Coimbatore, Madurai, Trichy News Highlights: மிஸ் திருநங்கை அழகிப் போட்டிக்கு சிறப்பு விருந்தினராக பங்கேற்ற விஷால்; மேடையில் மயங்கியதால் பரபரப்பு

கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Vishal fainted

மேட்டூர் அணை நிலவரம்: மேட்டூர் அணைக்கு இன்று காலை நிலவரப்படி, நீர் வரத்து விநாடிக்கு 876 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர் மட்டம் 108.19 அடியாகவும், நீர் இருப்பு 75.856 டி.எம்.சி. ஆகவும் உள்ளது. குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1000 கன அடி தண்ணீர் தொடர்ந்து வெளியேற்றப்படுகிறது. 

Advertisment

குமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்: வார இறுதி நாளான இன்று சூரிய உதயத்தை காண கடற்கரையில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். சன்ரைஸ் பாயின்ட், திரிவேணி சங்கமம், குமரி பகவதி அம்மன் கோவில் கிழக்கு வாசல், வாவுத்துறை தூண்டில் வளைவு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரித்ததால் கடைகளின் வியாபாரமும் களைகட்டியுள்ளது.

  • May 11, 2025 22:15 IST

    மேடையில் மயங்கி விழுந்த விஷால்

    விழுப்புரத்தில் நடைபெற்ற மிஸ் திருநங்கை அழகிப் போட்டிக்கு சிறப்பு விருந்தினராக நடிகர் விஷால் கலந்து கொண்டார். அப்போது, திடீரென மேடையிலேயே அவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, நடிகர் விஷாலை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.



  • May 11, 2025 17:10 IST

    அனல்மின் நிலையத்தில் டீசல் பைப் லைனில் உடைப்பு: மின் உற்பத்தி பாதிப்பு

    மேட்டூர் அனல்மின் நிலையத்தில் டீசல் பைப் லைனில் உடைப்பு ஏற்பட்டு டீசல் வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், உடனடியாக தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீ விபத்து ஏற்படாமல் தீயணைப்புத்துறையினர்  நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். உரிய நேரத்தில் நடவடிக்கை எடுத்ததால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக முதல் அலகு மற்றும் 3வது அலகில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.



  • Advertisment
    Advertisements
  • May 11, 2025 16:00 IST

    ஆயுர்வேத மருத்துவரைக் கடத்திய 5 பேர் கைது

    தஞ்சாவூரில் கமிஷன் தொகை கேட்டு ஆயுர்வேத மருத்துவர் கடத்திய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரூ.92 லட்சம் கடன் வாங்கிக் கொடுத்ததற்கு ரூ.10 லட்சம் கமிஷன் தராததால் கடத்தல் சம்பவம் நடந்துள்ளது



  • May 11, 2025 12:16 IST

    மதுரை மாநகர் வந்தடைந்த கள்ளழகர்

    மூன்றுமாவடி பகுதிக்கு வந்தடைந்த கள்ளழகரை "கோவிந்தா.. கோவிந்தா" என முழங்கி பக்தர்கள் வரவேற்பு
    கண்டாங்கி பட்டுடுத்தி தங்க பல்லக்கில் வந்தடைந்த கள்ளழகர்



  • May 11, 2025 11:42 IST

    நெடுஞ்சாலையில் சரக்கு லாரி விபத்து

    பணகுடி அருகே நெல்லை - குமரி தேசிய நெடுஞ்சாலையில் சரக்கு லாரி கவிழ்ந்து விபத்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கனரக லாரி தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்து விபத்து



  • May 11, 2025 11:25 IST

    கரூர் மகா மாரியம்மன் கோயில் வைகாசி பெருவிழா

    கரூர் மகா மாரியம்மன் கோயில் வைகாசி பெருவிழா கம்பம் வழங்கும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

    பாலம்மாள்புரத்தில் இருந்து வேப்பிலை, மஞ்சள் மற்றும் குங்குமத்தில் அலங்கரிக்கப்பட்ட கம்பம், 2 கிலோமீட்டர் தூரம் தோளில் சுமந்து வரப்பட்டு கோயில் அறங்காவலரிடம் ஒப்படைக்கப்பட்டது.



  • May 11, 2025 10:07 IST

    ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் கணக்கெடுப்பு பணி

    ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் மழைக்காலத்திற்கு முந்தைய விலங்குகள் கணக்கெடுப்புப் பணி தொடங்கியது. இன்று தொடங்கி 17ம் தேதி வரை நடக்க உள்ள கணக்கெடுப்பில் 186 களப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். 



  • May 11, 2025 09:34 IST

    இருட்டுக் கடை - மீண்டும் ஒரு பொது அறிவிப்பு

    இருட்டுக்கடையின் நிறுவனர் கிருஷ்ண சிங் சகோதரரின் பேரன் பிரேம் ஆனந்த் சிங் பொது அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்து வாரிசு உரிமை சட்டப்படி பிரேம் ஆனந்த் சிங் மட்டுமே வாரிசு ஆவார். பிரேம் ஆனந்த் சிங்கிற்கு மட்டுமே இருட்டுக் கடையும் அதன் சொத்துகளும் சேரத்தக்கது என வெளியிட்டுள்ளார். தற்போதைய உரிமையாளர் கவிதா சிங் அவரது சகோதரர் நயன் சிங் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



  • May 11, 2025 09:30 IST

    `வைகை வீரன்' புகார் செயலி அறிமுகம்

    மதுரை சித்திரைத் திருவிழா பாதுகாப்பு பணிகள் தீவிரம், வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் பகுதியில், மூன்றடுக்கு தடுப்பு வேலி அமைத்துள்ள போலீசார் பக்தர்களின் பாதுகாப்புக்காக `வைகை வீரன்' புகார் செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. 



  • May 11, 2025 09:30 IST

    நெய்வேலி என்எல்சி-யில் தீ விபத்து

    நெய்வேலி, என்எல்சி 2வது அனல் மின் நிலையத்தில் டிரான்ஸ்பார்மரில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.  அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், கோடிக்கணக்கில் பொருட்கள் சேதமானதாக தகவல் வெளியாகி உள்ளது.



  • May 11, 2025 09:29 IST

    மதுரை மாநகருக்குள் கள்ளழகர்!

    சித்திரை திருவிழாவையொட்டி தங்க பல்லக்கில் பக்தர்கள் புடைசூழ அழகர் கோயிலில் இருந்து கள்ளழகர் மதுரை வந்தார். மதுரை மக்கள் சர்க்கரை கிண்ணத்தில் தீபம் ஏற்றை அழகரை வரவேற்றனர்.



  • May 11, 2025 09:27 IST

    குமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

    வார இறுதி நாளான இன்று சூரிய உதயத்தை காண கடற்கரையில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். சன்ரைஸ் பாயின்ட், திரிவேணி சங்கமம், குமரி பகவதி அம்மன் கோவில் கிழக்கு வாசல், வாவுத்துறை தூண்டில் வளைவு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரித்ததால் கடைகளின் வியாபாரமும் களைகட்டியுள்ளது.



  • May 11, 2025 09:27 IST

    மேட்டூர் அணை நிலவரம்

    மேட்டூர் அணைக்கு இன்று காலை நிலவரப்படி, நீர் வரத்து விநாடிக்கு 876 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர் மட்டம் 108.19 அடியாகவும், நீர் இருப்பு 75.856 டி.எம்.சி. ஆகவும் உள்ளது. குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1000 கன அடி தண்ணீர் தொடர்ந்து வெளியேற்றப்படுகிறது. 



news updates Tamil News Live Update

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: