Chennai News Highlights: இந்தியைத் திணிக்கும் முயற்சி ஒருபோதும் வெற்றி பெறாது - சு.வெங்கடேசன்

Tamil Nadu News Update: செய்திகள் அனைத்தையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

Tamil Nadu News Update: செய்திகள் அனைத்தையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Su Venkatesan MP

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.

  • Jun 29, 2025 21:21 IST

    ‘இந்தியைத் திணிக்கும் முயற்சி ஒருபோதும் வெற்றி பெறாது... மீண்டும் பணிந்தது மராட்டிய அரசு’ - சு.வெங்கடேசன்

    "மூன்றாம் மொழியாக இந்தியைத் திணிக்கும் முடிவு ரத்து செய்யப்பட்டுள்ளது. மீண்டும் பணிந்தது மராட்டிய அரசு; இந்தியாவை ஹிந்தியாவாக மாற்ற நினைக்கும் பா.ஜ.க.வின் முயற்சி ஒருபோதும் வெற்றி பெறாது” என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.



  • Jun 29, 2025 20:36 IST

    ‘பா.ஜ.க.வுடனான கூட்டணி ஸ்டாலினுக்கு பொறுக்கவில்லை’ - எடப்பாடி பழனிசாமி தாக்கு

    தமிழ்நாட்டில் அ.தி.மு.க.வின் அரசியல் வியூகம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்ததற்கு எதிர்க்கட்சித் தலைவரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி तीண்டமான பதிலடி கொடுத்துள்ளார்.   “பா.ஜ.க.வுடனான கூட்டணி என்பதை முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பொறுத்துக்கொள்ள முடியவில்லை” என்று அவர் தெரிவித்தார்.

    சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, "நாங்கள் யாருடன் கூட்டணி வைத்திருந்தால் உங்களுக்கு என்ன கவலை? ஸ்டாலினுக்கு பயம் வந்துவிட்டது. வாக்குகள் சிதறாமல் இருக்கவும், தி.மு.க.வை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்காகவுமே கூட்டணி வைத்துள்ளோம்," என்று ஆவேசமாகப் பேசினார்.



  • Advertisment
  • Jun 29, 2025 19:35 IST

    கீழடி முடிவு வெளியானால் பா.ஜ.க அரசியல் செய்ய முடியாது - ராஜீவ்காந்தி 

    தி.மு.க மாணவர் அணி செயலாளர் ராஜீவ் காந்தி, “கீழடி ஆய்வை ஏன் வெளியிட மறுக்கின்றனர்? கீழடி முடிவு வெளியானால் பா.ஜ.க அரசியல் செய்ய முடியாது. உலகின் மூத்த மொழி தமிழ் என நிரூபிக்கப்படும். உண்மையிலேயே அக்கறை இருந்தால் தமிழ்நாட்டில் இருந்து ஆய்வை தொடங்கட்டும். இந்தியாவின் வரலாற்றை தமிழ்நாட்டில் இருந்து எழுத முயற்சி செய்யுங்கள் என்றுதான் கூறுகிறோம்” என்று கூறினார்.



  • Jun 29, 2025 19:10 IST

    பூரி ஜெகநாதர் ரத யாத்திரையில் சோகம்: கூட்ட நெரிசலில் 3 பேர் பலி

    பூரி, ஒடிசா - புகழ்பெற்ற ஜெகநாதர் ரத யாத்திரை விழாவில் பெரும் சோகம் ஏற்பட்டது. ஞாயிற்றுக்கிழமை அதிகாலை குண்டிச்சா கோவிலுக்கு வெளியே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் மூன்று பேர் உயிரிழந்தனர் மற்றும் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அதிகாலை 4 மணி அளவில் சடங்குப் பொருட்களை ஏற்றிச் சென்ற வாகனம் கூட்டத்திற்குள் நுழைந்ததே இந்த விபத்துக்குக் காரணம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவத்தின்போது போதுமான காவல்துறை ஏற்பாடுகள் இல்லாததே இந்த அலட்சியத்துக்குக் காரணம் என்று நேரில் பார்த்தவர்கள் குற்றம் சாட்டினர்.



  • Advertisment
    Advertisements
  • Jun 29, 2025 17:44 IST

    அவசரமாகத் தரையிறங்கிய இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம்

    சென்னையில் இருந்து ஹைதராபாத் புறப்பட்ட இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதை அடுத்து, அவசர அவசரமாக சென்னையிலேயே மீண்டும் தரையிறக்கப்பட்டது. விமானம் பத்திரமாக தரையிறங்கியதால் 159 பயணிகள், 6 விமான ஊழியர்கள் என 165 பேர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.



  • Jun 29, 2025 17:35 IST

    ”இலங்கை கடற்படை அத்துமீறல் தொடராமல் தடுக்க வேண்டும்”

    தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது நடப்பாண்டிலும் தொடரக் கூடாது என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். ஒவ்வொரு முறையும் மீனவர்கள் கைது செய்யப்படும் போதெல்லாம், அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது கடமையை முடித்துக் கொள்கிறார். மீனவர்கள் நலனில் அவருக்கு அக்கறை இல்லை என்பதையே அவரது செயல்பாடுகள் காட்டுகின்றன என்று குறிப்பிட்டுள்ளார்.



  • Jun 29, 2025 17:17 IST

    பரந்தூர் நிலங்களுக்கான விலை நிர்ணயம் செய்து அரசாணை

    பரந்தூர் விமான நிலைய திட்டத்தில் கையகப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ள நிலங்களுக்கான விலை நிர்ணயம் செய்து அரசாணை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. 3331.25 ஏக்கர் பரப்பிலான நிலங்களுக்கு ஏக்கருக்கு ரூ.35 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.2.57 கோடி வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலையின்படி கையகப்படுத்தப்பட உள்ள நிலத்தின் அளவைப் பொறுத்து இழப்பீடு நிர்ணயம் செய்யப்படும்.



  • Jun 29, 2025 16:44 IST

    காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்க: தவெக

    சிவகங்கையில் விசாரணைக்கு அழைத்து செய்யப்பட்ட இளைஞர் மரணத்தில் போலீஸாரை கைது செய்ய தவெக வலியுறுத்தி உள்ளது.  தவறிழைத்த காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும்; மக்கள் தேர்வு செய்தவர்களின் ஆட்சி நடக்கிறதா அல்லது காவல் துறை ஆட்சி நடக்கிறதா என சந்தேகம் எழுந்துள்ளதாக தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் கூறி உள்ளார்.



  • Jun 29, 2025 16:39 IST

    ஜெகன் மூர்த்திக்கு நெருக்கமானவர்களிடம் சிபிசிஐடி தீவிர விசாரணை

    சிறுவன் கடத்தல் வழக்கில் முன் ஜாமீன் தள்ளுபடி ஆன நிலையில் குடும்பத்துடன் தலைமறைவாக உள்ள கே.வி.குப்பம் எம்எல்ஏ ஜெகன் மூர்த்தியை கைது செய்ய 4 தனிப்படைகள் அமைத்து சிபிசிஐடி போலீசார் தேடி வருகின்றனர். மேலும், அவர்கள் குறித்த தகவல்களை சேகரிக்க உறவினர்கள் மற்றும் நெருக்கமானவர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் முன் ஜாமின் கோரிய பூவை ஜெகன் மூர்த்தியின் மேல்முறையீட்டு மனுவை நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம். நீதிபதிகள் மனோஜ் மிஸ்ரா மற்றும் கோட்டீஸ்வர் சிங் அமர்வு விசாரிக்கிறது.



  • Jun 29, 2025 16:38 IST

    5 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

    தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, தென்காசி, மதுரை, திண்டுக்கல் மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • Jun 29, 2025 16:38 IST

    மதிமுக நிர்வாகக்குழு கூட்டத்தில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றம்

    மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகக் குழுக் கூட்டம், கழக அவைத் தலைவர் ஆடிட்டர் அர்ஜுனராஜ் தலைமையில், இன்று சென்னை, எழும்பூரில் உள்ள தலைமைக் கழகம் தாயகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, கழகப் பொருளாளர் மு.செந்திலதிபன், கழக முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி. மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 



  • Jun 29, 2025 16:19 IST

    ”பூரி ஜெகன்நாதரின் பக்தர்களிடம் மன்னிப்பு கோருகிறேன்”

    பூரி கூட்ட நெரிசலில் சிக்கி 3 பக்தர்கள் உயிரிழந்த சம்பவத்திற்காக ஜெகன்நாதரின் பக்தர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக 'எக்ஸ்' தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;- "சாரதாபலி கோவிலில் மகாபிரபுவை ஒரு முறையாவது நேரில் காண வேண்டும் என்ற தீவிர ஆவலுடன் பக்தர்கள் இருந்ததால் ஏற்பட்ட தள்ளுமுள்ளு மற்றும் கூட்ட நெரிசல் காரணமாக ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம் நிகழ்ந்தது. தனிப்பட்ட முறையில், நானும் எனது அரசாங்கமும் ஜெகன்நாதரின் பக்தர்கள் அனைவரிடமும் மன்னிப்பு கோருகிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.



  • Jun 29, 2025 16:13 IST

    ”நிலத்தடி நீருக்கு வரி விதிக்கும் முடிவை திரும்பப் பெற வேண்டும்”

    வேளாண்மைக்கு பயன்படுத்தும் நிலத்தடி நீருக்கு வரி விதிக்கும் முடிவை திரும்பப் பெற வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார். இந்திய பெருநாட்டில் மிகப்பெரிய பஞ்சத்திற்கும் - பேரழிவிற்கும் வழிவகுக்கும் வேளாண்மைக்கு பயன்படுத்தும் நிலத்தடி நீருக்கு வரி விதிக்கும் முடிவை பா.ஜ.க. அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டுமென வலியுறுத்துகிறேன். இல்லையென்றால், வரிக்கொடுமைகள் தாங்காது அல்லற்பட்டு ஆற்றாது அழும் நாட்டு மக்களின் கண்ணீரே இக்கொடிய ஆட்சியை வீழ்த்தும் பேராயுதமாகிவிடும் என எச்சரிக்கின்றேன் என்று தனது அறிக்கையில் சீமான் தெரிவித்துள்ளார்.



  • Jun 29, 2025 15:53 IST

    தி.மு.க. கூட்டணி கட்சிகள் பிரிவதற்கு வாய்ப்பு உள்ளது: எச்.ராஜா

    திருச்சியில் பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் . அவர் கூறியதாவது, தமிழகத்தில் போலீசார் கஞ்சா வழக்கு போடுகின்றனர். ஆனால் இதுவரை ஒரு கிராம் கூட சிந்தடிக் ட்ரக் பயன்படுத்தியதாக எந்த வழக்கும் பதியப்படவில்லை. இந்தியாவில் அதிகமான அளவில் போதைப் பொருள் பயன்படுத்தும் மாநிலமாக பஞ்சாப் தான் இருந்தது. தற்பொழுது தமிழகம் முதலிடத்தில் உள்ளது.தி.மு.க. கூட்டணியில் இருக்கும் கட்சிகள் பிரிவதற்கு வாய்ப்பு உள்ளது.வைகோ அதிக சீட்டு கேட்டார் என்பதற்காக அவரது கட்சியை தி.மு.க உடைக்க தொடங்கியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.



  • Jun 29, 2025 15:52 IST

    ”வேளச்சேரி-பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை நவம்பரில் துவங்கும்”

    வேளச்சேரியில் இருந்து பரங்கிமலைக்கு பறக்கும் ரயில் சேவை வரும் நவம்பர் மாதம் துவக்கப்படும் என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் உறுதியளித்துள்ளார். ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆலந்தூர், ஆதம்பாக்கம், நங்கநல்லூர் பகுதி மக்களின் குறை தீர்க்கும் முகாம் நேற்று நங்கநல்லூரில் நடைபெற்றது



  • Jun 29, 2025 15:50 IST

    உத்தரகாண்ட்: நிலச்சரிவில் சிக்கி தொழிலாளர்கள் 9 பேர் மாயம்

    உத்தரகாண்டின் யமுனோத்ரி நெடுஞ்சாலையில் சிலாய் பந்த் பகுதியில் ஓட்டல் ஒன்றின் கட்டுமான பணி நடந்து வருகிறது. இதில், 19 முதல் 20 தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் அந்த பகுதியில் காலை 6 மணியளவில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், முகாமில் தங்கியிருந்த தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர். எனினும், அதிர்ஷ்டவசத்தில் அவர்களில் 10 பேர் மீட்கப்பட்டு விட்டனர். 9 பேரை காணவில்லை. நெடுஞ்சாலையில் 10 முதல் 12 மீட்டர் நீளமுள்ள பகுதி வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டது. இதனை தொடர்ந்து மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் போலீசார் கூட்டாக இணைந்து மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.



  • Jun 29, 2025 15:49 IST

    வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

    இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 8 மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகையும் பாதுகாப்பாக மீட்டுக் கொண்டு வருவதை உறுதி செய்யவும். மீன்பிடி தொடர்பான பிரச்னைகளைக் கையாள்வதில், கட்டுப்பாடு மற்றும் பரஸ்பர புரிதலை உறுதி செய்வதற்கு இலங்கை அதிகாரிகளுடன் உரிய தூதரக நடவடிக்கைகளை முன்னெடுக்க வலியுறுத்தியும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (29.06.2025) கடிதம் எழுதியுள்ளார். 



  • Jun 29, 2025 15:24 IST

    கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு ரூ.25 லட்சம் நிவாரணம்

    ஒடிசாவில் ரத யாத்திரை கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் பலியான விவகாரத்தில், பூரி டி.சி.பி. மற்றும் காவல் அதிகாரி அஜய் பதி ஆகிய இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். பூரி கலெக்டர் சித்தார்த் சங்கர் மற்றும் எஸ்.பி. வினீத் அகர்வால் ஆகியோரையும் இடமாற்றம் செய்யப்பட்டனர். கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.25 லட்சம் வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் மோகன் சரண் மாஜி அறிவித்துள்ளார்.



  • Jun 29, 2025 15:12 IST

    இளைஞர் மரணம்: ஸ்டாலின் பதவி விலக வேண்டும் - அன்புமணி

    தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த 4 ஆண்டுகளில் 28 பேர் காவல்நிலையங்களில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு ம்ர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். இதைவிட கொடுமையான மனித உரிமை மீறல்கள் இருக்க முடியாது. சாத்தான்குளத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்கள் கொலை செய்யப்பட்டபோது,''பேய் ஆட்சி செய்தால் பிணந்திண்ணும் சாத்திரங்கள் என்பதை இந்த படுகொலை நினைவுபடுத்துகின்றன. இதற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று அப்போது ஸ்டாலின் வலியுறுத்தி இருந்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மனசாட்சி இருந்தால், 5 ஆண்டுகளுக்கு வலியுறுத்தியதைப்போல இப்போது பதவி விலக வேண்டும் என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறி உள்ளார்.



  • Jun 29, 2025 14:42 IST

    போலீஸ் விசாரணையில் தி.மு.க-வினருக்கு ராஜமரியாதை அளிக்கப்படுகிறது - அண்ணாமலை

    போலீஸ் விசாரணையில் தி.மு.க-வினர் யாரும் தாக்கப்படுவதில்லை என்று முன்னாள் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். குறிப்பாக, போலீஸ் விசாரணையில் தி.மு.க-வினருக்கு ராஜமரியாதை அளிக்கப்படுகிறது என்றும், சிறு குற்றங்களில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படும் அப்பாவிகள் மீது கடும் தாக்குதல் நடத்தப்படுகிறது என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.



  • Jun 29, 2025 14:22 IST

    திருப்புவனம் இளைஞர் உயிரிழப்பு சம்பவம் - இ.பி.எஸ் கண்டனம்

    திருப்புவனம் இளைஞர் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். அதன்படி, "திருப்புவனம் காவல் நிலையத்தில் திருக்கோவில் காவலாளி அஜித் குமார் மரணம் அடைந்த நிகழ்வு குறித்து முழு உண்மையை வெளி கொண்டுவர உடனடியாக மாவட்ட நீதிபதி தலைமையில்  குழு அமைத்து, முழு விசாரணை நடத்தி, இந்த மரணத்திற்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும், மேலும் இறந்தவர் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.



  • Jun 29, 2025 13:51 IST

    வீட்டு மின் இணைப்புகளுக்கு கட்டண உயர்வு கிடையாது - அமைச்சர் சிவசங்கர்

    வீட்டு மின் இணைப்புகளுக்கு கட்டண உயர்வு கிடையாது என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். முன்னதாக, 3.16 சதவீதம் மின் கட்டணத்தை உயர்த்த மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரைத்த நிலையில், அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார். மேலும், 100 யூனிட் இலவச மின்சாரம் உள்ளிட்ட அனைத்து சலுகைகளும் தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



  • Jun 29, 2025 13:24 IST

    பா.ஜ.க, இந்து முன்னணிக்கு ம.தி.மு.க கண்டனம்

    பா.ஜ.க, இந்து முன்னணிக்கு ம.தி.மு.க சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, "தமிழ்நாட்டு மக்களின் சமய நம்பிக்கையை அரசியல் சுய லாபத்திற்காக பயன்படுத்த நினைக்கும் பா.ஜ.க-வின் முயற்சிகள் தகர்ந்து தவிடு பொடியாகும்" என்று தெரிவிக்கப்படுள்ளது. மேலும், முருக பக்தர்கள் மாநாட்டில் பெரியார், அண்ணா, கலைஞரை விமர்சித்து வீடியோ வெளியிட்டதற்கு கண்டனம் தெரிவித்து ம.தி.மு.க நிர்வாகக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



  • Jun 29, 2025 13:12 IST

    சங்க இலக்கியத்தின் வாழ்வியல், அறிவியல்பூர்வமாக நிரூபணம் - ஸ்டாலின்

    கீழடி ஆய்வில் கிடைக்கப்பெற்ற மண்டை ஓடுகளின் அடிப்படையில், 3டி தொழில்நுட்பம் மூலமாக 2500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர்களின் முகங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து, "சங்க இலக்கியம் சொற்களால் வடித்த வாழ்வியல் எல்லாம் அறிவியல்வழி நிறுவப்பட்ட சான்றாகக் கீழடி-யில்!" என்று முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.



  • Jun 29, 2025 13:07 IST

    தி.மு.க ஆட்சியில் காவல் நிலையத்திற்கு செல்பவர்களுக்கு கூட பாதுகாப்பு இல்லை - நயினார் நாகேந்திரன்

    தி.மு.க ஆட்சியில் காவல் நிலையத்திற்கு செல்பவர்களுக்கு கூட பாதுகாப்பு இல்லை என பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். மேலும், "திருப்புவனத்தில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞர் இறந்தது அதிர்ச்சி அளிக்கிறது. காவல் துறையின் அராஜகத்திற்கு மேலும் பல உயிர்கள் பலியாகும் முன் முதல்வர் தலையிட வேண்டும். இறந்தவரின் மரணத்திற்கு தக்க நியாயம் பெற்றுத் தர வேண்டும்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.



  • Jun 29, 2025 12:42 IST

    புதுச்சேரி பா.ஜ.க தலைவராகிறார் ராமலிங்கம்

    புதுச்சேரியின் பா.ஜ.க மாநில தலைவராக, ராமலிங்கம் போட்டியின்றி தேர்வாகிறார். தலைவர் பதவிக்கு காலை 10 மணி முதல் 12 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், ராமலிங்கத்தை தவிர வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாத காரணத்தினால், போட்டியின்றி அவர் தேர்வு செய்யப்பட இருக்கிறார். அதன்படி, மாநில தலைவராக நாளை மதியம் அதிகாரப்பூர்வமாக ராமலிங்கம் பதவி ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



  • Jun 29, 2025 12:08 IST

    கூட்டணி ஆட்சி என்ற கருத்துக்கு பிரேமலதா வரவேற்பு

    தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைந்தால் வரவேற்கத்தக்கது; எத்தனையோ மாநிலங்களில் கூட்டணி ஆட்சி சாத்தியமாகி உள்ளது. என்.டி.ஏ தலைமையில் கூட்டணி ஆட்சி என்று கூறப்படும் நிலையில் அந்த கருத்துக்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வரவேற்றுள்ளார்.



  • Jun 29, 2025 11:28 IST

    பதவிக்கு ஆசைப்படாதவர் ராமதாஸ் - பாமக எம்எல்ஏ அருள்

    எந்த பதவிக்கும் ஆசைப்படாதவர் ராமதாஸ்; 36 ஆண்டுகளாக நான் பாமக நிறுவனர் ராமதாசுடன் பயணித்து வருகிறேன். ராமதாஸை இழிவுப்படுத்துவதாகக் கூறி பாட்டாளி வர்த்தகத்தை அன்புமணி இழிவுப்படுத்திவிட்டார். ராமதாஸுக்கு இழிவு ஏற்படும்போது பார்த்துக் கொண்டு இருக்க மாட்டோம் என அருள் பேட்டி அளித்துள்ளார்.



  • Jun 29, 2025 10:40 IST

    இயந்திரக் கோளாறு - தாய்லாந்து விமானம் ரத்து

    சென்னையில் இருந்து தாய்லாந்து செல்லவிருந்த விமானம் திடீர் ரத்தானது. நள்ளிரவில் தாய்லாந்தில் இருந்து சென்னை வந்த தாய் ஏர்வேஸ் விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதாக விமானி தகவல் தெரிவித்த நிலையில் விமானம் ரத்து செய்யப்பட்டதை அடுத்து 164 பயணிகள் விடுதிகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.



  • Jun 29, 2025 10:14 IST

    கூட்டணி அமைச்சரவை - தெளிவுபடுத்த கோரிக்கை

    அதிமுக தலைமையில் கூட்டணி ஆட்சியா என்பதை எடப்பாடி பழனிசாமி தெளிவுப்படுத்த வேண்டும். தமிழிசை, ஜி.கே.வாசன் போன்றோரின் கருத்தும் கூட்டணி அமைச்சரவையை உறுதி செய்வதாகவே உள்ள என கே.சி. பழனிசாமி கூறினார்.



  • Jun 29, 2025 10:06 IST

    தமிழில் மந்திரங்கள் ஓதி குடமுழுக்கு - சேகர்பாபு

    திருச்செந்தூர் கோயிலில் தமிழில் மந்திரங்களை ஓதி குடமுழுக்கு நடத்தப்படும். ஏற்கனவே மருதமலை, வயலூர், பழனி கோயில்களில் தமிழில் குடமுழுக்கு நடத்தப்பட்டன என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார். 



  • Jun 29, 2025 10:05 IST

    டெலிவரி பாய் கொலை - மாமியார் கைது

    சென்னையில் உணவு டெலிவரி ஊழியர் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த மாமியார் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 15ம் தேதி உணவு டெலிவரி ஊழியர் கலையரசன் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.  கலையரசன் கொலை வழக்கில் மனைவி தமிழரசி, மைத்துனர்கள் சஞ்சய், சக்திவேல், மற்றும் சுனில் குமார் ஆகியோர் ஏற்கனவே கைதான நிலையில் தலைமறைவாக இருந்த மாமியார் சந்தியாவும் கைது 



  • Jun 29, 2025 10:02 IST

    இந்திய அணி 2வது முறையாக டி20 உலக கோப்பையை கைப்பற்றிய நாள் இன்று

    17 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி 2வது முறையாக டி20 உலக கோப்பையை கைப்பற்றிய நாள் இன்று!

    கடந்தாண்டு இதே நாளில் நடந்த இறுதிப்போட்டியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று ஒட்டுமொத்த நாட்டையும் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியது இந்திய அணி!



  • Jun 29, 2025 10:02 IST

    பூரி ஜெகன்நாதர் கோவில் ரதயாத்திரையின் போது 3 பேர் மரணம்

    பூரி ஜெகன்நாதர் கோவில் ரதயாத்திரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் மரணமடைந்தனர். மேலும் இந்த சம்பவத்தின்போது 50-க்கு மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.



  • Jun 29, 2025 08:20 IST

    எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் இன்றுடன் நிறைவு

    எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. எம்.பி.பி.எஸ். படிப்புக்கு விண்ணப்பிக்க கடந்த 6-ந் தேதி தொடங்கியது. இதுவரை 70 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ள நிலையில், இன்று மாலையுடன் அவகாசம் நிறைவு பெறுகிறது.



  • Jun 29, 2025 08:17 IST

    உலகளவில் ஈட்டி எறிதல் தரவரிசை: நீரஜ் சோப்ரா மீண்டும் முதலிடம்

    உலகளவில் ஈட்டி எறிதல் தரவரிசை பட்டியலில், இந்தியாவின் தங்க மகன் நீரஜ் சோப்ரா 1445 புள்ளிகள் பெற்று மீண்டும் முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளார்.



  • Jun 29, 2025 08:14 IST

    கோயம்பேடு பிரதான சாலையில் குழாய் உடைந்து சாலையில் தேங்கிய கழிவுநீர்

    சென்னை கோயம்பேடு பிரதான சாலையில் கழிவுநீர் குழாய் உடைந்து பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீரால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளது.



  • Jun 29, 2025 07:46 IST

    இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா அபாரம்!

    இந்தியா இங்கிலாந்து மகளிர் அணிக்ளுக்கு எதிரான முதல் டி20 போட்டியில், முதலில் பேட் செய்த இந்திய அணி 210 ரன்கள் குவித்தது. 211 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியை 113 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆக்கி அசத்தல்.



  • Jun 29, 2025 07:45 IST

    டி.என்.பி.எல் - இன்று இரண்டு போட்டிகள்

    டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடரில் இன்று திண்டுக்கல்லில் மாலை 3.15 மணிக்கு நடைபெறும் லீக் போட்டியில் நெல்லை - திருப்பூர் அணிகள் மோத உள்ள நிலையில், இரவு 7.15 மணிக்கு நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் திண்டுக்கல் - திருச்சி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.



Tamilnadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: