/indian-express-tamil/media/media_files/2025/04/24/OEA7yI3kKC21rTx5Rdob.jpg)
கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2 பள்ளிகள் திறப்பு:
கோடை விடுமுறை முடிந்து மீண்டும் ஜூன் 2-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் கண்ணப்பன் வெளியிட்ட அறிக்கையில், ‘நிகழ் கல்வியாண்டில் தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் விடுமுறை முடிந்து ஜூன் 2-ம் தேதி (திங்கள்கிழமை) திறக்கப்படும். எனவே, அன்றைய தினத்தில் பள்ளிகளை திறப்பதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள பள்ளிகளின் தலைமையாசிரியா்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது என்று அவா் தெரிவித்துள்ளாா்.
-
Apr 24, 2025 23:38 IST
கன்னியாகுமரி வரும் வாராந்திர விரைவு ரயிலில் கஞ்சா பறிமுதல்
தெலங்கானாவில் இருந்து கன்னியாகுமரி வரும் வாராந்திர விரைவு ரயில் சிதம்பரத்தில் நின்ற போது, ரயில்வே போலீசார் நடத்திய சோதனையில் கேட்பாரற்றுக் கிடந்த 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்துள்ளனர். சாக்குப்பையில் கஞ்சா கடத்தி வந்த நபர் குறித்து ரயில்வே போலீசார் விசாரணை விசாரணை மேற்கொண்டுள்ளன.
-
Apr 24, 2025 23:34 IST
கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த வனக்காப்பாளர் மணிகண்டன் திடீர் மரணம்
நீலகிரி மாவட்டம் கூடலூர் வனப்பகுதியில் வரையாடுகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த வனக்காப்பாளர் மணிகண்டன் திடீர் மரணம்.. மாலை 4 மணியளவில் சுருண்டு விழுந்த அவருக்கு சக ஊழியர்கள் முதலுதவி அளித்தனர். எனினும் அவர் உயிரிழந்துள்ளார். வனத்துறையினர் விசாரணை
-
Apr 24, 2025 19:53 IST
சங்கரன்கோவில் பகுதியில் சூறைக்காற்றுடன் ஆலங்கட்டி மழை
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில் இன்று மாலை திடீரென சூறைக்காற்றுடன் பெய்த ஆலங்கட்டி மழை பெய்தது. பலத்த காற்றில் கோயில் வாசல் சாலையில் உள்ள கடைகளின் பெயர்ப்பலகைகள், முன்பக்க தகர ஷீட்டுகள் தூக்கி வீசப்பட்டன.
-
Apr 24, 2025 16:57 IST
ரசிகர்களுக்கு கை அசைத்து நன்றி தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த்
ஜெயிலர் 2 திரைப்பட குழு ஆனைகட்டி பகுதியில் இருந்து மாங்கரை பகுதிக்கு சென்றபோது, சாலையோரம் குவிந்த ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் காரில் இருந்தபடி கை அசைத்து நன்றி தெரிவித்தார்
-
Apr 24, 2025 16:25 IST
திண்டுக்கல் அருகே பேக்கரி கடையில் தீ விபத்து
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே பேக்கரி கடையில் சிலிண்டர் கசிவால் தீ விபத்து ஏற்பட்டது. வெயிலின் தாக்கத்தால் தீ மேலும் பரவி முழு கடையும் எரிந்து நாசமானது
-
Apr 24, 2025 15:54 IST
கோவை பேருந்து நிலையத்தில் கணக்கில் வராத ரூ.35 லட்சம் பறிமுதல்
கோவை-காந்திபுரம் பேருந்து நிலையத்தில் போலீசார் ரோந்து பணியின் போது கேரளாவைச் சேர்ந்தவரிடம் இருந்து கணக்கில் வராத ரூ.35 லட்சம் பறிமுதல்
பணத்திற்கான உரிய ஆவணங்கள் இல்லாத நிலையில் பறிமுதல் செய்த போலீசார்
-
Apr 24, 2025 13:41 IST
நடத்துநர், பயணிகள் கடும் வாக்குவாதம்
தென்காசி புதிய பேருந்து நிலையத்திலிருந்து மதுரை நோக்கி செல்ல நின்றிருந்த பேருந்தில் வாக்குவாதம். "மதுரைக்கு செல்பவர்கள் மட்டும் ஏறுங்கள் - மற்றவர்கள் ஏறாதீர்கள்” என நடத்துநர் சொன்னதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
-
Apr 24, 2025 13:03 IST
தஞ்சை அரசு மருத்துவமனையில் தீ விபத்து
தஞ்சை அரசு இராசா மிராசுதார் மருத்துவமனையின் மகப்பேறு பிரிவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்து ஏற்பட்ட பகுதியில் 100-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள், பச்சிளம் குழந்தைகள் சிக்கியிருப்பதாக தகவல்; கட்டிடம் முழுவதும் மின்சார விநியோகம் நிறுத்தம்; தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரம்; கர்ப்பிணிகளை ஒவ்வொருவராக மீட்டு வேறு கட்டடங்களுக்கு அழைத்துச் செல்கின்றனர் தீயணைப்பி வீரர்கள்
-
Apr 24, 2025 12:20 IST
கும்பகோணத்தில் கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம் - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
“கலைஞர் பிறந்த ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் உள்ள கும்பகோணத்தில் கலைஞர் பெயரில் விரைவில் பல்கலைக்கழகம் அமைக்கப்படும்” என்று சட்டப்பேரவையில் கலைஞர் பெயரில் பல்கலை. இல்லையே என பாமகவின் ஜி.கே.மணி பேசிய நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
Apr 24, 2025 11:48 IST
கனியாமூர் தனியார் பள்ளி கலவர வழக்கு
கள்ளக்குறிச்சி கனியாமூர் தனியார் பள்ளி கலவர வழக்கில் 100க்கும் மேற்பட்டோர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். வழக்கின் விசாரணையை மே 7ம் தேதிக்கு மாவட்ட நீதிபதி ரீனா ஒத்திவைத்தார்.
-
Apr 24, 2025 10:34 IST
மேற்குத்தொடர்ச்சி மலையில் மிக கனமழை
கன்னியாகுமரி மாவட்டம்மேற்குத்தொடர்ச்சி மலையில் பெய்த மிக கனமழையால், பெருதளைகாடு பகுதியில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் 4,000 வாழைமரங்கள் அடித்துச்செல்லப்பட்டன.
-
Apr 24, 2025 10:06 IST
கடலூரில் ரூ.40 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்
கடலூரில் ரூ.40 லட்சம் ஹவாலா பணத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். சென்னையில் இருந்து மன்னார்குடிக்கு சென்ற தனியார் சொகுசு பேருந்தில் நவீத் அன்வர் என்பவரின் உடைமைகளை காவல்துறையினர் சோதனை செய்தபோது உரிய ஆவணங்கள் இல்லாமல் பணம் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
-
Apr 24, 2025 09:14 IST
திருத்தணியில் 27 நாட்களில் ரூ.1.40 கோடி காணிக்கை!
திருத்தணி முருகன் கோயிலில் கடந்த 27 நாட்களில் ரூ.1.40 கோடியை காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியுள்ளனர். 632 கிராம் தங்கம் மற்றும் 13,434 கிராம் வெள்ளியையும் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியுள்ளனர்.
-
Apr 24, 2025 09:12 IST
ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் மின் தடை
ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 2 மணி நேரத்திற்கு மேல் மின் தடை ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. ஜெனரேட்டர் இயக்கப்படவில்லை என நோயாளிகள் குற்றச்சாட்டி உள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.