/indian-express-tamil/media/media_files/2025/05/05/sPhnbcxJaSkMsHwzeVuI.jpg)
ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரிப்பு: தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று மாலை விநாடிக்கு 3,000 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 5,000 கன அடியாக அதிகரித்துள்ளது.
-
May 05, 2025 21:13 IST
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி 2 இளைஞர்கள் பலி
சுற்றுலா வந்த கடலூர் மாவட்டம் பண்ருட்டியைச் சேர்ந்த 20 இளைஞர்கள், ஒகேனக்கல் செமலை தோட்டம் பகுதியில் ஆற்றில் இறங்கி குளித்த போது, ஆழமான பகுதிக்கு சென்ற போது சுழலில் சிக்கி தனசேகரன், ரவி நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இருவரின் உடல்களைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
May 05, 2025 18:43 IST
கனிம முறைகேடு வழக்கு - முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயத்திற்கு சம்மன்
கனிம முறைகேடு தொடர்பான வழக்கில், முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம், வரும் ஜூன் 6-ஆம் தேதி காணொலி காட்சி மூலம் ஆஜராக வேண்டும் என்று மதுரை நீதிமன்றம் புதிய சம்மன் அனுப்பியுள்ளது.
-
May 05, 2025 18:11 IST
விஜய்க்கு சால்வை அணிய வந்த நபர் - துப்பாக்கியால் மிரட்டிய பாதுகாவலர்
மதுரை விமான நிலையத்தில், த.வெ.க தலைவர் விஜய்க்கு சால்வை அணிய வந்த நபரின் தலையை நோக்கி துப்பாக்கியை உயர்த்திய பாதுகாவலரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
-
May 05, 2025 17:12 IST
கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தூய்மைப் பணியாளர்கள், மாநகராட்சி ஒப்பந்த பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இ.எஸ்.ஐ, பி.எஃப் போன்ற தொழிலாளர் பணி பலன்களை வழங்க வேண்டும் எனக் கோரி இப்போராட்டம் நடத்தப்பட்டது.
-
May 05, 2025 16:46 IST
லஞ்சம் வாங்கிய சங்கரப்பேரி கிராம நிர்வாக அலுவலர் கைது
தூத்துக்குடி, பண்டாரம்பட்டி பகுதியில் பட்டா மாறுதலுக்காக ரூ.3000 லஞ்சம் வாங்கிய சங்கரப்பேரி கிராம நிர்வாக அலுவலர் கணேச மூர்த்தி, லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கைது
-
May 05, 2025 15:26 IST
காவல் நிலையத்தில் 3 காதல் ஜோடிகள் தஞ்சம்
ஓமலூர் - அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு அடுத்தடுத்து 3 காதல் ஜோடிகள் தஞ்சம் அடைந்தனர்.
மேட்டூர் விக்னேஷ் - ஊத்தங்கரை கீதா - கிருஷ்ணகிரியில் வேலை செய்யும் போது காதலித்து திருமணம்
அம்பாசமுத்திரம் காவலர் விக்னேஷ் - ஸ்வேதா சென்னை அறிஞர் அண்ணா சுயமரியாதை திருமண நிலையத்தில் காதல் திருமணம்
பென்னாகரம் சஞ்சய் - மேட்டூர் கலைவாணி காதல் திருமணம் செய்த 3 காதல் ஜோடிகள் பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.
-
May 05, 2025 13:49 IST
உண்மைக்கு புறம்பான தகவல் அளிக்கும் காவல்துறை: மதுரை ஆதீனம்
உளுந்தூர்பேட்டை ரவுண்டானாவில் நடந்த சம்பவம் தொடர்பான காவல் துறையின் உண்மைக்கு புறம்பான விளக்க அறிக்கையை மறுக்கின்றோம். விபத்து தொடர்பாக மதுரை ஆதீனம் இதுவரை எந்தவித புகாரையும் தெரியப்படுத்தவில்லை என காவல்துறை அறிக்கையில் பார்த்தோம். சம்பவம் நடந்த அடுத்த நிமிடமே காலை 09.42 மணிக்கு,100க்கு கால் செய்து தகவல் தெரிவித்தோம். முன்னுக்குப்பின் முரண்பாக அமைந்துள்ள காவல்துறையின் விளக்க அறிக்கை ஒரு சார்புடையதாக உள்ளதாக நாங்கள் கருதுகிறோம் என மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார்.
-
May 05, 2025 13:39 IST
த.வெ.க தொண்டர்கள் மீது மதுரை போலீசார் வழக்குப்பதிவு
சென்னை திரும்பும் விஜய்யை வரவேற்க மதுரை விமான நிலையத்தில் குவிந்த த.வெ.க தொண்டர்கள் குவிந்த நிலையில், விமான நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள தடுப்பு கம்பிகள் சேதப்படுத்தியதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, பயணிகளுக்கு தொந்தரவு செய்தல், மக்களுக்கு தொல்லை கொடுத்தல், சட்ட விரோதமாக கூடியது
உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் த.வெ.க தொண்டர்கள் மீது வழக்கு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. -
May 05, 2025 13:00 IST
போலீஸ் அறிக்கை முரணாக உள்ளது: மதுரை ஆதீனம்
“வாகனம் மோதல் விவகாரத்தில் காவல் துறையின் அறிக்கை முன்னுக்கு பின் முரணாக உள்ளது; நாங்கள் எந்தவித புகாரும் அளிக்கவில்லை என போலீஸ் கூறுவது உண்மைக்கு புறம்பானது" 15க்கும் மேற்பட்ட முறை காவல் அதிகாரிகளிடம் பேசி புகார் அளித்ததாக மதுரை ஆதீனம் தரப்பு விளக்கம் அளித்துள்ளார்.
-
May 05, 2025 12:33 IST
நீட் தேர்வு - வீட்டை விட்டு வெளியேறிய மாணவன்
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே நீட் தேர்வு எழுதிய மாணவன் வீட்டை விட்டு வெளியேறிய அதிர்ச்சி. நீட் நுழைவுத் தேர்வை ஒழுங்காக எழுதவில்லை என கடிதம் எழுதி வைத்து விட்டு மாணவன் தலைமறைவு ஆகியுள்ளார். சித்தம்பலம்புதூர் கிராமத்தை சேர்ந்த மாணவன் குறித்து பல்லடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
May 05, 2025 11:34 IST
நாகை செருதூர் மீனவர்கள் 3-வது நாளாக வேலை நிறுத்தம்
இலங்கை கடற்கொள்ளையர்களை கண்டித்து செருதூர் மீனவர்கள் மீன் இறங்கு தளத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். 400க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கரையில் நிறுத்தப்பட்டது. மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியும் தமிழக அரசு நிவாரணம் வழங்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
May 05, 2025 11:32 IST
கார் மோதி விபத்து
ஈரோடு மாவட்டம் சிவகிரியில் அதிமுக ஆர்ப்பாட்டத்துக்குச் சென்ற முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கத்தை பின்தொடர்ந்த 6 கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது.
-
May 05, 2025 11:05 IST
விஜய் வருகை- மதுரை விமான நிலையத்தில் பாதுகாப்பு
மதுரை விமான நிலையத்திற்கு விஜய் வரவுள்ள நிலையில் பலத்த சோதனைக்கு பிறகே பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஜனநாயகன் பட ஷூட்டிங்கில் பங்கேற்க கொடைக்கானல் சென்ற விஜய் மதுரை வழியாக சென்னை செல்கிறார். கொடைக்கானலில் நேற்று மாலையோடு படப்பிடிப்பு முடிந்த நிலையில் காரில் விஜய் மதுரை வருகிறார்.
-
May 05, 2025 10:11 IST
திருட வந்த இளைஞரை கட்டி வைத்த கிராம மக்கள்
2 நாட்களாக வீட்டு உபயோக பொருட்கள் திருடு போன நிலையில் திருட வந்த இளைஞரை கட்டி வைத்த கிராம மக்கள் திருநாவலூர் போலீசில் ஒப்படைத்தனர்.
-
May 05, 2025 09:54 IST
கோவை: மலையேற்றத்தில் ஈடுபட்ட கேரள மருத்துவர் பலி
பொள்ளாச்சி அருகே டாப்ஸ்லிப் மலைப் பகுதியில் மலையேற்றத்தில் ஈடுபட்ட கேரளத்தைச் சேர்ந்த மருத்துவர் மூச்சுத்திணறி பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முதற்கட்ட விசாரணையில், பலியான அஜ்சல் சில மாதங்களாக மன அழுத்தத்திற்கு மருந்துகளை உட்கொண்ட வந்தது தெரியவந்தது. -
May 05, 2025 09:52 IST
கனமழையால் மதுராந்தகத்தில் மின்சாரம் துண்டிப்பு
மதுராந்தகம் சுற்றுவட்டார பகுதியில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் 20-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்தன. இதனால், 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மின்சாரம் இல்லாமல் மக்கள் அவதியடைந்து உள்ளனர்.
-
May 05, 2025 09:51 IST
அறுவடைக்குத் தயாராக இருந்த வாழை மரங்கள் சேதம்
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் அறுவடைக்குத் தயாராக இருந்த வாழை மரங்கள் அடியோடு சாய்ந்தன. இதனால், வாழை பயிரிட்ட விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
-
May 05, 2025 09:48 IST
மதுரை ஆதீனம் ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு
மதுரை ஆதீனம் கார் ஓட்டுநர் மீது 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மதுரை ஆதீனம் கார் ஓட்டுநரின் கவனக்குறைவே முழுக்க முழுக்க விபத்துக்கு காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது. கார் விபத்து குறித்து பேசியிருந்த மதுரை ஆதீனம், தன்னை கொல்ல சதி என குற்றச்சாட்டியிருந்தார்
-
May 05, 2025 09:15 IST
கோவில் திருவிழாவில் தகராறு: கத்தியால் குத்தி சிறுவன் கொலை
கரூர் மாவட்டம் குளித்தலையில் கோவில் திருவிழாவில் ஏற்பட்ட மோதலில் கத்தியால் குத்தி சிறுவன் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 2 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.