Chennai News Updates: ”பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தது பழனிசாமிக்கு தேவையற்ற சுமை”

Tamil Nadu News Update Today 28 June 2025 இன்றைய செய்திகள் அனைத்தையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

Tamil Nadu News Update Today 28 June 2025 இன்றைய செய்திகள் அனைத்தையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Seeman Pre

Today Latest News Update in Tamil 28 June 2025:பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.

  • Jun 28, 2025 22:25 IST

    சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை

    சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. வடபழனி, ஈக்காட்டுத்தாங்கல் உள்ளிட்ட பகுதிகளிலும், புறநகர்ப் பகுதிகளான பூந்தமல்லி, செம்பரம்பாக்கம், திருமழிசை, காட்டுப்பாக்கம், நசரத்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.



  • Jun 28, 2025 22:01 IST

    அரியானா, ஜம்மு-காஷ்மீரில் திடீர் நிலநடுக்கம்

    ஜம்மு-காஷ்மீரின் உள்ள ஜம்மு பகுதியில் இன்று திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இரவு 7.36 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 9 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 32.96 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 74.71 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை. அரியானாவில் உள்ள மகேந்திரகர் பகுதியில் இன்று திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இரவு 7.33 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 2.8 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.



  • Advertisment
  • Jun 28, 2025 21:40 IST

    "பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தது பழனிசாமிக்கு தேவையற்ற சுமை"

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காரைக்குடியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியை பற்றி சிந்திக்க எனக்கு நேரமில்லை. அவர்கள் முடிவெடுத்து சேர்ந்திருக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரையில் எடப்பாடி பழனிசாமி இந்தியாவை யார் ஆள்வது என்பதில் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்திருந்தால் அது அவருக்கு பலனை தந்திருக்கும். தமிழ்நாட்டை யார் ஆள்வது என்பதில் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தது அவருக்கு தேவையற்ற சுமை என்றார். 



  • Jun 28, 2025 21:37 IST

    நாளை மறுநாள் சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம்

    சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மேயர் ஆர். பிரியா தலைமையில், பெருநகர சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் 30.06.2025 அன்று திங்கட்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறும். 27.06.2025 அன்று நடைபெறுவதாக இருந்த சென்னை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் தவிர்க்க முடியாத நிர்வாக காரணங்களால், 30.06.2025 அன்று திங்கட்கிழமை காலை 10.00 மணிக்கு,மேயர் பிரியா தலைமையில் மாநகராட்சி மன்றக் கூடத்தில் நடைபெற உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • Advertisment
    Advertisements
  • Jun 28, 2025 21:09 IST

    பூவை ஜெகன் மூர்த்தியை பிடிக்க சிபிசிஐடி போலீசார் தீவிரம்

    ஆள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக உள்ள பூவை ஜெகன்மூர்த்தியை பிடிக்க சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் சிபிசிஐடி போலீசார் தீவிரம் காட்டியுள்ளனர். உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமின் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், உச்சநீதிமன்றத்தில் ஜெகன்மூர்த்தி முன் ஜாமின் கோரியுள்ளார். அவரை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.



  • Jun 28, 2025 20:43 IST

    தடையை மீறி மயோனைஸ்? - உணவு பாதுகாப்புத்துறை முடிவு

    தமிழகத்தில் உள்ள அசைவ உணவகங்களில், முட்டையின் வெள்ளைக் கருவை பயன்படுத்தி 'மயோனைஸ்' தயாரிக்கப்படுகிறது. ஷவர்மா மற்றும் பர்கர் போன்ற உணவுப் பொருட்களில் 'மயோனைஸ்' அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில், 'மயோனைஸ்'க்கு ஓராண்டு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதில், உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் இருப்பதால் தடை விதிப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலையில், மயோனைஸுக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டாலும் ஒருசில இடங்களில் இன்னும் மயோனைஸ் பயன்படுத்தப்பட்டு வருவதாக தெரிகிறது. இதனை தடுக்க உணவு பாதுகாப்புத்துறை சார்பில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தடையை மீறி மயோனைஸ் பயன்படுத்தும் கடையின் உரிமத்தை ரத்து செய்து அபராதம் விதிக்க உணவு பாதுகாப்புத்துறை முடிவு செய்துள்ளது.



  • Jun 28, 2025 20:00 IST

    பிரக்ஞானந்தாவுக்கு முதலமைச்சர் வாழ்த்து

    உலக செஸ் மாஸ்டர்ஸ் கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவின் முதன்மை வீரராக விளங்கும் பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்துக்கள் என கூறினார். உஸ்பெக்கிஸ்தானில் நடந்த உலக செஸ் மாஸ்டர்ஸ் கோப்பை போட்டியில் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்றார்.



  • Jun 28, 2025 20:00 IST

    நாம் என்ன தீக்குச்சியா? 'உதயசூரியன்' - மு.க.ஸ்டாலின் பேச்சு

    ஊதினால் அணைய நாம் என்ன தீக்குச்சியா? உதயசூரியன் என திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அடக்க நினைத்தால், நம் மண், மொழி, மானத்தைக் காப்பாற்ற ஒன்றாக நின்று எதிர்ப்போம். இதுதான் தமிழர்களின் தனிக்குணம்; ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தின் நோக்கமும் இதுதான். ஓரணியில் தமிழ்நாடு” என்ற common DP-யை கட்டாயம் வைத்துக் கொள்ளுங்கள். வாட்சாப், ஃபேஸ்புக், இன்ஸ்டா, எக்ஸ் உள்ளிட்ட வலைதளங்களில் கட்டாயம் வைத்துக் கொள்ளுங்கள் என்றும் அறிவுறுத்தினார்.



  • Jun 28, 2025 19:29 IST

    காசாவில் இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் – 34 பேர் பலி

    காசா மீது இஸ்ரேல் ராணுவம் மீண்டும் நடத்திய தாக்குதலில் 34 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. காசாவின் பல பகுதிகளில் உள்ள முகாம்கள், குடியிருப்பு கட்டடங்கள் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல் – காசா மோதலை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் முயற்சி செய்து வருகின்றன.



  • Jun 28, 2025 19:28 IST

    அரசுப் பள்ளி உணவில் பல்லி - நயினார் நாகேந்திரன் கேள்வி

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகேயுள்ள அரசுப் பள்ளியில் வழங்கப்பட்ட காலை உணவில் பல்லி கிடந்ததாகவும், அதை உட்கொண்ட நாற்பது மாணவர்களுள் நான்கு மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் வெளியாகியுள்ள செய்தி வேதனையளிக்கிறது. ஏழைக் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவில் இத்தனை அலட்சியம் ஏன் என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். தேசியக் கல்விக் கொள்கையில் உள்ள காலை உணவு திட்டத்தின் மீது தி.மு.க. ஸ்டிக்கர் ஒட்டினால் மட்டும் போதாது அதை முறையாகவும் செயல்படுத்த வேண்டுமென முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை வலியுறுத்தி உள்ளார்.



  • Jun 28, 2025 19:08 IST

    27 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

    தமிழகத்தில் 27 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், தருமபுரி, சேலம், நாமக்கல், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் மிதமான இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தென்காசி, தேனி, திண்டுக்கல் மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • Jun 28, 2025 19:00 IST

    ஜெகன்மூர்த்தி முன் ஜாமீன் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு

    சிறுவன் கடத்தல் வழக்கில் விசாரணையை நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. இதில் பூவை ஜெகன்மூர்த்தி தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த நிலையில் பூவை ஜெகன்மூர்த்தி முன் ஜாமீன் கோரி தற்போது சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்துள்ளார்.



  • Jun 28, 2025 18:36 IST

    சாம்பியன் பட்டம் வென்ற அக்‌ஷியா நந்தினிக்கு உற்சாக வரவேற்பு

    முதல் ஜூனியர் ரோல் பால் உலகக் கோப்பை 2025, கென்யாவின் நைரோபியில் ஜூன் 25 முதல் ஜூன் 27, 2025 வரை நடைபெற்றது. இந்தியா, கென்யா, இலங்கை மற்றும் பிற நாடுகள் உட்பட 15க்கும் மேற்பட்ட நாடுகள் இந்த நிகழ்வில் பங்கேற்றன. இறுதிப் போட்டியில், இந்தியா கென்யாவை எதிர்கொண்டு 5-0 என்ற கணக்கில் ஆதிக்கம் செலுத்தி சாம்பியன் ஆனது. இதில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஏ.ஒய். அக்‌ஷியா நந்தினி உலகக் கோப்பையில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். சென்னை மீனம்பாக்கம் திரும்பிய அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது



  • Jun 28, 2025 18:17 IST

    'ரா' உளவு அமைப்பின் புதிய தலைவராக பராக் ஜெயின் நியமனம்

    இந்தியாவின் 'ரா' உளவு அமைப்பின் தலைவராக பதவி வகித்து வரும் ரவி சின்ஹாவின் பதவிக்காலம் 30-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்த நிலையில் 'ரா' உளவு அமைப்பின் புதிய தலைவராக பராக் ஜெயின் ஐ.பி.எஸ். நியமனம் செய்யப்பட்டுள்ளார். 'ரா' உளவு அமைப்பின் தலைவராக ஜூலை 1-ம் தேதி பதவியேற்கும் பராக் ஜெயின் 2 ஆண்டுகளுக்கு அந்த பதவியில் நீடிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 1989-ம் ஆண்டு ஐ.பி.எஸ். அதிகாரியாக பணியில் சேர்ந்த பராக் ஜெயின், ரா உளவு அமைப்பில் பல ஆண்டுகளாக பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



  • Jun 28, 2025 18:11 IST

    இந்திய வீரர் சுபான்ஷு சுக்லாவுடன் மோடி கலந்துரையாடல்

    சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள இந்திய வீரர் சுபான்ஷு சுக்லாவுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். ஆக்சியம் 4 திட்டம் மூலம் சுபான்ஷு சுக்லா சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றுள்ளார். சர்வதேச விண்வெளி நிலையத்தில் 14 நாட்கள் தங்கியிருந்து ஆராய்ச்சி செய்ய உள்ளார்.



  • Jun 28, 2025 18:10 IST

    ”2047-ல் இந்தியா அனைத்து துறைகளிலும் முதலிடம் பெற வேண்டும்”

    2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை சிறந்த தேசமாக மாற்ற பிரதமர் மோடி உறுதிபூண்டுள்ளார் . நம் அனைவருக்கும் முக்கியமான விஷயம். நாடு சுதந்திரத்தின் நூற்றாண்டு விழாவை கொண்டாடும்போது, உலகின் அனைத்துத் துறைகளிலும் இந்தியா முதலிடம் பெற வேண்டும் என்ற உறுதி மொழியை நமது இளைஞர்களும், குழந்தைகளும் எடுக்க வேண்டும் என குஜராத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.



  • Jun 28, 2025 18:06 IST

    12 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

    தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. கள்ளக்குறிச்சி, கடலூர், சேலம், நீலகிரி, கோவை, திண்டுக்கல், பெரம்பலூரில் மழைக்கு வாய்ப்பு. மதுரை, சிவகங்கை, தேனி, தென்காசி, நெல்லை மாவட்டங்களிலும் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.



  • Jun 28, 2025 18:04 IST

    சென்னை அடுத்த தாம்பரத்தில் விமான விபத்து மீட்பு ஒத்திகை

    அகமதாபாத் விமான விபத்து போல் ஏற்பட்டால், உடனடியாக எடுக்க வேண்டிய பாதுகாப்பு மற்றும் மீட்பு நடவடிக்கை குறித்த ஒத்திகை நிகழ்ச்சி சென்னை தாம்பரத்தில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் (ஓ.டி.ஏ.) இன்று நடைபெற்றது. விமானம் போல தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டிருந்த மாதிரி உருவம் தீப்பிடித்தவுடன் அதை தீயணைப்பு வீரர்கள் தண்ணீர் பீய்ச்சி இணைப்பதையும், பயணிகளை பாதுகாப்பாக மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதுபோலவும் ஒத்திகை பார்க்கப்பட்டது. இதுவொரு ஒத்திகை நிகழ்ச்சியாக இருந்தாலும், திடீரென பார்த்தவர்களுக்கு ஏதோ விமானம் தீப்பிடித்து எரிந்துவிட்டதோ? என்று எண்ணத் தோன்றியது. இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.



  • Jun 28, 2025 17:40 IST

    பணி ஓய்வு நாளில் சஸ்பெண்ட்

    இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி ஆணையராக இருக்கும் ரங்கநாயகி, இன்று பணி ஓய்வு பெற இருந்த நிலையில் தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன்பு காரைக்குடி நகராட்சியில் பணிபுரிந்தபோது இவர் மீது எழுந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நகராட்சி அதிகாரிகள் தகவல்.



  • Jun 28, 2025 17:39 IST

    ராமதாஸ் தலைமையில் தைலாபுரத்தில் சமூக ஊடகப் பிரிவு ஆலோசனை கூட்டம்

    இன்று அன்புமணி ராமதாஸ் தலைமையில் பாட்டாளி மக்கள் கட்சியின் சமூக ஊடகப் பிரிவு ஆலோசனை கூட்டம் நடைபெற்ற நிலையில், நாளை பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் தைலாபுரத்தில் சமூக ஊடகப் பிரிவு ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.



  • Jun 28, 2025 17:34 IST

    நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்- சீமான்

    நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவை தவிர வேறு யாரும் போதைப்பொருள்களை பயன்படுத்தவில்லையா?

    இந்தியா முழுவதும் போதைப்பொருள் பயன்பாடு உள்ளது. சினிமா வட்டாரத்தில் நடக்கும் கொக்கைன் விருந்துகள் குறித்து பாடகி சுசித்ரா கூட பேசியிருக்கிறார்- சீமான்



  • Jun 28, 2025 16:51 IST

    தமிழக அரசுக்கு ரூ.1 லட்சம் அபராதம்

    சிறுபான்மை கல்வி நிறுவனத்தில் உருது பாட ஆசிரியர் நியமனத்துக்கு ஒப்புதல் வழங்கும் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்த தமிழக அரசுக்கு ரூ.1 லட்சம் அபராதம்  விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

    தமிழ்நாடு அரசு அபராத தொகையை சம்பந்தப்பட்ட பள்ளிக்கு நான்கு வாரங்களில் வழங்கவும் உத்தரவு



  • Jun 28, 2025 16:49 IST

    வால்பாறை சட்டமன்றத் தொகுதி காலி

    வால்பாறை சட்டமன்றத் தொகுதி காலியானதாக அறிவித்தது தமிழ்நாடு சட்டப்பேரவை செயலகம்.

    வால்பாறை அதிமுக எம்.எல்.ஏ அமுல் கந்தசாமி, கடந்த 21ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.



  • Jun 28, 2025 15:53 IST

    அண்ணா பல்கலை. மாணவி புகார்: முன்னாள் காதலன் கைது

    தன்னோடு நெருக்கமாக இருந்த புகைப்படங்களைக் காட்டி மிரட்டுவதாக முன்னாள் காதலன் மீது அண்ணா பல்கலை. மாணவி அளித்த புகாரில் ராம்குமார் என்பவர் கைது

    முன்னாள் காதலன் நடவடிக்கை சரியில்லாததால் மாணவி காதலை துண்டித்ததால் , காதலன் அண்ணா பல்கலை. வளாகத்தின் உள்ளே புகுந்து மாணவியை தாக்கியதாக புகாரில் தகவல்



  • Jun 28, 2025 15:32 IST

    அன்பில் மகேஸ் பேட்டி

    பள்ளிக்கு வரும் குழந்தைகளுக்கு முற்போக்கு கருத்துக்களை கூற வேண்டும்... மத அடையாளங்களுடன் வர வேண்டும் என கூறுவதை பின்போக்குத் தனம் என கூறினேன். மத நம்பிக்கையில் யாரும் தலையிடப்போவது இல்லை ஆனால், அதை கட்டாயப்படுத்தக் கூடாது"
    - அன்பில் மகேஸ் பேட்டி



  • Jun 28, 2025 15:31 IST

    பாமக சமூக ஊடக பிரிவு கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேச்சு

    "திமுக தான் பாமகவிற்கு எதிரி  - திமுகவிற்கு எதிராக பிரச்சாரம் செய்ய வேண்டும். விசிகவிற்கும் காங்கிரஸ் கட்சிக்கும் ராமதாஸ் மீது திடீர் பாசம் ஏன்? பாமக நிறுவனர் ராமதாஸ் மீது விசிக தலைவர் திருமாவளவனுக்கு ஏன் திடீர் அன்பு? வன்னி அரசு, ரவிக்குமார், சிந்தனை செல்வனுக்கு ஏன் ராமதாஸ் மீது திடீர் அன்பு? என்றைக்காவது ஒருநாள் ராமதாஸை திருமாவளவன் புகழ்ந்து பேசி இருக்கிறாரா? -இப்போது ஏன் புகழ்கிறார்?

    தமிழக காங். தலைவர் செல்வப் பெருந்தகைக்கு  ராமதாஸ் மீது திடீர் பாசம் ஏன் ஏற்பட்டது? இவையெல்லாம் திமுகவின் சூழ்ச்சி - இது குறித்து எல்லாம் யோசிக்க வேண்டும்"
    - பாமக சமூக ஊடக பிரிவு கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேச்சு



  • Jun 28, 2025 15:31 IST

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பந்து வீச்சு தேர்வு

    TNPL 2025 - மதுரை அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பந்து வீச்சு தேர்வு



  • Jun 28, 2025 14:36 IST

    ராமதாஸ் மீது காங்கிரஸ், வி.சி.கவுக்கு திடீர் பாசம் ஏன்? - அன்புமணி கேள்வி

    ராமதாஸ் மீது காங்கிரஸ், வி.சி.கவுக்கு திடீர் பாசம் ஏன்? என்று அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார். அதன்படி, "ராமதாஸ் மீது வன்னி அரசு, ரவிக்குமார், சிந்தனை செல்வனுக்கு ஏன் திடீர் அன்பு ஏற்பட்டுள்ளது. எப்போதாவது ராமதாஸை, திருமாவளவன் புகழ்ந்து பேசி இருக்கிறாரா? இப்போது, ஏன் புகழ்ந்து பேசுகிறார்? ராமதாஸை, செல்வப்பெருந்தகை ஏன் திடீரென சந்திக்க வேண்டும்? இவை அனைத்தும் தி.மு.க-வின் சூழ்ச்சி" என்று அவர் தெரிவித்துள்ளார்.



  • Jun 28, 2025 14:11 IST

    பைக்கில் இருந்து விழுந்து பெண் உயிரிழப்பு

    வண்டலூர் - கேளம்பாக்கம் சாலையில் இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்து பெண் ஒருவர் உயிரிழந்தார். யு-டர்ன் போடும் போது வாகனத்தில் இருந்து விழுந்ததாக கூறப்படும் நிலையில், இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



  • Jun 28, 2025 13:55 IST

    நிச்சயமாக இனி தி.மு.க ஆட்சிக்கு வர முடியாது - நயினார் நாகேந்திரன்

    தமிழகத்தில் இனி நிச்சயமாக தி.மு.க ஆட்சிக்கு வர முடியாது என்று பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். மேலும், தமிழகத்தின்ற்கு தி.மு.க வேண்டாம் என்ற அடிப்படையில் தேர்தல் பணியாற்ற இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.



  • Jun 28, 2025 13:37 IST

    கேரளாவில் நாய் கடித்து சிறுவன் உயிரிழப்பு

    கேரள மாநிலம், கண்ணூரில் வெறிநாய் கடித்ததில், சேலத்தைச் சேர்ந்த தம்பதியின் 5 வயது மகன் உயிரிழந்தான். வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை வெறிநாய் கடித்ததால் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்தான்.



  • Jun 28, 2025 13:09 IST

    சென்னையில், மழைநீர் சேமிப்பு திட்டத்தில் ஜெர்மன் தொழில்நுட்பம் அறிமுகம்

    இந்தியாவில் முதன்முறையாக சென்னையில் மழைநீர் சேமிப்பு கலன்கள் ஜெர்மன் தொழில்நுட்ப முறையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, 8 மைதானங்களில் 40 லட்சம் லிட்டர் நீரை சேமித்து வைக்கும் "கேட்ச் பிட்" முறையை, கட்டடங்கள், பூங்காக்களில் உருவாக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. மேலும், 770 பூங்காக்களில் 3000 லிட்டர் கொள்ளளவில் நிலத்தடி மழைநீர் சேகரிப்பு தொட்டி மற்றும் 250 பூங்காக்களில் மழைநீர் சேகரிப்பு தொட்டி கட்டமைப்பு பணிகள் நிறைவுபெற்றன. 



  • Jun 28, 2025 12:53 IST

    ஓசூரில் மாணவன் இயக்கிய டிராக்டர் மோதி முதியவர் பலி..!!

    ஒசூர் அடுத்த அஞ்செட்டி பகுதியில் பள்ளி மாணவன் ஓட்டிச் சென்ற டிராக்டர் மோதி முதியவர் உயிரிழந்தார். விவசாயி சரவணனின் 17 வயது மகன் ஓட்டிச் சென்ற டிராக்டர் மோதி முதியவர் காளியப்பன் பலியானார். டிராக்டர் மோதி படுகாயம் அடைந்த இளைஞர் குமார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.



  • Jun 28, 2025 12:52 IST

    வனவிலங்கு பட்டியலில் காட்டுப்பன்றியை நீக்குக: துரை வைகோ கோரிக்கை

    வன விலங்குகள் பட்டியலில் இருந்து காட்டுப்பன்றியை ஒன்றிய அரசு நீக்க வேண்டும் என துரை வைகோ எம்.பி கோரிக்கை வைத்துள்ளார். வன விலங்கு பட்டியலில் இருந்து நீக்கினால் மட்டுமே காட்டுப்பன்றியை கட்டுப்படுத்த முடியும் என தெரிவித்தார்.



  • Jun 28, 2025 12:30 IST

    மதவாத சக்திகளுக்கு தமிழ்நாடும், தமிழ்நாட்டு மக்களும் இடமளிக்க மாட்டார்கள்: சு.வெங்கடேசன்

    மதவாத சக்திகளுக்கு தமிழ்நாடும், தமிழ்நாட்டு மக்களும் இடமளிக்க மாட்டார்கள் என சு.வெங்கடேசன் எம்.பி தெரிவித்துள்ளார். பெரியார், அண்ணாவை அவமதிப்பது தமிழ்நாட்டை அவமதிப்பது போன்றது.



  • Jun 28, 2025 12:29 IST

    கேரளாவில் போலீஸ் வாகனங்களை சேதப்படுத்திய கும்பல் கைது..!!

    கேரளா மாநிலம் திருச்சூரில் காவல்துறை வாகனங்களை அடித்து நொறுக்கிய போதை கும்பல் கைது செய்யப்பட்டது. வாகனங்கள் சேதப்படுத்தியதை தட்டிக்கேட்ட போலீசாரை தாக்கிய போதை கும்பலைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர்.



  • Jun 28, 2025 12:01 IST

    விவசாயத்திற்கான நீருக்கு வரியா? - மத்திய அரசு வேண்டுகோள்

    விவசாயிகள் பயன்படுத்தும் நீருக்கு வரி விதிக்கப்படுவதாக வெளியாகும் தகவலில் உண்மையில்லை. நீருக்கு வரி விதிப்பது தொடர்பாக மத்திய அரசு எந்த அறிவுறுத்தலும் வழங்கவில்லை. மத்திய நீர்வளத் துறை அமைச்சர் சி.ஆர்.பட்டீல் ஏற்கெனவே விரிவான விளக்கம் அளித்துவிட்டார். வெளிப்படைத்தன்மையை கருதியும், தவறான தகவல் பரப்பப்படுவதை தடுக்கவும் இந்த விளக்கம் நீர்வளத் துறை அமைச்சகம். விவசாயிகளிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் இதுபோன்ற தகவல்களை வெளியிட வேண்டாம் என மத்திய அரசு வேண்டுகோள்



  • Jun 28, 2025 11:59 IST

    வால்பாறை, கந்தர்வகோட்டையில் தலா 4 செ.மீ. மழை பதிவு

    தமிழ்நாட்டில் அதிகபட்சமாக நேற்று வால்பாறை, கந்தர்வகோட்டையில் தலா 4 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. சோலையாறு, சின்கோனா, சின்னக்கல்லாறு, நத்தம் பகுதியில் தலா 3 செ.மீ. மழை பெய்துள்ளது.



  • Jun 28, 2025 11:20 IST

    திரிபுரா பா.ஜ.க தலைவர் தேர்தல் ஒத்தி வாய்ப்பு 

    நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருந்த பா.ஜ.க-வின் திரிபுரா பிரிவுத் தலைவர் பதவிக்கான தேர்தல் மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக பா.ஜ.கவின் உள் தேர்தல்களின் தேர்தல் அதிகாரி சமரேந்திர சந்திர தேப் தெரிவித்தார். 

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாரதிய ஜனதா கட்சியின் திரிபுரா பிரதேச மாநிலத் தலைவர் தேர்தல் மறுஅறிவிப்பு வெளியிடப்படும் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது,” என்று தெரிவித்தார்.

     



  • Jun 28, 2025 10:46 IST

    ஜூலை 1 முதல் ஓரணியில் தமிழ்நாடு என்ற உறுப்பினர் சேர்க்கையை - தொடங்கி வைக்கும் ஸ்டாலின்

    ஜூலை 1 முதல் ஓரணியில் தமிழ்நாடு என்ற உறுப்பினர் சேர்க்கையை நான் தொடங்கி வைக்கிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக தொண்டர்கள் மக்களைக் கொண்டு ஓரணியில் தமிழ்நாட்டை கட்டமைப்பார்கள். 2026ல் மீண்டும் திமுக ஆட்சியை அமைப்பதில் முனைப்புடன் செயலாற்ற வேண்டும். பாராட்டுகளில் மட்டும் மயங்கிடாமல், விமர்சனங்களையும் வரவேற்கிறேன். கட்சியினரின் மனக்குரலை அறியவே ‘உடன்பிறப்பே வா’ எனும் நிர்வாகிகள் சந்திப்பு நடைபெறுகிறது. மதவாத பிரிவினையை உருவாக்குவோருக்கும், துணைபோகும் துரோகிகளுக்கும் தமிழ்நாட்டில் இடமில்லை என தொண்டர்களுக்கு முதல்வர் கடிதம் எழுதி உள்ளார்.



  • Jun 28, 2025 10:38 IST

    சென்னை ஐ.ஐ.டி-யில் மாணவிக்கு பாலியல் தொல்லை - தமிழக டி.ஜி.பி-க்கு மகளிர் ஆணையம் கடிதம்

    சென்னை ஐ.ஐ.டி-யில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் தொடர்பாக ஐ.ஐ.டி வளாக உணவகத்தில் பணிபுரியும் வடமாநில இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து தமிழ்நாடு டி.ஜி.பி-க்கு தேசிய மகளிர் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. 



  • Jun 28, 2025 10:29 IST

    சாய் சரவணனின் அமைச்சர் பதவி ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டது- முதல்வர் ரங்கசாமி பேட்டி

    "புதுச்சேரி அமைச்சரவையில் இருந்து சாய் சரவணன் தன்னை விடுவிக்க வேண்டும் என்று கேட்டிருந்தார். அதன் கடிதத்தை நம்முடைய ஆளுநரிடம் கொடுத்தோம். அதை அவர் ஏற்றுக்கொண்டார். அவர் ராஜினாமா ஏற்கப்பட்டது. ராஜினாமா செய்தது, அவர்களின் கட்சி விவகாரம். நியமன‌ எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா குறித்து நான் ஏதும் கருத்து சொல்ல முடியாது" என்று முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார். 



  • Jun 28, 2025 09:38 IST

    மகாராஷ்டிராவில் இந்தி திணிப்புக்கு எதிராக எதிர்கட்சிகள் பேரணி

    மகாராஷ்டிராவில் இந்தி திணிப்புக்கு எதிராக உத்தவ் தாக்ரே மற்றும் ராஜ் தாக்ரே இருவரும் கூட்டாக பேரணி அறிவித்துள்ளனர். வரும் ஜூலை 5-ந் தேதி நடைபெற உள்ள பேரணிக்கு, சரத்பவார் கட்சியும் ஆதரவு தெரிவித்துள்ளது. அரசு பள்ளிகளில் 1-5 ம் வகுப்பு வரை 3-வது மொழியாக இந்தி கற்பிக்கப்படும் என்று மாநில அரசு உத்தவிட்டதை தொடர்ந்து எதிர்ப்புகள் எழுந்துள்ளது.



  • Jun 28, 2025 09:05 IST

    154 பேருடன் சென்னை புறப்பட்ட மும்பை விமானம் நடு வானில் இயந்திர கோளாறு

    மும்பையில் இருந்து 148 பயணிகள், 6 விமான ஊழியர்களுடன் 154 பேருடன் நேற்று நள்ளிரவு, சென்னை புறப்பட்ட ஏர் இந்தியா பயணிகள் விமானம், நடு வானில் இயந்திர கோளாறு ஏற்பட்டு, மீண்டும் அவசரமாக மும்பைக்கு திரும்பி சென்று தரை இறங்கியது!  அதன்பின்பு பயணிகள், வேறு விமானத்திற்கு மாற்றப்பட்டு, இன்று காலை, சென்னை வந்து சேர்ந்தது.



  • Jun 28, 2025 08:42 IST

    பாஜக நியமன எம்எல்ஏ பதவிக்கு 3 பேரின் பெயர்கள் பரிந்துரை

    பாஜக நியமன எம்எல்ஏ பதவிக்கு  தீப்பாய்ந்தான்,‌ செல்வம், காரைக்கால் ராஜசேகர் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டு பெயர் பட்டியல் ஒன்றிய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  ஏற்கனவே இருந்த பாஜக நியமன எம்எல்ஏக்கள் ராமலிங்கம், அசோக் பாபு, வெங்கடேசன் ஆகியோர் கட்சி மேலிடம் அறிவுறுத்தல் பேரில் நேற்று மாலை ராஜினாமா செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது! 



  • Jun 28, 2025 08:41 IST

    அதிகாலையில் கார் கவிழ்ந்து விபத்து

    சென்னை அடையார் சிக்னல் அருகே இன்று அதிகாலை கார் ஒன்று கவிழ்ந்து விபத்து. நல்வாய்ப்பாக, யாருக்கும் காயம் ஏற்படவில்லை, விபத்துக்கான காரணம் குறித்து போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



  • Jun 28, 2025 08:35 IST

    தேவைப்பட்டால் ஈரான் மீது மீண்டும் குண்டு வீசப்படலாம்: அதிபர் டிரம்ப் 

    தேவைப்பட்டால் ஈரான் மீது மீண்டும்  குண்டு வீசுவது குறித்து யோசிப்பேன்.  அமெரிக்காவின் தாக்குதலில் ஈரானின் அணுசக்தி தளவாடங்கள் முற்றிலும் அழிந்துவிட்டன என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.



  • Jun 28, 2025 07:57 IST

    சென்னை மெட்ரோ ரயில் பணியில் கம்பி விழுந்து விபத்து: ஊழியர் காயம்

    சென்னை கோயம்பேட்டில் மெட்ரோ ரயில் கட்டுமான பணியின்போது கம்பி விழுந்து விபத்து ஏற்பட்டதில், ஊழியர் காயமடைந்தார். கான்கிரிட்டிற்கு போடப்படும் இரும்பு ராடு  திடீரென விழுந்ததால் விபரீதம், காயம் அடைந்த ஊழியர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



  • Jun 28, 2025 07:50 IST

    TNPL - இன்று 2 லீக் போட்டிகள்

    டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடரில் இன்று மதியம் 3.15 மணிக்கு தொடங்கும் 
    போட்டியில் சேப்பாக் vs மதுரை. இரவு 7.15 மணிக்கு தொடங்கும் மற்றொரு போட்டியில் கோவை - சேலம் அணிகள் மோதுகின்றன. 



  • Jun 28, 2025 07:50 IST

    5 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை: வானிலை மையம்

    தமிழகத்தில், கோவை, குமரி, நெல்லை, தென்காசி, தேனியில் காலை 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக, வானிலை மையம்  தெரிவித்துள்ளது,



Tamil News Live Update

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: