Tamil News Highlights: நா.த.க விற்கு புதிய சின்னம் - இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு

இன்றைய அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

இன்றைய அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Court orders to file case against seeman

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

மதுரை விமான நிலையத்தில் 4 அடுக்கு பாதுகாப்பு: இந்தியா-பாக்., போர் பதற்றத்தையொட்டி, மத்திய அரசின் உத்தரவின்படி மதுரை விமான நிலையத்தில் 4 அடுக்கு பாதுகாப்பு நடவடிக்கை பலப்படுத்தப்பட்டுள்ளன. விமான நிலைய வெளி வளாகம், வாகன காப்பகம், பிரதான நுழைவாயில் தீவிர கண்காணிப்பில் உள்ளன. அனைத்து வாகனங்களும் சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றன. 

  • May 10, 2025 20:08 IST

    சிந்து நதி நீரை நிறுத்தியதில் மாற்றமில்லை: இந்தியா திட்டவட்டம்

     

    போர் நிறுத்தத்திற்கு பாகிஸ்தானிடம் இருந்தே அழைப்பு வந்தது

    போர் நிறுத்தத்திற்கு முன்போ அல்லது பின்போ எந்த நிபந்தனைக்கும் இந்தியா உட்படவில்லை

    சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்திய முடிவில்
    எந்த மாற்றமும் இல்லை

    - இந்திய வெளியுறவு அமைச்சகம்



  • May 10, 2025 20:07 IST

    இந்தியா - பாகிஸ்தான் போர்  நிறுத்தம் - முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு

    தாக்குதல் நிறுத்தம் வரவேற்கத்தக்க நடவடிக்கை, அமைதி நிலைத்திருக்கட்டும்  இந்திய ராணுவத்திற்காக தமிழ்நாடு ஒற்றுமையுடன் அணிவகுப்பு பேரணி நடத்தியது. இந்திய எல்லையை காக்கும் வீரர்களின் துணிச்சலுக்கு சல்யூட் என்றும் முதல்வர் ஸ்டாலின் பதிவு



  • Advertisment
    Advertisements
  • May 10, 2025 17:55 IST

    ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி பாராட்டு

    இந்திய ராணுவத்திற்கு ஆதரவாக பேரணி நடத்தியதற்காக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, ஆளுநர் ஆர்.என். ரவி பாராட்டு தெரிவித்துள்ளார். குறிப்பாக, "இந்திய ராணுவத்திற்கு ஆதரவாக ஒற்றுமையாகவும், உறுதியாகவும் துணை நிற்பது, பயங்கரவாதத்தின் அனைத்து முனைகளையும் அழித்தொழித்து, தேசிய இறையாண்மையை பாதுகாப்பதற்கான நமது ஈடுபாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது" என்று அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.



  • May 10, 2025 17:23 IST

    இந்திய ராணுவத்திற்கு ஆதரவாக ஸ்டாலின் தலைமையில் பேரணி

    பாகிஸ்தான் தாக்குதல்களை எதிர்கொள்ளும் இந்திய ராணுவத்திற்கு ஆதரவாக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் பேரணி நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



  • May 10, 2025 16:52 IST

    சிறப்பு ரயில்கள், விமானங்களை இயக்க கோரிக்கை

    வட மாநிலங்களில் இருந்து தமிழர்கள் சொந்த மாநிலம் திரும்ப சிறப்பு ரயில்கள், விமானங்களை இயக்க ரயில்வே மற்றும் விமான அமைச்சகங்களுக்கு அயலகத் தமிழர் நல வாரிய தலைவர் கடிதம்



  • May 10, 2025 15:58 IST

    கிரிவலம் - திருவண்ணாமலையில் தீவிர சோதனை

    கிரிவலத்தையொட்டி, திருவண்ணாமலை பேருந்து நிலையம், ரயில் நிலையத்தில், மக்கள் அதிகம் கூடும் பல்வேறு பகுதிகளிலும், வெடிகுண்டு நிபுணர் குழுவினர் சோதனை



  • May 10, 2025 15:57 IST

    இந்திய படைகளுக்கு ஆதரவாக ஸ்டாலின் தலைமையில் பேரணி

    பாகிஸ்தானின் தாக்குதலை துணிவுடன் எதிர்கொள்ளும் இந்திய படைகளுக்கு ஆதரவாக, சென்னையில் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் பேரணி சற்று நேரத்தில் தொடங்க உள்ளது.



  • May 10, 2025 15:10 IST

    அமைச்சர் நாசர் பேட்டி

    "போர் பதற்றம் அதிகரித்துள்ளதால் எங்களை மீட்க வேண்டும் என மாணவர்கள் செய்தி அனுப்பி இருந்தார்கள். அதனைக் கண்ட மு.க.ஸ்டாலின், உடனடியாக அவர்களை மீட்டு வர உத்தரவிட்டார்.."
    ஜம்மு காஷ்மீர் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட மாணவர்களை வரவேற்று, அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தார் அமைச்சர் நாசர்



  • May 10, 2025 14:59 IST

    உலக அமைதிக்காக 85,000 காகித புறாக்கள்

    உலக அமைதிக்காக 85,000 காகித புறாக்கள் செய்து சேலம் அரசு பொறியியல் கல்லூரி மாணவ-மாணவியர் சாதனை படைத்துள்ளார். 



  • May 10, 2025 13:49 IST

    குடியரசு தலைவரின் சபரிமலை பயணம் ரத்து

    இந்தியா - பாகிஸ்தான் பதற்றத்தால் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் சபரிமலை பயணம் ரத்து செய்ய்யப்பட்டது. மே.19ம் தேதி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சபரிமலை ஐயப்பன் கோயிலில் சாமி தரிசனம் செய்ய திட்டமிட்டிருந்தார்



  • May 10, 2025 13:39 IST

    உதகையில் ரோஜா கண்காட்சி

    உதகையில் இன்று முதல் 3 நாட்களுக்கு ரோஜா கண்காட்சி நடைபெற்று வருகிறது. 



  • May 10, 2025 13:31 IST

    மக்கள் வீட்டிற்குள்யே இருக்க அறிவுறுத்தல்

    ராஜஸ்தானின் ஜெய்சால்மரில் மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்க காவல்துறை அறிவுறுத்துகிறது. கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளதுடன், வாகன நடமாட்டமும் நிறுத்தப்பட்டுள்ளது



  • May 10, 2025 13:01 IST

     வாகனங்களை வேகமாக இயக்கினால் ஓட்டுநர் உரிமம் ரத்து - கலெக்டர் அதிரடி  

    தனியார் பள்ளி வாகனங்களை வேகமாக இயக்கினால் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என தஞ்சை ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தஞ்சை காவலர் ஆயுதப் படை பயிற்சி மைதானத்தில் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்தபின் ஆட்சியர் பேட்டி அளித்தார்.



  • May 10, 2025 12:07 IST

    ராணுவத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் பேரணி : சென்னையில் போக்குவரத்து மாற்றம்

    பாகிஸ்தானின் அத்துமீறல்களுக்கும், தீவிரவாத தாக்குதல்களுக்கும் எதிராக வீரத்துடன் போர் நடத்தி வரும் இந்திய ராணுவத்திற்கு ஒன்றுபட்ட ஒற்றுமையையும், ஆதரவையும் வெளிப்படுத்தும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் இன்று (10.05.2025) மாலை 5 மணிக்கு பேரணி நடைபெறுகிறது. இப்பேரணி காமராஜர் சாலையில் உள்ள காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்திலிருந்து தொடங்கி, நேப்பியர் பாலம் அருகிலுள்ள போர் நினைவுச்சின்னம் வரை நடைபெறுகிறது. இப்பேரணியில் அமைச்சர் பெருமக்கள், முன்னாள் படை வீரர்கள், பொதுமக்கள், மாணவர்கள் என சுமார் 25,000 நபர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே பின்வரும் போக்குவரத்து மாற்றங்கள் மாலை 16.00 மணி முதல் 18.00 மணி வரை செயல்படுத்தப்படும்.

    போக்குவரத்து மாற்றங்கள்

    1. திருவான்மியூரில் இருந்து காமராஜர் சாலை வழியாக பாரிஸை நோக்கி வரும் வாகனங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. அதற்கு பதிலாக, அவர்கள் தங்கள் இலக்கை அடைய சர்தார் படேல் சாலை காந்தி மண்டபம் சாலை அண்ணாசாலையைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதேபோல், பாரிஸில் இருந்து திருவான்மியூர் செல்லும் வாகனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மாறாக, அவர்கள் தங்களுடைய இலக்கை அடைய அண்ணாசாலை தேனாம்பேட்டை காந்தி மண்டபம் வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

    2. அண்ணா சிலையிலிருந்து வரும் MTC பேருந்துகள் வெலிங்டன் சந்திப்பு → ஜிபி சாலை→ டவர் கிளாக்ஜிஆர்எச் பாயிண்ட் ராயப்பேட்டை ஹை ரோடு → லாயிட்ஸ் சாலை ஜம்புலிங்கம் தெரு ஆர்.கே.சாலை வி.எம். தெரு, மந்தைவெளி மயிலாப்பூர் வழியாக சென்று மத்திய கைலாஷ் சந்திப்பை அடையலாம்.

    3. இதேபோல் கிரீன்வேஸ் பாயிண்டில் இருந்து வரும் வாகனங்கள் மந்தைவெளி R.A.புரம் 2வது பிரதான சாலை, TTK சாலை, RK 1160060, அண்ணாசாலை வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

    வணிக வாகனங்கள் காமராஜர் சாலை, அண்ணாசாலை, சாந்தோம் நெடுஞ்சாலை, ஆர்.கே.சாலை, கதீட்ரல் சாலை, வாலாஜா சாலையில் 1200 மணி முதல் 2100 மணி வரை தடை செய்யப்பட்டுள்ளது.

    வாகன நிறுத்தத்திற்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள்:

    1. காந்தி சிலை அருகாமையில் காமராஜர் சாலையில் பங்கேற்பாளர்களை இறக்கிவிடும் அனைத்து வாகனங்களும், சுவாமி சிவானந்த சாலை, தீவுத்திடல் மைதானம், ராணி மேரி கல்லூரி, மெரினா சர்வீஸ் சாலை, லூப் சாலை, லேடி வெல்லிங்டன் கல்லூரி, ஸ்கௌட் மைதானம் நிறுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    2. பங்கேற்பாளர்களுக்காக பொதுப்பணித்துறை மைதானத்தில் கூடுதல் வாகன நிறுத்துமிடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    3. விஜபி வாகனங்கள் தங்கள் வாகனங்களை நிறுத்த கொடிமர இல்ல சாலை வழியாக தீவுத்திடல் மைதானத்திற்குள் நுழையலாம்.
    4. பொது வாகன ஓட்டிகள் காமராஜர் சாலையைத் தவிர்த்து மாற்றுப் பாதையில் தங்கள் பயணத்தை திட்டமிட அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    வாகன ஓட்டிகள் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

     



  • May 10, 2025 10:55 IST

    பாகிஸ்தான் என்ற நாடு வரைபடத்தில் இருக்காது - அண்ணாமலை

    பாகிஸ்தான் என்ற நாடு வரைபடத்தில் இருக்காது. நாம் அவ்வளவு பலமாக இருக்கிறோம். நாம் நினைத்தால் ஒன்றும் இல்லாமல் பண்ணி விடலாம். ஆனால் அறத்தின் அடிப்படையில் போர் தொடுத்து வருகிறோம். சசிதரூர் எம்பி, இந்திய அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார். பாகிஸ்தானை எதிர்ப்பதில் அனைவரும் ஒன்றாக இருக்கிறார்கள். தமிழகத்தில் முதலமைச்சர் ராணுவ வீரர்களுக்காக முன்னெடுக்கும் பேரணி வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில் முதலமைச்சரும் இந்திய அரசுக்கு இந்த நேரத்தில் தனது முழு ஒத்துழைப்பை கொடுக்க வேண்டும்" என்று அண்ணாமலை கூறினார்.



  • May 10, 2025 10:37 IST

    பஞ்சாப் மாநிலத்திலிருந்து சென்னை வந்தடைந்த மாணவர்கள்

    பஞ்சாப் மாநில எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், பாதுகாப்பு கருதி, பஞ்சாப் மாநிலம் ஜலந்தரிலிருந்து புறப்பட்ட 5 தமிழக மாணவர்கள் இன்று காலை விமானம் மூலம் சென்னை வந்தனர். இன்று காலை சென்னை விமான நிலையம் வந்தடைந்த மாணவர்களை அவர்களது பெற்றோர் வரவேற்றனர்.



  • May 10, 2025 10:34 IST

    திருச்செந்தூர் கோவிலில் உண்டியல் வருமானம் ரூ.3.22 கோடி

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் உண்டியல் வருமானம் மாதந்தோறும் எண்ணப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று கோவில் வசந்த மண்டபத்தில் உண்டியல்கள் திறந்து எண்ணும் பணி நடந்தது. இதில் ரூ.3 கோடியே 22 லட்சத்து 12,735-ஐ பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். மேலும் 1.37 கிலோ தங்கம், 51 கிலோ 100 கிராம் வெள்ளி மற்றும் வெளிநாட்டு பணம் 980-ம் காணிக்கையாக செலுத்தப்பட்டு இருந்தது.




  • May 10, 2025 10:15 IST

    ”முரளி நாயக்கின் வீர மரணத்தை நாடு ஒருபோதும் மறக்காது”

    ஆபரேஷன் சிந்தூரில்' வீரமரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர் (ஜவான்) முரளி நாயக்கின் தியாகத்தை இந்திய தேசம் ஒருபோதும் மறக்காது, ஜம்மு காஷ்மீர் எல்லையில் எதிரி படைகளை எதிர்த்து போராடி வீர மரணம் அடைந்த முரளி நாயக்கின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன். ஆந்திரப்பிரதேஷ் மாநிலம் ஸ்ரீ சத்ய சாய் மாவட்டம், சுல்லி தண்டாவைச் சேர்ந்த இந்த இளம் ஜவான், நாட்டின் பாதுகாப்புக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டு போர்க்களத்தில் தியாகியானார். இந்த மாவிரனின் பெற்றோரான ஜோதி பாய். ஸ்ரீராம் நாயக் மற்றும் பிற குடும்ப உறுப்பினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆந்திர மாநில அரசு குடும்பத்திற்கு அனைத்து ஆதரவையும் வழங்கும் என தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • May 10, 2025 10:13 IST

    போக்குவரத்துக்கு இடையூறாக பேனர் - வழக்குப்பதிவு

    கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியில், போக்குவரத்துக்கு இடையூறாக பேனர் வைத்த தவெகவின் கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜ்குமார் உள்ளிட்ட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.



  • May 10, 2025 10:12 IST

    1,750 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் - ஒருவர் கைது

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்த பள்ளக்குழி அருகே குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை போலீசார் தீவிர வாகன சோதனையில், ஆயிரத்து 750 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. கடத்தலுல் ஈடுபட்ட சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்த ஜெகதீசன் (42) என்பவர் கைது செய்யப்பட்டார்.



  • May 10, 2025 10:11 IST

    மழைநீர் வடிகால்வாயில் சிக்கிய தண்ணீர் டேங்கர் லாரி

    சென்னை துரைப்பாக்கம்-நீலாங்கரை இணைப்பு சாலையில் மாருதி நகர் பிரதான சாலையில் சென்ற போது லாரியின் ஒரு பகுதி மழை நீர் வடிகால்வாயில் சிக்கி சாலையில் பள்ளம் ஏற்பட்டு மண்ணுக்குள் புதைந்தது. ஒரு மணி நேரம் போராடி கிரேன் மூலம் லாரியை அப்புறப்படுத்தினர்.



  • May 10, 2025 09:54 IST

    இலங்கைக்கு கடத்த முயன்ற 175 கஞ்சா பறிமுதல்

    இலங்கைக்கு கடத்துவதற்காக மண்டபம் அடுத்த வேதாளை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 175 கிலோ கஞ்சாவை சென்னை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



  • May 10, 2025 09:49 IST

    ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேர் சென்னை வருகை

    இலங்கை கடற்படையால் எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்டு, அபராத தொகை செலுத்தி விடுவிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேர் விமான மூலம் சென்னை வந்து சேர்ந்தனர்.



  • May 10, 2025 09:39 IST

    இந்திய ராணுவத்திற்கு ஆதரவாக இன்று மாலை பேரணி

    பாகிஸ்தானின் தாக்குதல் முயற்சியை துணிவுடன் எதிர்கொள்ளும் இந்திய ராணுவத்திற்கு ஆதரவாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை 5 மணிக்கு பேரணி நடைபெறுகிறது. சென்னையில் உள்ள காவல்துறை தலைமை அலுவலகத்தில் தொடங்கி போர் நினைவுச் சின்னம் அருகே நிறைவு பெறுகிறது. முன்னாள் படை வீரர்கள், அமைச்சர்கள், பொதுமக்கள், மாணவர்கள் பங்கேற்கின்றனர்.



  • May 10, 2025 09:33 IST

    பழனியில் ரோப்காரை கூடுதல் நேரம் இயக்க முடிவு

    பழனியில் ரோப்கார் சேவையை கூடுதல் நேரம் இயக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இனி காலை 6.30 முதல் இயக்கப்படும். மதியம் 1.30 முதல் 2.30 மணி வரை பராமரிப்பு பணிக்காக அதன் சேவை நிறுத்தப்படும். அதன்பிறகு இரவு 10 மணி வரை இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • May 10, 2025 09:32 IST

    சென்னை: கூடுதலாக ஒரு ஏ.சி. மின்சார ரெயில் சேவை

    சென்னையில் ஏ.சி.மின்சார ரயில் சேவை பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஏ.சி. மின்சார ரயில் சேவை நாள்தோறும் 3 வேளைகளில் மட்டுமே இயக்கப்பட்டது. பின்னர், பயணிகளின் கோரிக்கைக்கு ஏற்ப தற்போது ஒரு நாளைக்கு 8 வேளைகள் அதிகரித்து இயக்கப்பட்டு வருகிறது. இதேபோல, பெரம்பூர் ஐ.சி.எப். நடப்பாண்டு 10 ஏ.சி. மின்சார ரயில்களை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில், ஒரு ரயில் கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் கூடுதாக இயக்க ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது.



  • May 10, 2025 09:30 IST

    நாமக்கல்லில் முட்டை விலை 5 காசுகள் உயர்வு

    நாமக்கல் மண்டலத்தில் 515 காசுகளுக்கு கோழிப்பண்ணைகளில் முட்டை கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், முட்டை விலை 5 காசுகள் உயர்த்தப்பட்டது.



  • May 10, 2025 09:29 IST

    மதுரை விமான நிலையத்தில் 4 அடுக்கு பாதுகாப்பு

    ந்தியா-பாக்., போர் பதற்றத்தையொட்டி, மத்திய அரசின் உத்தரவின்படி மதுரை விமான நிலையத்தில் 4 அடுக்கு பாதுகாப்பு நடவடிக்கை பலப்படுத்தப்பட்டுள்ளன. விமான நிலைய வெளி வளாகம், வாகன காப்பகம், பிரதான நுழைவாயில் தீவிர கண்காணிப்பில் உள்ளன. அனைத்து வாகனங்களும் சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றன. 



  • May 10, 2025 09:29 IST

    எல்லையில் பதற்றம்: தமிழகம் திரும்பும் மாணவர்கள்

    எல்லையில் நிலவும் பதற்றம் காரணமாக பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் கல்வி பயிலும் தமிழக மாணவர்கள் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர். பஞ்சாபில் இருந்து நேற்று டெல்லி வந்த தமிழகம் மாணவர்கள் 12 பேர் தமிழ்நாடு இல்லத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.



Trichy Madurai Chennai Tamilnadu News Update

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: