/indian-express-tamil/media/media_files/y17k6hgOmVpxW3v3KQY7.jpg)
மீனவர்கள் மீது தாக்குதல்: நாகப்பட்டினம் மாவட்டம் கோடியக்கரை அருகே கடலில் மீன்பிடித்த தமிழக மீனவர்கள் 4 பேர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. மயிலாடுதுறை, புதுப்பேட்டையை சேர்ந்த மீனவர்கள் மீது அரிவாள், கல், கட்டை கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. தமிழக மீனவர்களை தாக்கி ஜிபிஎஸ் கருவி, செல்போன், மீன்களை கடற்கொள்ளையர்கள் பறித்து சென்றனர். காயமடைந்த மீனவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
-
Apr 18, 2025 05:58 IST
கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கு: மேலும் 5 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது தேசிய பாதுகாப்பு முகமை
கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கில், தேசிய பாதுகாப்பு முகமை மேலும் 5 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. கோவை உக்க்டம் கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு 2022, அக்டோபர் 23-ம் தேதி நடந்த கார் குண்டுவெடிப்பு வழக்கில் இதுவரை 17 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
-
Apr 17, 2025 19:00 IST
தமிழ்நாட்டில் இன்று 5 இடங்களில் 100°F மேல் வெப்பம் பதிவு – வானிலை மையம்
தமிழ்நாட்டில் இன்று மதுரை மாநகர், மதுரை விமான நிலையம், வேலூர், திருச்சி, ஈரோடு என 5 இடங்களில் 100°F மேல் வெப்பம் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
-
Apr 17, 2025 18:04 IST
உலகிலேயே மிக உயரமான 184 அடி முருகன் சிலை மருதமலையில் அமைகிறது - சேகர் பாபு
உலகிலேயே மிக உயரமாக 184 அடியில் முருகன் சிலை மருதமலையில் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர் பாபு அறிவித்துள்ளார்
-
Apr 17, 2025 17:54 IST
3 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் சிக்கிய கைதி
வேலூர் மத்திய சிறையில் இருந்து தப்பிய கைதி 3 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். வேலூர் மத்திய சிறையில் கடந்த 2022 பிப்ரவரி 21 ஆம் தேதி தப்பிச்சென்ற ஆயுள் தண்டனை கைதி முத்துக்குமாரை வருட கணக்கில் தேடி வந்த வேலூர் மத்திய சிறை காவலர்கள் மற்றும் பாகாயம் போலீசார் பெங்களூருவில் வைத்து கைது செய்தனர்
-
Apr 17, 2025 15:57 IST
நடுக்காவேரி வழக்கு: காவல்துறை விசாரணைக்கு மதுரை உயர்நீதிமன்றம் தடை
தஞ்சை நடுக்காவேரியில் சகோதரி இறப்பிற்கு காரணமான காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கில் தஞ்சை நடுக்காவேரி காவல்துறையினர் எந்த விசாரணையும் மேற்கொள்ள கூடாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
-
Apr 17, 2025 14:20 IST
வாணியம்பாடியில் தொட்டியை சுத்தம் செய்ய வைத்த ஆசிரியர் சஸ்பெண்ட்
வாணியம்பாடி அருகே அரசு பள்ளி வளாகம், நீர்த்தேக்க தொட்டியை மாணவர்களை வைத்து சுத்தம் செய்த விவகாரம். ஆவாரங்குப்பம் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் உமாராணியை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
-
Apr 17, 2025 14:11 IST
மதுரை சித்திரை திருவிழா - அன்னதானம் வழங்க கலெக்டர் போட்ட விதிமுறைகள்
மதுரை சித்திரை திருவிழா அன்னதானம் வழங்குவதற்கான விதிமுறைகளை மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவித்துள்ளார். அதன்படி, மதுரை சித்திரை திருவிழாவுக்கு அன்னதானம், நீர் மோர் வழங்குபவர்கள் செயற்கை சாயத்தை சேர்க்கக்கூடாது.
தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட பாலிதீன் பைகள், பிளாஸ்டிக் கப்புகள் ஆகியவற்றை முழுமையாக தவிர்க்க வேண்டும். அன்னதானம் வழங்குபவர்கள் மற்றும் பெறுபவர்கள் சாப்பிட்ட பின்பு அன்னதானம் வழங்கும் இடங்களில் சேரும் கழிவுகள் முறையாக மாநகராட்சி குப்பை தொட்டியில் போட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
-
Apr 17, 2025 13:55 IST
பள்ளி சத்துணவு கூடத்தில் எரிவாயு கசிந்து தீவிபத்து
விருத்தாசலம் அருகே செம்பளாக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சத்துணவு கூடத்தில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. சத்துணவு கூடத்தில் இருந்த எரிவாயு கசிந்து தீவிபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
Apr 17, 2025 13:50 IST
மதுரை சித்திரை திருவிழா அன்னதானம் வழங்க விதிமுறைகள் -மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவிப்பு
மதுரை சித்திரை திருவிழாவுக்கு அன்னதானம், நீர் மோர் வழங்குபவர்கள் செயற்கை சாயத்தை சேர்க்கக்கூடாது. தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட பாலிதீன் பைகள், பிளாஸ்டிக் கப்புகள் ஆகியவற்றை முழுமையாக தவிர்க்க வேண்டும். அன்னதானம் வழங்குபவர்கள் மற்றும் பெறுபவர்கள் சாப்பிட்ட பின்பு அன்னதானம் வழங்கும் இடங்களில் சேரும் கழிவுகள் முறையாக மாநகராட்சி குப்பை தொட்டியில் போட வேண்டும். அன்னதானம், நீர்மோர் மற்றும் குடிநீர் வழங்கும் நபர்கள் https://foscos.fssai.gov.in என்ற இணையதளத்தில் ரூ.100 கட்டணம் செலுத்தி விண்ணப்பித்து உணவு பாதுகாப்பு துறையின் அனுமதி பெற்று வழங்க வேண்டும். உணவு மற்றும் உணவுப் பொருள் தொடர்பான புகார்களுக்கு தமிழ்நாடு அரசு உணவு பாதுகாப்பு துறை (Whatsapp No.) எண்.9444042322-ல் தொடர்பு கொண்டு புகார்கள் தெரிவிக்கலாம் என்று மதுரை சித்திரை திருவிழா அன்னதானம் வழங்க மாவட்ட ஆட்சியர் சங்கீதா விதிமுறைகளை அறிவித்துள்ளார்.
-
Apr 17, 2025 13:01 IST
தனியாக அமர வைத்து தேர்வு எழுத வைத்த விவகாரத்தில் மூவர் மீதும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு - நீதிமன்றம் புதிய உத்தரவு
பூப்பெய்திய மாணவியை தனியாக அமர வைத்து தேர்வு எழுத வைத்த விவகாரத்தில், கோவை தனியார் பள்ளி தாளாளர், முதல்வர், அலுவலக உதவியாளரின் ஜாமீன் மனுக்களை, அவர்கள் சரணடையும் நாளில் பரிசீலிக்க கோவை முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாணவியின் தந்தை அளித்த புகாரின் பேரில் மூவர் மீதும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது
-
Apr 17, 2025 12:52 IST
கூட்டணி குறித்து அமித் ஷா தெளிவாக கூறிவிட்டார் - ஜி.கே.வாசன்
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி என அமித் ஷா தெளிவாக கூறிவிட்டார் தமிழகத்தில் அதிமுக தலைமையில் ஆட்சி, மத்தியில் NDA ஆட்சி என அமித் ஷா கூறினார்; அதிமுக வெற்றி பெற கூட்டணி கட்சிகள் பாடுபடும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
-
Apr 17, 2025 12:33 IST
அதிமுக - பாஜக கூட்டணியை பிளவுபடுத்த வேண்டாம் - நயினார் நாகேந்திரன்
“உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், கூட்டணி கட்சியின் தலைவர் இபிஎஸ்-ம் என்ன முடிவெடுக்கிறார்களோ அது நடக்கும் தேவையில்லாமல் சந்தேகங்களை எழுப்பி எழுப்பி, இந்தக் கூட்டணியை பிளவுபடுத்தும் முயற்சியை கைவிடுங்கள்; எங்களை பொறுத்தவரை திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
-
Apr 17, 2025 12:21 IST
தீரன் சின்னமலையை போற்றி வணங்குகின்றேன் - விஜய்
“தீரன் சின்னமலையை போற்றி வணங்குகின்றேன். தனது அசாத்திய வீரத்தால் அந்நிய ஆதிக்கத்தை வென்றெடுத்த மாவீரர், இறுதி மூச்சுவரை விடுதலைக்காகப் போராடி, துணிச்சலோடு தூக்குமேடை ஏறி, விடுதலை வேட்கையை விதைத்த தீரர் மாவீரர் தீரன் சின்னமலை அவரது பிறந்த நாளில், அவரின் தியாகத்தை நினைவுகூர்ந்து, அவரைப் போற்றி வணங்குகின்றேன்” என்று தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார்.
-
Apr 17, 2025 12:18 IST
விசைத்தறி தொழிலாளர்கள் பிரச்சினைக்கு தீர்வு - இபிஎஸ்
விசைத்தறி தொழிலாளர்கள் பிரச்சினை குறித்து அரசு பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும். கூலி உயர்வை வலியுறுத்தி தொழிலாளர்கள் வேலைநிறுத்தம், உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர் என்று விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் தொடர்பாக பேரவையில் இபிஎஸ் கவன ஈர்ப்பு தீர்மானம்
-
Apr 17, 2025 11:54 IST
அதிதீஸ்வரர் சிவன் கோயிலில் இளையராஜா சாமி தரிசனம்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த தேவஸ்தானம் ஊராட்சியில் அமைந்துள்ள 1,250 ஆண்டுகள் பழமை வாய்ந்த அதிதீஸ்வரர் சிவன் கோயிலில் இசைஞானி இளையராஜா சாமி தரிசனம்.
-
Apr 17, 2025 11:53 IST
"வருங்கால முதல்வரே" - நயினார் நாகேந்திரனுக்கு போஸ்டர்
நெல்லையில், "வருங்கால முதல்வரே" என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
-
Apr 17, 2025 10:50 IST
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 'மலரும் புன்னகை' திட்டம்
விருதுநகர் மாவட்ட அரசுப் பள்ளிகளில் எத்துப்பல் கொண்ட மாணவர்களுக்கு 'மலரும் புன்னகை' திட்டத்தின் கீழ் இலவசமாக Braces பொருத்தப்பட்டு உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் கூறியுள்ளார். தனியார் மருத்துவமனையில் ரூ.30,000 வரை செலவாகும் இச்சிகிச்சையை, இலசமாக மாணவர்களுக்கு சிஎஸ்ஆர் நிதியின் மூலம் சிகிச்சை அளித்து வருகிறார்.
-
Apr 17, 2025 10:13 IST
நாகை: செருதூர் மீனவர்கள் மீதும் இலங்கை தாக்குதல்
நாகப்பட்டினம் மாவட்டம் செருதூர் மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியதாகத் தகவல் கிடைத்துள்ளது. காலையில் வேதாரண்யம் மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய நிலையில், நாகை மீனவர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதால் மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, ரூ.2 லட்சம் மதிப்பிலான எஞ்சின், ஜிபிஎஸ், 2 செல்போன்கள், பேட்டரி மற்றும் 30 கிலோ மீன்களை பறித்துச் சென்றனர்.
-
Apr 17, 2025 10:10 IST
ஜான் ஜெபராஜின் உறவினரும் போக்சோவில் கைது
சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கைது செய்யப்பட்ட மத போதகா் ஜான் ஜெபராஜின் உறவினரும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமிகள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், ஜான் ஜெபராஜ் உறவினரான கோவை துடியலூர் பகுதியைச் சேர்ந்த பெனட் ஹரிஸ் என்பவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.
-
Apr 17, 2025 10:09 IST
மேல்பாதி திரெளபதி அம்மன் கோயிலில் பட்டியலின மக்கள் வழிபாடு
சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி, விழுப்புரம் மாவட்டம், மேல்பாதி கிராமத்திலுள்ள அருள்மிகு திரௌபதியம்மன் கோயில் பொதுமக்கள் வழிபாட்டுக்காக வியாழக்கிழமை காலை திறக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பட்டியலின சமுதாய மக்கள் கோயிலுக்குள் சென்று அம்மனைத் தரிசனம் செய்தனர்.
-
Apr 17, 2025 09:47 IST
புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.840 உயர்ந்து ஒரு சவரன் 71.360க்கு விற்பனையாகிறது.
-
Apr 17, 2025 09:46 IST
மாணவர் சின்னதுரை மீது மீண்டும் தாக்குதல்
நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் சாதிய வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவர் சின்னதுரை மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டது. செல்போன் செயலி மூலம் பழகி தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் சிறு காயங்களுடன் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
-
Apr 17, 2025 09:44 IST
2 ஆண்டுகளுக்குப் பின் திறக்கப்பட்ட திரௌபதி அம்மன் கோயில்
2 ஆண்டுகளுக்குப் பின் திறக்கப்பட்ட திரௌபதி அம்மன் கோயிலில் பட்டியலின மக்கள் மகிழ்ச்சியாக வழிபாடு செய்தனர். விழுப்புரம் அருகே உள்ள மேல்பாதி திரௌபதி அம்மன் கோயில், நீதிமன்ற உத்தரவுப்படி அதே கிராமத்தைச் சேர்ந்த பட்டியலின மக்கள் வழிபாடு செய்வதற்காக இன்று திறக்கப்பட்டது. கடந்த 2023ம் ஆண்டு இரு சமூகங்கள் இடையே ஏற்பட்ட மோதலால் கோயிலுக்கு சீல் வைக்கப்பட்டது.
-
Apr 17, 2025 09:43 IST
மீனவர்கள் மீது தாக்குதல்
நாகப்பட்டினம் மாவட்டம் கோடியக்கரை அருகே கடலில் மீன்பிடித்த தமிழக மீனவர்கள் 4 பேர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. மயிலாடுதுறை, புதுப்பேட்டையை சேர்ந்த மீனவர்கள் மீது அரிவாள், கல், கட்டை கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. தமிழக மீனவர்களை தாக்கி ஜிபிஎஸ் கருவி, செல்போன், மீன்களை கடற்கொள்ளையர்கள் பறித்து சென்றனர். காயமடைந்த மீனவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.