Coimbatore, Madurai, Trichy News Updates: மதுரை ஆதீனம் விவகாரம் - கார் ஓட்டுநரிடம் தனிப்படை டி.எஸ்.பி. விசாரணை

கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Madurai Adeenam replied to What is the reason for the defeat of ADMK in Tamil Nadu and BJP in Ayodhya
  • May 07, 2025 17:31 IST

    மதுரை ஆதீனம் விவகாரம் - கார் ஓட்டுநரிடம் தனிப்படை டி.எஸ்.பி. விசாரணை

     

    மதுரை ஆதீனம் கார் ஓட்டுநர் செல்வகுமாரிடம் தனிப்படை டி.எஸ்.பி. பார்த்திபன் விசாரணை நடத்தி வருகின்றனர். உளுந்தூர்பேட்டை அருகே நடந்த கார் விபத்து தொடர்பாக மதுரை ஆதின கார் ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. உளுந்தூர்பேட்டை காவல் ஆய்வாளர் அலுவலகத்தில் ஓட்டுநர் -செல்வகுமாரிடம் டி.எஸ்.பி. விசாரணை நடத்தி வருகின்றனர்.



  • May 07, 2025 14:35 IST

    தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

    புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி, தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் கனமழை பெய்யும்

    கடலூர், கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

    - வானிலை ஆய்வு மையம் தகவல்



  • Advertisment
  • May 07, 2025 11:24 IST

    திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலையம் 9ம் தேதி திறப்பு

    திருச்சியில் ரூ.246 கோடி செலவில் கட்டப்பட்ட பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் 2025 மே 9 அன்று முதல்வர் மு.க. ஸ்டாலினால் திறக்கப்படவுள்ளது. தினசரி 3200 பேருந்துகளைச் சமாளிக்கும் திறன் கொண்டது. நகர்ப்புற மற்றும் வெளியூர் பஸ்களுக்கான தனித்தனி ஏற்பாடுகள், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



  • May 07, 2025 10:11 IST

    அங்கன்வாடி மையங்களுக்கு 15 நாட்கள் கோடை விடுமுறை

    கோடை வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் நோக்கில் நடப்பாண்டில் வருகிற 11-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை 15 நாட்களுக்கு குழந்தைகள் மையங்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்படுவதாகவும் அரசாணையில் தெரிவித்துள்ளது. மேலும், அந்த நாட்களில் குழந்தைகளுக்கு நாள் ஒன்றுக்கு 50 கிராம் வீதம் 750 கிராம் சத்துமாவினை கோடை விடுமுறைக்கு முன்னர் வீட்டிற்கு எடுத்துச் சென்று பயன்படுத்தும் வகையில் பயனாளிகளுக்கு வழங்கவும் அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.



  • Advertisment
    Advertisements
  • May 07, 2025 09:47 IST

    தஞ்சை தேரோட்டம்

    உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயில் தேரோட்டம் மிக விமரிசையாக நடைபெற்றது. 



  • May 07, 2025 09:44 IST

    சித்ரா பவுர்ணமி: விழுப்புரம்-தி.மலை சிறப்பு ரயில்கள்

    திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் சித்ரா பவுர்ணமி விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள். எனவே கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையிலும், பக்தர்களின் வசதிக்காகவும் விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு தெற்கு ரெயில்வே நிர்வாகம் சார்பில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. விழுப்புரம் ரயில் நிலையத்தில் இருந்து 11, 12-ந் தேதிகளில் காலை 9.25 மணிக்கு புறப்படும் விழுப்புரம்-திருவண்ணாமலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் (வண்டி எண் 06130) காலை 11.10 மணிக்கு திருவண்ணாமலை ரயில் நிலையத்தை சென்றடைகிறது. அதேபோல் மறுமார்க்கத்தில் திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் இருந்து 11, 12-ந் தேதிகளில் பிற்பகல் 12.40 மணிக்கு புறப்படும் திருவண்ணாமலை- விழுப்புரம் முன்பதிவில்லா சிறப்பு ரயில் (வண்டி எண் 06129) மதியம் 2.15 மணிக்கு விழுப்புரம் ரயில் நிலையத்தை வந்தடைகிறது.



Tamilnadu News Latest Madurai Trichy Coimbatore

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: