Coimbatore, Madurai, Trichy News Highlights: மயிலாடுதுறையில் தி.மு.க கூட்டத்தில் சரிந்து விழுந்த மின்விளக்குத்தூண்; நூலிழையில் தப்பிய ஆ.ராசா

கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
escape

கோயில் குடமுழுக்கு கோலாகலம்: நெல்லையில் பிரசித்தி பெற்ற பாபநாச சுவாமி கோயிலில் குடமுழுக்கு நடைபெற்று வருகிறது. குடமுழுக்கு விழாவையொட்டி சுமார் 600க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பாபநாசம் அகஸ்தியர்பட்டியில் வாகனங்களை நிறுத்துவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடமுழுக்கில் பங்கேற்றனர்.

  • May 04, 2025 22:02 IST

    மயிலாடுதுறையில் தி.மு.க கூட்டத்தில் சரிந்து விழுந்த மின்விளக்குத்தூண்; நூலிழையில் தப்பிய ஆ.ராசா

    மயிலாடுதுறையில் தி.மு.க பட்ஜெட் விலக்கப் பொதுக் கூட்டத்தில் எம்.பி ஆ.ராசா பேசிக்கொண்டிருந்தபோது, மைக் மீது மின்விளக்குத்தூண் விழுந்தது; மின்விளக்குத்தூண் சரிந்ததைக் கண்டு சுதாரித்து விலகியதால் தி.மு.க எம்.பி. ஆ.ராசா நூலிழையில் தப்பினார்.



  • May 04, 2025 18:40 IST

    ரூ.5,000 லஞ்சம் வாங்கிய கிராம உதவியாளர் கைது

    ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் தாலுகா காக்கூர் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர், பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய ஆன்லைனில் விண்ணப்பம் செய்துள்ளார். இதற்காக கிராம உதவியாளர் ராசையா ரூ. 5 ஆயிரம் லஞ்சம் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆன்லைனில் விண்ணப்பம் செய்த நபர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசில் புகார் அளித்தார். இதனையடுத்து, கிராம உதவியாளர் ராசையா லஞ்சப் பணத்தை பெற்ற போது, அவரை கையும்,களவுமாக பிடித்து போலீசார் கைது செய்தனர்.



  • Advertisment
  • May 04, 2025 18:05 IST

    பூந்தமல்லி: கனமழையால் திரையரங்கின் கூரை இடிந்தது

    திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அருகே கனமழை காரணமாக திரையரங்கின் மேற்கூரை இடிந்து விபத்திற்குள்ளானது. உள்ளே படம் பார்த்துக் கொண்டிருந்த பார்வையாளர்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.



  • May 04, 2025 18:02 IST

    விராலிமலை அருகே பழைய இரும்புக் கடையில் தீ விபத்து

    திருச்சி தேசிய நெடுஞ்சாலை மாதிரிபட்டி பிரிவு அருகே பழைய இரும்பு கடையில் தீ விபத்து நேரிட்டது. இவ்விபத்தில் சுமார் 2 லட்சத்துக்கும் அதிக மதிப்பிலான பழைய பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. தீ விபத்து குறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். வெளியேறிய கரும்புகை தேசிய நெடுஞ்சாலையில் சூழ்ந்தது. இதனால், அந்த வழியாகச் சென்ற வாகனங்கள் ஊர்ந்து சென்றன.



  • Advertisment
    Advertisements
  • May 04, 2025 16:15 IST

    நத்தம் அருகே மீன் பிடித் திருவிழா கோலாகலம்

    நத்தம் அருகே எட்டையம்பட்டி கிராமத்தில் நடந்த மீன் பிடித் திருவிழாவில் 1000 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். நத்தம், சிறுகுடி, கொட்டாம்பட்டி, மற்றும் வெளி மாவட்டங்களான சிவகங்கை, புதுக்கோட்டை மற்றும் திருச்சி மாவட்டங்களிலிருந்து சுமார் 1000 க்கும் மேற்பட்டோர் மீன்பிடித் திருவிழாவில் கலந்துகொண்டு ஊத்தா மீன் பிடி கூடையை கொண்டு மீன்களைப் பிடித்தனர். இதில் ஜிலேபி, குரவை, ரோகு, பாப்லெட் உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்கள் கிடைத்தது. மீன் பிடி பிரியர்களுக்கு மட்டும் 2 கிலோ முதல் 5 கிலோ எடை வரை மீன்கள் கிடைத்தன.



  • May 04, 2025 16:05 IST

    மதுரை ஆதீனத்தை கொல்ல முயற்சியா?- விளக்கம்

    கடந்த 2-ம் தேதி மதுரை ஆதீனம் காரில் சென்னைக்கு சென்றபோது, உளுந்தூர்பேட்டை-சேலம் சாலை ரவுண்டானா அருகே, ஆதினம் சென்ற காரும், மற்றொரு காரும் மோதிக்கொண்டன. எனினும், இதுகுறித்து எந்த தரப்பிலும் புகார் தெரிவிக்கப்படவில்லை. இதற்கிடையில், தன்னைக் கொல்ல முயற்சி நடந்ததாக மதுரை ஆதீனம் புகார் தெரிவித்துள்ளார். கொலை முயற்சிக்கான சதி எதுவும் நடந்ததாகத் தெரியவில்லை என கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸார் தெரிவித்துள்ளனர். மதுரை ஆதீனம் பயணம் செய்த வாகனத்தின் ஓட்டுநரின் கவனக்குறைவால் ஏற்பட்டதே இந்த விபத்து என்று தெரியவந்துள்ளது. சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்ததில், மதுரை ஆதீனம் பயணம் செய்த வாகனம் அதிவேகமாகச் சென்று விபத்தை ஏற்படுத்தியதும் தெரியவந்துள்ளதாக விளக்கம் அளித்துள்ளனர்.



  • May 04, 2025 14:54 IST

    நீட் தேர்வு எழுத தாலியை கழட்டி மனைவியை அனுப்பிய கணவர்

    திருவாரூரில் கடைசி நேரத்தில் நீட் தேர்வுக்கு கணவருடன் வந்த மாணவி, தாலியை கழட்டி கொடுத்துவிட்டு தேர்வு எழுதச் சென்றார்



  • May 04, 2025 14:12 IST

    நீட் தேர்வு எழுத வந்த மாணவர், வெள்ளி அரைஞாண் கொடி அணிந்திருந்ததால் அனுமதி மறுப்பு

    திருவண்ணாமலையில் நீட் தேர்வு எழுத வந்த மாணவர், வெள்ளி அரைஞாண் கொடி அணிந்திருந்ததால் அனுமதி மறுக்கப்பட்டது. மாணவனின் தந்தை, அரைஞாண் கொடியை அகற்றிய பிறகு தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டார்



  • May 04, 2025 13:40 IST

    தமிழகத்திலிருந்து நீட் தேர்வு எழுதும் முதல் திருநங்கை

    கோவையைச் சேர்ந்த 22 வயதான திருநங்கை இந்திரஜா தமிழகத்தில் இருந்து முதல் திருநங்கையாக இரண்டாவது முறை நீட் தேர்வு எழுதுகிறார்



  • May 04, 2025 12:25 IST

    பள்ளத்தில் தவறி விழுந்த தம்பதி - நிவாரணம் அறிவிப்பு

    தாராபுரம் அருகே பாலம் கட்டுவதற்காக தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் தவறி விழுந்து உயிரிழந்த தம்பதியின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணமாக வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 



  • May 04, 2025 11:41 IST

    கன்னியாகுமரி மாரத்தான் தொடக்கம்

    தி ஃபெடரல் ஆங்கில இணையதளம் மற்றும் பெதஸ்தா மருத்துவமனை நாகர்கோவில் இணைந்து நடத்திய கன்னியாகுமரி மாரத்தான் 2025 நிகழ்ச்சியை அமைச்சர் மனோ தங்கராஜ் மற்றும் பெதஸ்தா மருத்துவமனை நிர்வாக இயக்குனர் லெவின்ஸ் டென்னி கோல்ட் ஆகியோர் துவக்கி வைத்தனர். 



  • May 04, 2025 11:11 IST

    நீட் அச்சம் - விபரீத முடிவு

    ராஜஸ்தானில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த சிறுமி உரிய பாடங்களை படிக்க முடியாமல் உளைச்சலுக்கு ஆளான நிலையில் உயிரிழந்தார். 



  • May 04, 2025 11:02 IST

    முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு

    உளுந்தூர்பேட்டை கூவாகம் ஏரியில் தவறி விழுந்து உயிரிழந்த சிறுமி ஜெயலட்சுமி, சிறுவன் நித்தேஷ் ஆகியோரின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம், முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.



  • May 04, 2025 10:14 IST

    சாலையில் தோண்டப்பட்ட குழிக்குள் விழுந்து தம்பதி பலி

    இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்ற போது விபத்து, பெற்றோர் உயிரிழந்த நிலையில் குழிக்குள் விடிய விடிய கத்திய சிறுமி. சாலையில் பாலம் அமைக்கும் தனியார் நிறுவனம், பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யாத‌தே விபத்துக்கு காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.



  • May 04, 2025 10:14 IST

    படகுப்பொக்குவரத்து ரத்து

    கன்னியாகுமரியில் நிலையற்ற நீர் மட்டம் காரணமாக திருவள்ளுவர் சிலைக்கு படகுப் போக்குவரத்து தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. ஏற்கனவே சென்ற சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாக கரைக்கு திரும்ப அனுப்பிவைக்கப்படுகின்றனர். விடுமுறை தினமான இன்று அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் குவிந்திருந்த நிலையில், படகுப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. 



  • May 04, 2025 10:12 IST

    மேட்டூர் அணை நிலவரம்

    மேட்டூர் அணைக்கு நீர் வரத்து இன்று காலை நிலவரப்படி, விநாடிக்கு 4,105 கன அடியாக அதிகரித்துள்ளது.  அணையின் நீர் மட்டம் 108.12 அடியாக உயந்துள்ளது. நீர் இருப்பு 75.765 டி.எம்.சி.ஆக உள்ளது குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. 



  • May 04, 2025 10:12 IST

    மின்சாரம் பாய்ச்சி மீன்பிடிக்க முயன்ற இருவர் உயிரிழப்பு

    பெரம்பலூர் அருகே ஆற்றில் மின்சாரம் பாய்ச்சி மீன்பிடிக்க முயன்ற இருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். தொண்டமாந்துறையில் சட்டவிரோதமாக ஆற்றில் மின்சாரம் பாய்ச்சி மீன்பிடிக்க முயன்றபோது விபரீதம் நடந்தது. 



Tamilnadu Live News Udpate news updates

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: