிருக்கும் என்பதால், இது அதிக நேரம் எடுக்கும். எனவே இந்த செயல்முறையை விரைவாகச் செய்ய நாங்கள் பணம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறோம், ”என்று கவுண்டருக்கு அருகிலுள்ள அதிகாரி ஒருவர் கூறினார்.

திங்களன்று மருந்து பெறாத பலர் செவ்வாய்க்கிழமை மீண்டும் வரிசையில் நின்றனர். இவர்களில் தாண்டையர் பேட்டையில் வசிக்கும் பிலால், புதுடெல்லியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாமாவுக்கு மருந்து பெற காத்திருந்தார்.

"என் மாமாவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அவர் டெல்லியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது மருத்துவமனையில் ரெம்டிசிவிர் பற்றாக்குறை இருந்தது, எனவே இங்கிருந்து மருந்து பெறும்படி அவர் என்னிடம் கேட்டுக்கொண்டார். நான் நேற்று வந்தேன், ஆனால் 75 டோக்கன்கள் மட்டுமே விநியோகிக்கப்பட்டன. இன்று எனக்கு மருந்து கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காலை 8 மணி முதல் நிற்கிறேன்" என்று பிலால் கூறினார்.

திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்த மற்றொரு நபர், தனது பெற்றோருக்கு மருந்து வாங்க வந்ததாக கூறினார்.

“அவர்களிடம் ரெம்டிசிவிர் இல்லை என்று மருத்துவமனை எங்களிடம் கூறியது. எங்கள் ஊரில் உள்ள அனைத்து முக்கிய மருந்துக் கடைகளிலும் நாங்கள் தேடினோம், ஆனால் அதைப் பெற முடியவில்லை. எங்களுக்கு மருந்து கிடைத்தால், எனது பெற்றோரின் உடல்நிலை மேம்படும் என்று மருத்துவமனை கூறியது. கீழ்பாக்கில் உள்ள இந்த கவுண்டரைப் பற்றி நான் அறிந்தேன், இன்று காலை இங்கு வந்து சேர்ந்தேன் ”என்று கூறினார்.

முன்னதாக செவ்வாய்கிழமையன்று, சுகாதார செயலாளர் ஜே.ராதாகிருஷ்ணன், "அனைவருக்கும் ரெம்டிஸ்விர் மற்றும் பிற மருந்துகள் தேவையில்லை என்றும், மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் மட்டுமே அவற்றை வாங்க வேண்டும் என்றும் கூறினார். கீழ்பாக்கம் மருத்துவ கல்லூரியில் உள்ள கவுண்டர்களை அதிகரிக்கவும், திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர், மதுரை, சேலம், வேலூர், திண்டிகுல், நாகர்கோயில் போன்ற பிற முக்கிய நகரங்களிலும் இந்த மருந்து கிடைக்க அவர்கள் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறினார். மேலும் கருப்பு சந்தைகளில் விற்பவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  " (https://t.me/ietamil)

Tamilnadu Covid 19 Tamilnadu Covid Cases Remdesivir
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment