Coimbatore, Madurai, Trichy News Highlights: அரசுப்பள்ளி ஆசிரியருக்கு ரூ.2 லட்சம் அபராதம் - மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு

கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
kerala school
  • Apr 23, 2025 18:16 IST

    அரசுப்பள்ளி ஆசிரியருக்கு ரூ.2 லட்சம் அபராதம் 

    சிவகங்கை மாவட்டத்தில், வீட்டு பாடம் எழுதாமல் வந்த மாணவியை 400 முறை தோப்புக்கரணம் போடவைத்த ஆசிரியருக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதித்து மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அரசு பள்ளி ஆசிரியர் மீது பாதிக்கப்பட்ட மாணவியின் தாயார் தொடர்ந்த வழக்கில் மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது



  • Apr 23, 2025 17:10 IST

    வீட்டுப்பாடம் செய்யாத மாணவிக்கு தண்டனை: ஆசிரியைக்கு ரூ2 லட்சம் அபராதம்

    சிவகங்கையில் வீட்டுப்பாடம் செய்யாமல் பள்ளிக்கு வந்த மாணவியை 400 தோப்புக்கரணம் போட சொன்ன, அரசுப்பள்ளி ஆசிரியைக்கு ரூ2 லட்சம் அபராதம் விதித்து தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 7-ம் வகுப்பு மாணவியின் தாயார் அளித்த புகாரின் பேரில், ஆசிரியைக்கு அபாரதம் விதிக்கவும், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும், தமிழக அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.



  • Advertisment
  • Apr 23, 2025 16:27 IST

    போலீஸ் என கூறி கொள்ளை: நாமக்கல்லில் 7 பேர் கைது

    நாமக்கல் நகரில் உள்ள ஸ்பாவில் மஜாஜ் எடுத்துவிட்டு, போலீஸ் எனக்கூறி பணம், நகைப் பறிப்பில் ஈடுபட்ட 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பல நகரங்களில் இதே போல பணம் பறித்து வந்ததை இக்கும்பல் வாடிக்கையாக கொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்களிடம் இருந்து ஒரு காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.



  • Apr 23, 2025 14:18 IST

    கிடா முட்டு விழா நடத்த உத்தரவு

    மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள எழுமலை கிராமத்தில் கிடா முட்டு விழா நடத்த அனுமதி வழங்க மாவட்ட நிர்வாகத்திற்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு



  • Advertisment
    Advertisements
  • Apr 23, 2025 13:29 IST

    வேங்கைவயல் வழக்கு மே 12-க்கு ஒத்திவைப்பு

    புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் பட்டியலினக் குடியிருப்பில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தின் வழக்கு விசாரணை வரும் மே 12 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்ட மூவரும் புதுக்கோட்டை குற்றவியல் நடுவர் மன்றம் எண் 2-இல் விசாரணைக்கு ஆஜரான நிலையில், மே 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதித்துறை நடுவர் ஜி. அற்புதவாணன் உத்தரவிட்டார்.



  • Apr 23, 2025 13:26 IST

    தஞ்சை பெரிய கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்!

    உலக புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. இதையொட்டி, சந்திரசேகரர் பஞ்சமூர்த்தி சுவாமிகளுடன் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் அருகே எழுந்தருளினர்.



  • Apr 23, 2025 12:27 IST

    மதுரை சித்திரை திருவிழா - மாநகராட்சி ஆணையருக்கு அறிவுறுத்தல்

    தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் பேசிய எதிர்க்கட்சித் துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சார்பில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் மின் கட்டணம் செலுத்த வேண்டியிருப்பதாகவும், அந்த கட்டணத்தை செலுத்தினால் மட்டுமே சித்திரைத் திருவிழாவுக்கு மின்சாரம் வழங்க முடியும் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்திருக்கும் தகவல் அமைச்சருக்கு தெரியுமா என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்து பேசிய நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, சித்திரைத் திருவிழாவுக்கான முழு ஏற்பாடுகளையும் மதுரை மாநகராட்சி நிர்வாகமே செய்ய வேண்டும் எனவும், பணத்தை பற்றி கவலைப்படாமல் அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்ய மாநகராட்சி ஆணையருக்கு அறிவுறுத்தியிருப்பதாகவும் தெரிவித்தார்.



  • Apr 23, 2025 10:57 IST

    இருட்டு கடை அல்வா உரிமையாளர் மகள் மேலும் ஒரு புகார்

    வரதட்சணை விவகாரத்தில் இருட்டு கடை அல்வா உரிமையாளர் மகள் மேலும் ஒரு புகார் மனு கணவர் பல்ராம் சிங் வெளிநாடு தப்ப முயற்சி செய்ய திட்டமிட்டு இருக்கிறார்; விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்க வேண்டும் என்று நெல்லை மாநகர காவல் துணை ஆணையரிடம் இருட்டு கடை அல்வா உரிமையாளர் மகள் ஸ்ரீ கனிஷ்கா புகார் மனு கொடுத்துள்ளார். 



  • Apr 23, 2025 09:33 IST

    குமரி: பீப் இறைச்சி உணவில் கரப்பான் பூச்சி

    கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் மார்க்கெட் ரோடு பகுதியில் உள்ள உணவகத்தில் பீப் இறைச்சி உணவில் கரப்பான் பூச்சி கிடந்ததாக புகார் எழுந்தது. விரைந்து வந்த அதிகாரிகள் ஓட்டலில் சோதனை நடத்தினர். அப்போது ஓட்டல் சமையல் அறை மிகவும் சுகாதரமற்ற நிலையில் இருந்தது. மேலும், காலாவதியான உணவு பொருட்கள் இந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சுகாதாரமற்ற முறையில் உணவு செயல்பட்ட அந்த ஓட்டலுக்கு அதிகாரிகள் 'சீல்' வைத்தனர். மேலும், ஓட்டல் உரிமையாளருக்கு ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.



  • Apr 23, 2025 09:31 IST

    ஓசூர் அருகே சுற்றித் திரியும் காட்டுயானைகள்

    ஓசூர் அருகே ஆழியாளம் கிராமப் பகுதிகளில் 5 காட்டுயானைகள் சுற்றித் திரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. விவசாயத் தோட்டத்தில் புகுந்து யானைகள் பயிர்களை சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.



Trichy Coimbatore Tamilnadu News Update Madurai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: