/indian-express-tamil/media/media_files/2025/02/12/iNr2YNqeSpYCVXMHsObQ.jpg)
ஜல்லிக்கட்டு: மதுரை கீழக்கரை கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கில் இரண்டாவது நாளாக ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. களத்தில் மாடுகளும் மாடுபிடி வீரர்களும் விறுவிறுப்பாக விளையாடி வருகின்றனர்.
-
Feb 13, 2025 05:04 IST
கிருஷ்ணகிரியில் தாலியுடன் பள்ளிக்கு வந்த மாணவி; 5 பேர் மீது வழக்குப்பதிவு
கிருஷ்ணகிரியில் தாலியுடன் பள்ளிக்கு வந்த மாணவி குறித்து அளித்த புகாரின்பேரில் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 9ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு, 25 வயது நபருடன் திருமணம் நடந்துள்ளது. மாணவி, கழுத்தில் தாலிக்கயிறை மறைத்த நிலையில், அதுகுறித்து குழந்தைகள் நல அலுவலகம் மற்றும் சமூக நலத்துறை அலுவலர்களுக்கு ஆசிரியர்கள் தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீசார் விசாரித்து, சிறுமியின் பெற்றோர், திருமணம் செய்த தச்சுத்தொழிலாளி, அவரது பெற்றோர் என 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
Feb 12, 2025 18:27 IST
மீனாட்சியம்மன் கோயிலில் இரவு முழுவதும் சாமி தரிசனம் செய்ய அனுமதி
சிவராத்திரியை முன்னிட்டு மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் வரும் 26-ஆம் தேதி இரவு முதல் 27-ஆம் தேதி அதிகாலை வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம் என அனுமதிக்கப்பட்டுள்ளது.
-
Feb 12, 2025 17:41 IST
தற்கொலை குறித்து விசாரணை
அரக்கோணத்தில் உள்ள இந்திய கடற்படை விமானத்தள மையத்தில் கர்நாடகாவைச் சேர்ந்த பிரவீன் குமார் என்ற வீரர் தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
Feb 12, 2025 16:39 IST
செல்போனில் பேசியதால் விபத்து - ஓட்டுநர் சஸ்பெண்ட்
அரசு பேருந்து விபத்துக்குள்ளான விவகாரத்தில், செல்போனில் பேசியபடி பேருந்தை இயக்கியதால் விபத்து நேர்ந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தநிலையில் பேருந்தின் ஓட்டுநர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்
-
Feb 12, 2025 16:16 IST
மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற வழக்கு; குற்றவாளிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை
கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே 2014 ஆம் ஆண்டு மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற வழக்கில் சேவியர் (34) என்பவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்து நாகர்கோவில் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது
-
Feb 12, 2025 15:32 IST
கனிமவள கொள்ளை - 4 வருவாய்த்துறை அதிகாரிகள் சஸ்பெண்ட்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இ.குமாரலிங்கபுரத்தில் கனிமவள கொள்ளை விவகாரத்தில் 4 வருவாய்த்துறை அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். கனிமவளக் கொள்ளையை தடுக்கத் தவறியதாக சாத்தூர் வட்டாட்சியர் உள்பட 4 வருவாய்த்துறை அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். நீர்வளத்துறை உதவி பொறியாளர், உதவி வேளாண் அலுவலர் உள்பட 7 பேரை சஸ்பெண்ட் செய்து ஆட்சியர் உத்தரவிட்டார்.
-
Feb 12, 2025 12:35 IST
பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்த மர்ம நபர் - திண்டுக்கல்லில் அதிர்ச்சி
பழனி, இடும்பன் மலை அருகே உள்ள தனியார் தங்கும் விடுதியில் பெண்ணை மர்ம நபர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தங்கும் விடுதியில் காந்தி என்ற பெண் துப்புரவு பணியாளராக பணியாற்றி வருகிறார், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் காந்தியை சந்திக்க வந்த நிலையில் திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரை சரமாரியாக குத்தியதால், சம்பவ இடத்திலேயே காந்தி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து விடுதி உரிமையாளர் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணையை மேற்கொண்ட போலீசார், தகாத உறவு காரணமாக இந்த கொலை நடைபெற்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
-
Feb 12, 2025 11:39 IST
ஆதரவாளர்களுடன் செங்கோட்டையன் ஆலோசனை
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் தனது ஆதரவாளர்களுடன் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்த உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இரட்டை இலை தொடர்பான தேர்தல் ஆணைய விசாரணைக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை சென்னை உயர்நீதிமன்றம் நீக்கியுள்ள நிலையில் ஆலோசனை மேற்கொள்கிறார். ஏற்கனவே எடப்பாடியின் பாராட்டு விழாவை அவர் புறக்கணித்தது பரபரப்பை கிளப்பியிருந்தது.
-
Feb 12, 2025 11:02 IST
சேலம் - அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து
ஆத்தூரில் இருந்து வானவரம் மலை கிராமத்திற்கு சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது. காயமடைந்த 2 பெண்கள் உட்பட 7 பேருக்கு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
-
Feb 12, 2025 10:46 IST
திருவாரூர்- 17ஆவது நாளாக மாணவர்கள் போராட்டம்
திருவாரூர் மாவட்டத்தில் 17 ஆவது நாளாக பழங்குடியின மாணவர்கள் 500க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆதியன் பழங்குடி சான்றிதழ் கோரி பள்ளிகளுக்கு செல்லாமல் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேர்வுகள் நெருங்கி வரும் நிலையில் மாணவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
Feb 12, 2025 09:58 IST
இந்தியாவிலேயே சிறந்த காவல் நிலையம் தேர்வு
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள முத்துப்பேட்டை காவல் நிலையம் இந்தியாவிலேயே சிறந்த காவல் நிலையமாக மத்திய அரசு தேர்வு செய்துள்ளது.
-
Feb 12, 2025 09:19 IST
திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல்
கிரிவலம் முடிந்து மீண்டும் ஊர் செல்ல ரயில் நிலையத்தில் குவிந்த பக்தர்கள். கூட்ட நெரிசலில் ரயில் இடம் பிடிக்க முண்டியடித்து சென்றனர்.
-
Feb 12, 2025 09:18 IST
ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் மரணம்!
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் மரணம் அடைந்துள்ளனர். அஜீஸ் நகர் அருகே திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகில் உள்ள குளத்தில் மிதந்தாய், மகன் சடலம் மீட்க்கப்பட்டுள்ளது. குளத்திற்கு அருகே தூக்கில் தொங்கிய நிலையில் கணவரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மனைவி, மகனை கொன்று முத்துக்குமார் தற்கொலையா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
Feb 12, 2025 09:14 IST
மதுரை ஜல்லிக்கட்டு
மதுரை கீழக்கரை கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கில் ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடந்து வருகிறது
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.