/indian-express-tamil/media/media_files/2025/05/06/BakE6EPH9hHG7jWALzRc.jpg)
தொட்டபெட்டா காட்சி முனைக்கு செல்லத் தடை: தொட்டபெட்டா காட்சி முனைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு இன்று ஒருநாள் (மே 6) தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது. ஒற்றை காட்டுயானை தொடர்ந்து அப்பகுதியில் சுற்றிவருவதால் பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
-
May 06, 2025 21:48 IST
மதுரை மீனாட்சி அம்மன் பட்டாபிஷேக வைபவம்
மங்கள வாத்தியங்கள் முழங்க ராயர் கிரீடத்திற்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. அம்மனுக்கு ராயர் கிரீடம் சாற்றப்பட்டு, செங்கோல் வழங்கப்பட்டது. அறங்காவலர் குழு தலைவர் ருக்மணி பழனிவேல்ராசனிடம் செங்கோல் வழங்கப்பட்டது. கோவில் கணக்குப்பிள்ளை வசம் தங்க எழுதுகோல் வழங்கப்பட்டது.
-
May 06, 2025 20:39 IST
உதகை தொட்டபெட்டா காட்சிமுனையில் முகாமிட்டிருந்த ஒற்றைக் காட்டு யானை
உதகை தொட்டபெட்டா காட்சிமுனை அருகே முகாமிட்டிருந்த ஒற்றைக் காட்டு யானை, வனத்துறையினரின் 9 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு கோத்தகிரி சாலையில் உள்ள 4 ரோடு சந்திப்பு அருகே வந்தது இன்னும் சிறிது நேரத்தில் யானைக்கு மயக்க ஊசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
-
May 06, 2025 20:21 IST
ரூ.5000 லஞ்சம் வாங்கிய கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களின் சார்-பதிவாளர் கைது
விருதுநகரில் ரூ.5000 லஞ்சம் வாங்கிய கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களின் சார்-பதிவாளர் முருகன் கைது செய்யப்பட்டுள்ளார். வீட்டுக் கடன் ரத்து பத்திரம் வழங்க ஆரோக்கியசாமி என்பவரிடம் ரூ.5000 லஞ்சம் வாங்கியபோது சிக்கினர்.
-
May 06, 2025 19:41 IST
குழாய் பதிக்கும் பணியின்போது விபரீதம் - தொழிலாளி பலி
சேலத்தில் ஜே.சி.பி மூலம் குழி தோண்டி கொண்டிருந்தபோது அருகில் இருந்த கம்பம் சரிந்ததில் பெரியண்ணன் என்பவர் குழிக்குள் விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
May 06, 2025 19:39 IST
தேனி மாவட்டத்துக்கு மே 9, 12-ல் உள்ளூர் விடுமுறை - கலெக்டர் உத்தரவு
தேனி மாவட்டத்துக்கு மே 9, 12ம் தேதிகளில் உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கண்ணகி கோயில் விழா, வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் தேரோட்டத்தை ஒட்டி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் உத்தரவிட்டுள்ளார்.
-
May 06, 2025 18:41 IST
கரூரில் 28ம் தேதி உள்ளூர் விடுமுறை
கரூர் மாவட்டத்துக்கு வரும் 28ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கரூர் மகா மாரியம்மன் வைகாசி பெருவிழாவையொட்டி 28ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் ஜூன் 14ம் தேதி வேலை நாளாக மாவட்ட ஆட்சியர் அறிவித்தார்.
-
May 06, 2025 18:31 IST
மதுரை சுற்றுவட்டார பகுதிகளில் மழை
மதுரை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது. இதனிடையே, சித்திரை திருவிழா கூட்டம் மற்றும் வாகன நெரிசல் நிலவும் நிலையில், மழையும் பெய்து வருவதால் பொதுமக்கள் சிரமம் அடைந்துள்ளனர்.
-
May 06, 2025 18:07 IST
கோயில் பிரசாதத்தில் பாம்பு - பக்தர்கள் அதிர்ச்சி
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சந்திரமகுடேஸ்வரர் கோயிலில் பக்தர்களுக்கு வழங்கப்பட்ட புளியோதரையில் இறந்த நிலையில் பாம்புக் குட்டி இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து அறநிலையத்துறையில் புகாரளிக்கப்பட்டுள்ளது.
-
May 06, 2025 17:42 IST
மருதையாற்றில் தடுப்பணைக்கான டெண்டர் கோரிய நீர்வளத்துறை
அரியலூர் மாவட்டம், வாரணவாசி கிராமத்தில் மருதையாற்றின் நடுவே ரூ. 22 கோடியில் தடுப்பணை கட்டுமான பணிகளை மேற்கொள்வதற்கான டெண்டரை நீர்வளத்துறை கோரியுள்ளது. கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற அரசு விழாவில், மருதையாற்றில் தடுப்பணை கட்டப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
-
May 06, 2025 17:14 IST
வடகாடு மோதல்: 13 பேருக்கு 20-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிப்பு
புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு பகுதியில் இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதலில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் 13 பேர் கைது செய்யப்பட்டனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட அனைவருக்கும் வரும் 20-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதித்து மாவட்ட அமர்வு சார்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
May 06, 2025 17:00 IST
சிறுமியை நாயை ஏவி கடிக்கவைத்த பெண் கைது
கோவையில் 5 வயது சிறுமியை நாயை ஏவி கடிக்க வைத்த கொடூர சம்பவம் - நாயின் உரிமையாளர் செளமியா கைது செய்யப்பட்டுள்ளார். நாய்க்கடியால் காயமடைந்த சிறுமி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பொன்வேல் என்பவரது 5 வயது மகள், செளமியா வீட்டின் அருகில் விளையாடியபோது நாயை விட்டு கடிக்க வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சிறுமியின் தந்தை பொன்வேல் கோவை ராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் - நாயின் உரிமையாளர் செளமியா சிறையில் அடைப்பு. சிறுமியை கடித்த நாய், ப்ளூ கிராஸ் அமைப்பு உதவியுடன் நாய்கள் காப்பகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
-
May 06, 2025 16:47 IST
மீனாட்சி திருக்கல்யாணம் - சிறப்பு அனுமதி சீட்டு விநியோகம்
மதுரை சித்திரை திருவிழா - மீனாட்சி திருக்கல்யாணத்திற்கான சிறப்பு கட்டண அனுமதி சீட்டு விநியோகம். 8ம் தேதி நடைபெறும் மீனாட்சி திருக்கல்யாணத்தில் பங்கேற்கும் பக்தர்களுக்கு ரூ.200, ரூ.500 என 2 வகையான சிறப்பு கட்டண சீட்டு விநியோகம். ரூ.200 சிறப்பு கட்டண சீட்டு மூலம் 3000 பேரும், ரூ.500 சிறப்பு கட்டண சீட்டு மூலம் 2000-க்கும் மேற்பட்டோருக்கும் அனுமதி. ஆன்லைன் மூலம் புக் செய்த பொதுமக்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு சிறப்பு கட்டண பாஸ் வழங்கப்படுகிறது
-
May 06, 2025 16:32 IST
தேனி மாவட்டத்திற்கு மே 9, 12 உள்ளூர் விடுமுறை
தேனி மாவட்டத்தில் மே 9 மற்றும் 12 ஆகிய இரு நாட்கள் உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் உத்தரவு வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் சித்திரைத் தேரோட்டம் மற்றும் மங்கலதேவி கண்ணகி கோயில் சித்திரை முழுநிலவு திருவிழாவை ஒட்டி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
May 06, 2025 15:36 IST
அனுமதி பெற்றே, தகன மேடை கட்டப்பட்டது
கோவை மாவட்டம் இக்கரை போளுவாம்பட்டியில் அனைத்து அனுமதிகளும் பெற்ற பிறகே, ஈஷா அறக்கட்டளை சார்பில் எரிவாயு தகன மேடை கட்டப்பட்டுள்ளதாக கோவை மாவட்ட ஆட்சியர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் உரிய அனுமதி பெறாமல் சட்ட விரோதமாக எரிவாயு தகன மேடை கட்டப்படுவதாக கூறி சுப்ரமணியம் என்பவர் வழக்கு கொடுத்துள்ளார்.
-
May 06, 2025 14:29 IST
தேனி - சுருளி அருவியில் குளிக்க தடை
தேனி மாவட்டம் சுருளி அருவியில் நேற்று குளிக்கச் சென்ற 10 வயது சிறுவன், தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில், சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. விசாரணை முடிந்த பிறகு உரிய பாதுகாப்பு கட்டுப்பாடுகளுடன் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்க வனத்துறை முடிவு செய்துள்ளது.
-
May 06, 2025 13:48 IST
மதுரை ஆதினம் மீது நடவடிக்கை தேவை - திருமாவளவன்
இரு மதங்களுக்கு இடையே மோதலை ஏற்படுத்தும் விதமாக உண்மைக்கு புறம்பான தகவலை கூறிய மதுரை ஆதினம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சீர்காழியில் வி.சி.க தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்
-
May 06, 2025 13:15 IST
முன்னாள் பா.ஜ.க பெண் நிர்வாகி கொலை வழக்கு; 3 பேர் நீதிமன்றத்தில் சரண்
பட்டுக்கோட்டையில் முன்னாள் பா.ஜ.க பெண் நிர்வாகி கொலை வழக்கில் 3 பேர் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளனர்
-
May 06, 2025 13:06 IST
நகை அடகு கடையில் 250 சவரன் கொள்ளை – அரியலூரில் பரபரப்பு
அரியலூர் சின்னகடை வீதியில் உள்ள நகை அடகு கடையில் 250 சவரன் தங்க நகைகள், 8 கிலோ வெள்ளி, ரூ.5 லட்சம் ரொக்கம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. நகை அடகுக் கடை உரிமையாளர் விகாஸ் ராஜஸ்தான் சென்ற நிலையில், பணியாளர் ஆசாத் லோடா என்பவரிடம் கடையை ஒப்படைத்துவிட்டு சென்றுள்ளார். கடந்த 3ம் தேதி பணியாளர் ஆசாத் லோடாவை காணவில்லை என்றும், அவரது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு உள்ளதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. நகைகள் காணாமல் போனது குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், அரியலூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்
-
May 06, 2025 12:53 IST
மாநாடு - மாற்று வழியில் செல்ல அறிவுறுத்தல்
வன்னியர் சங்கம் சார்பில் மாமல்லபுரத்தில் மே 11-ல் நடைபெறவுள்ள சித்திரை முழுநிலவு இளைஞர் பெருவிழா மாநாட்டிற்கு வரும் வாகனங்கள் மரக்காணம் கிழக்கு கடற்கரை சாலை வழியாக செல்லாமல் மாற்று வழியில் செல்ல காவல்துறை உத்தரவு
-
May 06, 2025 12:34 IST
காட்டுயானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க உத்தரவு
தொட்டபெட்டா காட்சிமுனை பகுதியில் முகாமிட்டுள்ள ஒற்றை காட்டுயானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க தமிழக வனத்துறை உத்தரவு
இரவு முழுவதும் ஒற்றை யானையை விரட்டும் வனத்துறையினரின் முயற்சி தோல்வி
தற்போது யானையை டிரோன் மூலம் தேடும் பணி தீவிரம்
யானை தென்பட்டதும் மயக்க ஊசி செலுத்தி பிடிக்க திட்டம்
-
May 06, 2025 11:24 IST
கூட்டமாக முகாமிட்ட யானைகள்: கொடைக்கானல் பள்ளங்கி மக்கள் அச்சம்
கொடைக்கானல்: பள்ளங்கி கோம்பை பகுதியில் யானைகள் கூட்டமாக முகாமிட்டுள்ளதால் மக்கள் அச்சம். யானைகள் விவசாய பயிர்களை நாசம் செய்வது தொடர்வதால், அவற்றை விரட்டுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை
-
May 06, 2025 10:21 IST
பா.ஜ.க நிர்வாகி வெட்டிக் கொலை
தஞ்சாவூர், பட்டுக்கோட்டை அருகே பா.ஜ.க பெண் நிர்வாகி மர்ம நபர்களால் வெட்டி படுகொலை. முன்விரோதம் காரணமாக சரண்யா கொல்லப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகம்
-
May 06, 2025 10:11 IST
புதுக்கோட்டை வடகாடு வழித்தடத்தில் பேருந்துகள் இயக்கம் நிறுத்தம்
இரு தரப்பு மோதலில் அரசு பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்ட நிலையில், புதுக்கோட்டை, வடகாடு வழித்தடத்தில் பேருந்துகள் இயக்கம் நிறுத்தம். போலீசாரிடம் இருந்து அறிவுறுத்தல் வரும் வரை பேருந்துகள் இயக்கப்படாது என புதுக்கோட்டை போக்குவரத்துக் கழக மேலாளர் முகமது சலீம் அறிவிப்பு
-
May 06, 2025 09:07 IST
அரசுப் பேருந்து, பால் வேன் நேருக்குநேர் மோதி 3 பேர் பலி
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அரசுப் பேருந்து, பால் வேன் நேருக்குநேர் மோதி ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து நள்ளிரவு ஒரு மணிக்கு நிகழ்ந்துள்ளது. பால் வேனில் பயணம் செய்த, ஆறுமுகம், கருணா, தமிழ்பாண்டியன் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பால் வேனை ஓட்டிய ரூபன், அரசு பஸ் டிரைவர் நாகராஜ், கண்டக்டர் செல்வேந்திர பிரசாத் ஆகியோர் ஆபத்தான நிலையில், மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.
-
May 06, 2025 09:06 IST
திருவள்ளூர்: கோவில் குளத்தில் மூழ்கி 3 பேர் உயிரிழப்பு
திருவள்ளூர் மாவட்டம் வீரராகவ பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழாவில், வேத பாராயணம் படிக்க வந்த 3 பேர் குளத்தில் மூழ்கி உயிரிழந்தனர். கால் வழுக்கியதில் அடுத்தடுத்து மூவரும் கீழே விழுந்தனர். உயிரிழந்தவர்கள் குன்றத்தூரை சேர்ந்த ஹரிஹரன்,16, அம்பத்தூரை சேர்ந்த வெங்கட்ராமன், 17, தென்காசியை சேர்ந்த வீரராகவன், 24, என அடையாளம் காணப்பட்டுள்ளனர். சடலங்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-
May 06, 2025 09:04 IST
இருதரப்பு மோதல் - புதுக்கோட்டையில் 14 பேர் கைது
வடகாட்டில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில், குடியிருப்புப் பகுதிகளுக்கு தீ வைப்பு, 5 பேருக்கு அறிவாள் வெட்டு, 4 காவலர்கள் மீது தாக்குதல் என பரவும் செய்தி தவறானது என புதுக்கோட்டை காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. மதுபோதையில் இருதரப்பு இளைஞர்களிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர் என விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக 14 பேரை கைது செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.