Coimbatore, Madurai, Trichy News Highlights: 'இன்னும் 4 மாதத்தில் எனது ஆட்டத்தை பார்ப்பீர்கள்': கடலூரில் சீமான் பேச்சு

கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Seeman speech

தி.மலை டைடல் பூங்கா: திருவண்ணாமலையில் மினி டைடல் பூங்கா கட்ட தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியது. ரூ. 34 கோடி செலவில், 4 தளங்களுடன் இந்த டைடல் பூங்கா அமைக்கப்பட உள்ளது. ஓராண்டில் கட்டுமான பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

  • Apr 21, 2025 19:27 IST

    இன்னும் 4 மாதத்தில் எனது ஆட்டத்தை பார்ப்பீர்கள் - சீமான் 

    இன்னும் 4 மாதத்தில் எனது ஆட்டத்தை பார்ப்பீர்கள் என சீமான் தெரிவித்துள்ளார். கடலூரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார். அப்போது, "நாம் தமிழர் கட்சியின் பலம் மற்றும் பலவீனம் குறித்து தெரிந்து கொண்டதால், எங்களின் போர் முறையை மாற்றி உள்ளோம்" என்றும் அவர் கூறினார்.



  • Apr 21, 2025 18:20 IST

    தமிழ்நாட்டில் காவலர்களுக்கு சங்கம் இல்லாதது ஏன்? - ஐகோர்ட் நீதிபதிகள் கேள்வி 

    கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் போலீசாருக்கு சங்கம் உள்ள நிலையில் தமிழ்நாட்டில் மட்டும் அவர்களுக்கு சங்கம் இல்லாதது ஏன்? என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி எஉழ்ப்பினர். காவலர்களுக்கான வார விடுமுறை குறித்த அரசாணை எவ்வாறு பின்பற்றப்படுகிறது என பதில் தாக்கல் செய்ய டி.ஜி.பி-க்கு  உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.



  • Advertisment
  • Apr 21, 2025 18:02 IST

    ‘என் மகன் குறித்து அவதூறு பரப்புகிறார்கள்’ - நெப்போலியன் தரப்பில் நெல்லை எஸ்.பி அலுவலகத்தில் புகார்

    நடிகரும் முன்னாள் மத்திய அமைச்சருமான நெப்போலியன் தரப்பில், நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலகத்தில் மருத்துவர் டேனியல் ராஜா புகார் மனு அளித்துள்ளார். அதில், “என் மகன் தனுஷின் உடல்நலம் குறித்து பொதுத் தளத்தில் சிலர் தொடர்ந்து அவதூறு பரப்புகின்றனர். என் மகனும் மருமகளும் நல்ல உடல்நலத்தோடு சேர்ந்து வாழ்கின்றனர். அவதூறு பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • Apr 21, 2025 17:51 IST

    தூத்துக்குடி, விளாத்திக்குளம் அருகே மின்னல் தாக்கி பள்ளி மாணவி உயிரிழப்பு!

    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே குறளையம்பட்டி பகுதியில் மழை பெய்து கொண்டிருந்தபோது வீட்டின் வெளியே காய வைக்கப்பட்டிருந்த மிளகாயை எடுக்கச் சென்ற முத்துகௌசல்யா (17) என்ற பெண் மின்னல் தாக்கி உயிரிழந்தார்.



  • Advertisment
    Advertisements
  • Apr 21, 2025 15:06 IST

    புதிய மேம்பாலம் கட்ட திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது - அமைச்சர் எ.வ வேலு

    மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தெற்கு கோபுர சந்திப்பு - அவனியாபுரம் பெரியார் சிலை வரை, 4 வழி சாலையாக அகலப்படுத்த, தெற்கு வாசல் சந்திப்பு அருகே உள்ள ரயில்வே மேம்பாலத்திற்கு இணையாக, புதிய மேம்பாலம் கட்ட திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார் அமைச்சர் எ.வ வேலு 



  • Apr 21, 2025 12:56 IST

    ரயில்களில் காவி நிறம் - சு.வெங்கடேசன் குற்றச்சாட்டு

    வந்தே பாரத் ரயிலின் முன்பகுதி பெட்டி, சாதாரண ரயில்களின் முன்பகுதி என்ஜின்களைவிட மிகவும் எடை குறைவு என்று ரயில்வே ஆணையர் வெளியிட்ட அறிக்கை ஒன்றின் மூலம் தெரிய வந்துள்ளது. மேலும் வந்தே பாரத் ரயிலில் பசு குறுக்கிட்டால்கூட, ரயில் வேகமாக இயங்குவதால் கடுமையான விபத்து ஏற்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இதுதொடர்பாக மதுரை மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. சு. வெங்கடேசன் கூறுகையில், "பசு மாடு முட்டினால்கூட தடம் புரண்டு பெரும் விபத்துக்கு ஆளாகும் அபாயம்! வந்தே பாரத் ரயிலின் முன் கோச், சாதா ரயில்களைவிட எடை குறைவாம். ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அறிக்கை. வந்தே பாரத்துக்கு காவி நிறம் அடிப்பதில் காட்டிய ஆர்வத்தை பயணிகளின் பாதுகாப்பில் காட்டுங்கள் அமைச்சரே" என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.



  • Apr 21, 2025 12:04 IST

    இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் மருமகனுக்கு சம்மன்

    நெல்லை இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் மருமகன் பல்ராம் சிங்குக்கு பாளையங்கோட்டை போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். கணவர் இருட்டுக்கடையை வரதட்சனையாக கேட்பதாக சுனிஷ்கா பாளையங்கோட்டை போலீஸில் புகார் அளித்திருந்தார். தனக்கு பாஜக ஆதரவு உள்ளதாக மிரட்டியதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

     



  • Apr 21, 2025 10:33 IST

    சித்திரை திருவிழா கொண்டாட்டம்: மே 12-ந் தேதி மதுரைக்கு உள்ளூர் விடுமறை

    சித்திரை திருவிழாவின் முக்கிற நிகழ்வாக கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு வரும் மே 12-ந் தேதி நடைபெற உள்ள நிலையில், அன்றைய தினம் மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆட்சியர் சங்கீதா உத்தரவிட்டுள்ளார்.



  • Apr 21, 2025 09:15 IST

    சாலையில் கிடந்த பணம் - மீட்டுக்கொடுத்த சிறுவர்கள்

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் சாலையில் கிடந்த ரூ.5,000 பணத்தை நேர்மையுடன் காவல் நிலையத்தில் ஒப்படைத்த 4 சிறுவர்களுக்கு, அக்காவல் நிலையத்தில் இருந்த உதவி ஆய்வாளர் பீட்சா வாங்கி கொடுத்து தனது பாராட்டுக்களை தெரிவித்தார்.



  • Apr 21, 2025 09:14 IST

    சாலை விபத்தில் இரு பெண்கள் உட்பட 3 பேர் உயிரிழப்பு

    கடலூர் ராமாபுரம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில் 2 பெண்கள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்த நிலையில் பைக்கை ஓட்டிச்சென்ற நேரு என்பவர் மருத்துவமனைக்கு  அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தார். நேரு, கல்பனா, சரண்யா ஆகியோர் கூலி வேலைக்கு செல்வதற்காக ஒரே பைக்கில் சென்றுள்ளனர். 



  • Apr 21, 2025 09:09 IST

    தி.மலையில் டைடல் பூங்கா

    திருவண்ணாமலையில் மினி டைடல் பூங்கா கட்ட தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியது.  ரூ. 34 கோடி செலவில், 4 தளங்களுடன் இந்த டைடல் பூங்கா அமைக்கப்பட உள்ளது. ஓராண்டில் கட்டுமான பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.



news updates Tamilnadu Live News Udpate

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: