/indian-express-tamil/media/media_files/2025/05/13/aA4ZBdtX4f6YRo3LQEnt.jpg)
பொள்ளாச்சி பாலியல் வழக்கு: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கோவை மகளிர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான 9 பேர், சேலம் மத்திய சிறையில் இருந்து கோவைக்கு அழைத்து வரப்பட்டனர்
கூத்தாண்டவர் திருவிழா: உளுந்தூர்பேட்டை அருகே உலக பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருநங்கைகள் தாலி கட்டிக் கொள்ளும் நிகழ்ச்சி இன்று மாலை நடைபெற உள்ளது. நாளை காலை தேரோட்டம், 15ம் தேதி விடையாத்தை, 16ம் தேதி தர்மர் பட்டாபிஷேகத்துடன் 18 நாள் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது.
-
May 13, 2025 19:59 IST
பொள்ளாச்சி பாலியல் வழக்கின் தீர்ப்பு இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படாது என தகவல்
பொள்ளாச்சி பாலியல் வழக்கின் தீர்ப்பு இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்களின் விவரங்கள் குறிப்பிடப்பட்டிருப்பதால், புகார்தாரர்கள், குற்றவாளிகள் தரப்பினர் மட்டும் தீர்ப்பின் நகலை நீதிமன்றத்தில் பெறலாம் என்று கூறப்பட்டுள்ளது.
-
May 13, 2025 18:47 IST
பொள்ளாச்சி வழக்கு - சேலம் மத்திய சிறைக்கு அழைத்து செல்லப்படும் குற்றவாளிகள்
பொள்ளாச்சி பாலியல் துன்புறுத்தல் வழக்கில், குற்றவாளிகளுக்கு சாகும் வரை சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ள நிலையில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் குற்றவாளிகள் 9 பேரும் சேலம் மத்திய சிறைக்கு அழைத்து செல்லப்படுகின்றனர்.
-
May 13, 2025 18:16 IST
பொள்ளாச்சி பாலியல் வழக்கு: பெண்களுக்கு நம்பிக்கையை கொடுத்த தீர்ப்பு - கனிமொழி
பொள்ளாச்சி பாலியல் வழக்கின் தீர்ப்பு, பெண்களுக்கு நம்பிக்கையை அளித்துள்ளது. தி.மு.க ஆட்சிக்கு வந்தால், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி பெற்றுத் தருவோம் என்ற வாக்குறுதியை நிரூபித்துள்ளோம். கடந்த அ.தி.மு.க ஆட்சியில் குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே நினைத்தனர் என தி.மு.க எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்
-
May 13, 2025 17:24 IST
பல்லவன் விரைவு ரயில் பெண்ணாடம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும்: தெற்கு ரயில்வே
வரும் 15ம் தேதி முதல் சென்னை - காரைக்குடி இடையே இயக்கப்படும் பல்லவன் விரைவு ரயில் பெண்ணாடம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
-
May 13, 2025 17:23 IST
ஓடும் பேருந்தில் இருந்து தவறி விழுந்து குழந்தை உயிரிழப்பு
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே அரசு பேருந்தில் பெற்றோர் வைத்திருந்த குழந்தை தவறி கீழே விழுந்து உயிரிழப்பு. பேருந்தின் முன்பக்க கதவு திறந்து இருந்ததால் இருக்கையில் அமர்ந்திருந்தவர் வைத்திருந்த குழந்தை தவறி கீழே விழுந்தது
-
May 13, 2025 17:20 IST
பொள்ளாச்சி வழக்கை சிபிஐக்கு மாற்ற காரணம் திமுக கொடுத்த அழுத்தம் தான்: கனிமொழி
தனது ஆட்சியில் நடந்த குற்றத்தை தன்னுடைய நிர்வாகமே விசாரிக்கக் கூடாது என்ற எண்ணத்தில் எல்லாம், எடப்பாடி பழனிசாமி பொள்ளாச்சி வழக்கை சிபிஐக்கு மாற்றவில்லை. இவ்விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்யவில்லை, விசாரணை இல்லை, குற்றவாளிகள் ஆட்சியாளர்களால் காப்பாற்றப்படுகின்றனர் என்பதால் எதிர்க்கட்சியான திமுக உள்ளிட்ட பல தரப்பிலும் இருந்து வந்த அழுத்தம், போராட்டங்களால், வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றும் நிலைக்கு எடப்பாடி பழனிசாமி தள்ளப்பட்டார் என திமுக எம்.பி. கனிமொழி கூறியுள்ளார்.
-
May 13, 2025 16:35 IST
பொள்ளாச்சி பாலியல் வழக்கில், நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறோம்: அன்புமணி ராமதாஸ்
"பொள்ளாச்சி பாலியல் வழக்கில், நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறோம். பாதிக்கப்பட்ட பெண்கள் ஒவ்வொருவருக்கும் ரூ. 1 கோடி இழப்பீடாக வழங்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
-
May 13, 2025 15:42 IST
மாணவர்களுக்கு ட்ரோன் பயிற்சி
Credit: Sun news
#NewsUpdate | நெல்லை டவுனில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு ட்ரோன் இயக்குவது தொடர்பாக பயிற்சி
— Sun News (@sunnewstamil) May 13, 2025
கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்கும் வகையில் ‘நட்சத்திரம் தொடுவோம்’ என்ற தலைப்பில் இந்த 2 நாட்கள் பயிற்சி முகாம் நடைபெற்றது#SunNews | #Nellai | #TNSchools | #Drone pic.twitter.com/fAK5ockd26 -
May 13, 2025 14:53 IST
தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் இன்று முதல் வரும் 16ம் தேதி வரை, 4 நாட்கள் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு –
இன்று 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
கோவை, நீலகிரியில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
சென்னை வானிலை ஆய்வு மையம்
-
May 13, 2025 14:35 IST
பூனைக்குட்டி மீட்பு
விருதுநகர் மாவட்டம் கொண்டையாம்பட்டி பகுதியில் 30 அடி ஆழ தண்ணீர் இல்லாத கிணற்றில் தவறி விழுந்த பூனைக்குட்டியை வத்திராயிருப்பு தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர்.
-
May 13, 2025 14:09 IST
பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பை வரவேற்று தவெக தலைவர் விஜய் அறிக்கை
"பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளுக்கு, சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது வரவேற்கத்தக்கது. கடந்த ஆறு ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில், பாதிக்கப்பட்டவர்களுக்குச் சற்று ஆறுதல் அளிக்கும் விதமாக இந்தத் தீர்ப்பு இருக்கும் என நம்புகிறேன்' என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
-
May 13, 2025 13:48 IST
பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு -கனிமொழி எம்.பி. வரவேற்பு
“பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகளுக்கு சாகும் வரை சிறை என்ற கடுமையான தண்டனை வழங்கப்பட்டது மிகவும் வரவேற்கத்தக்கது! தங்களுக்கு எதிரான குற்றங்களை பெண்கள் பொறுத்துக்கொள்ள தேவையில்லை. பாதிக்கப்பட்ட பெண்கள் தைரியமாக புகார் அளித்தால் நிச்சயமாக நியாயம் கிடைக்கும்” என்று கனிமொழி, திமுக எம்.பி தெரிவித்துள்ளார்.
-
May 13, 2025 13:47 IST
பொள்ளாச்சி பாலியல் வழக்கு: 9 குற்றவாளிகளுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை - சிறப்பு மகிளா நீதிமன்றம் தீர்ப்பு !!!
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளதாக சி.பி.ஐ அரசு தரப்பு வழக்கறிஞர் சந்திரமோகன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். கூட்டு பாலியல் பலாத்கார குற்றத்திற்காக இந்த தண்டனை வழங்கப்பட்டு உள்ளதாகவும், மற்ற சட்டப் பிரிவுகளின் கீழ் தனித் தனியாக தண்டனைகள் விதிக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறினார்.
பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மொத்தமாக 85 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இந்த தீர்ப்பு மிகவும் வரவேற்கத்தக்கது. சி.பி.ஐ யின் முயற்சி வீண் போகவில்லை. இந்த வழக்கில் நியாயமான தீர்ப்பு கிடைத்து உள்ளது என்று நாங்கள் கருதுகிறோம். ஒவ்வொருவருக்கும் எவ்வளவு சதவீதம் இழப்பீடு வழங்கப்பட வேண்டுமோ, அதற்கேற்ப பிரித்து வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது என்றார்.
கடைசி வாதத்தில், சாட்சி விசாரணைகளின் அடிப்படையில் வாதங்கள் நடைபெற்றதாகவும், விசாரணையில் பெறப்பட்ட அனைத்து சாட்சி மற்றும் தகவல்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்ததாகவும் அவர் தெரிவித்தார். நீதிமன்றம் அவற்றை சரி பார்த்து இன்று தீர்ப்பு வழங்கி உள்ளது. அபராத தொகையானது குற்றவாளிகளின் தண்டனையை பொறுத்து ஒதுக்கப்பட்டு உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். நீதிபதி தீர்ப்பின் போது எந்த மேற்கோள்களையும் காட்டவில்லை என்றும் அவர் கூறினார்.
மேல்முறையீடு குறித்தான கேள்விக்கு, எதிர் தரப்பினர் மேல்முறையீடு செய்வதற்கு வாய்ப்புகள் இருப்பதாக தெரிவித்தார். அதனைப் பற்றி நாங்கள் தீர்மானிக்க முடியாது. 30 நாட்களுக்குள் அவர்கள் மேல்முறையீடு செய்வதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. என்னை பொறுத்த வரை நீதிமன்றம் நல்ல முறையில் விசாரித்து பரிசீலனை செய்து தீர்ப்பு வழங்கி இருக்கிறது. இந்த தண்டனை நிலை நிறுத்தப்படும் என்று தான் நான் நம்புகிறேன் என்று அவர் கூறினார். வழக்கின் நெடிய பயணம் குறித்து பேசிய அவர், இந்த வழக்கில் அதிகபட்ச தண்டனையான சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது என்றார். ஒன்பது குற்றவாளிகளுக்கும் தலா ஒரு லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. வாய்மொழி சாட்சிகள், மின்னணு சாட்சிகள் மற்றும் நிபுணத்துவ சாட்சிகள் இந்த வழக்கில் முக்கிய அம்சங்களாக கருதப்பட்டதாகவும், அவர் குறிப்பிட்டார்.
இந்த வழக்கு 8 தனித் தனி புகார்களின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்டு இருந்தாலும், அனைத்தும் ஒரே சம்பவத்துடன் தொடர்புடையவை என்பதால் ஒன்றாக இணைத்து விசாரிக்கப்பட்டது. தண்டனை விவரங்களை குறிப்பிட்ட அவர், சபரிராசனுக்கு நான்கு ஆயுள் தண்டனைகளும், திருநாவுக்கரசுக்கு ஐந்து ஆயுள் தண்டனைகளும், சதீஷ்க்கு மூன்று ஆயுள் தண்டனைகளும், வசந்தகுமாருக்கு இரண்டு ஆயுள் தண்டனைகளும், மணிவண்ணனுக்கு ஐந்து ஆயுள் தண்டனைகளும், பாபுவிற்கு ஒரு ஆயுள் தண்டனையும், ஹேரேன் பாலுக்கு மூன்று ஆயுள் தண்டனைகளும், அருளானந்தத்திற்கு ஒரு ஆயுள் தண்டனையும், அருண்குமாருக்கு ஒரு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.
திருநாவுக்கரசுக்கு அதிகபட்சமாக ஐந்து ஆயுள் தண்டனைகள் விதிக்கப்பட்டதற்கு காரணம், அவர் ஐந்து பெண்கள் பாதிக்கப்பட்ட வழக்குகளில் சம்பந்தப்பட்டு இருந்தது தான் என்றும் அவர் விளக்கினார். இந்த வழக்கில் மகேந்திரா சாவ்லா வழக்கின் தீர்ப்பு ஒரு முன் உதாரணமாக எடுத்துக் கொள்ளப்பட்டதாகவும் அவர் கூறினார். சி.பி.ஐ விசாரணைக்கு வந்த பிறகு பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர்கள் ஒருபோதும் வெளியிடப்படவில்லை என்றும், ரகசிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு இன்று தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இன்று தீர்ப்பு வழங்கப்பட்ட அனைத்து கைதிகளும் சேலம் மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்படுகிறார்கள் என்றும் வழக்கறிஞர் சுரேந்திரமோகன் கூறினார்.
-
May 13, 2025 13:35 IST
"மேல்முறையீடு செய்தாலும் இந்த தண்டனை நிலைநிறுத்தப்படும்" - சி.பி.ஐ தரப்பு வழக்கறிஞர் சுரேந்திர மோகன் நம்பிக்கை
பொள்ளாச்சி வழக்கில் பாதிக்கப்பட்ட 8 பெண்களுக்கு ரூ.85 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் ஆணை. பாதிக்கப்பட்ட பெண்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு என்று அரசு வழக்கறிஞர் சுரேந்திர மோகன் தெரிவித்துள்ளார். "மேல்முறையீடு செய்தாலும் இந்த தண்டனை நிலைநிறுத்தப்படும்" என்று சி.பி.ஐ தரப்பு வழக்கறிஞர் சுரேந்திர மோகன் நம்பிக்கையாக தெரிவித்துள்ளார்.
குற்றம் சாட்டப்பட்டவர்களின் விவரங்கள் பின்வருமாறு:
A1 சபரிராஜன்- 4 ஆயுள் தண்டனை
A2 திருநாவுக்கரசர்- 5 ஆயுள் தண்டனை
A3- சதீஷ் மூன்று ஆயுள் தண்டனை
A4- வசந்தகுமார் இரண்டு ஆயுள் தண்டனை
A5 மணிவண்ணன் ஐந்து ஆயுள் தண்டனை
A6 பாபு ஒரு ஆயுள் தண்டனை
A7 ஹெரன்பால் மூன்று ஆயுள் தண்டனை
A8 அருளானந்தம் ஒரு ஆயுள் தண்டனை
A9 அருண்குமார் ஒரு ஆயுள் தண்டனை
-
May 13, 2025 13:00 IST
5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி ஆகிய 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
-
May 13, 2025 12:54 IST
குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை
பொள்ளாச்சி பாலியல் வழக்கில், குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மொத்தமாக ரூ. 85 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
May 13, 2025 12:32 IST
மாதர் சங்கத்தினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு வந்துள்ளது. இதனை மாதர் சங்கத்தினர் இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர்.
-
May 13, 2025 12:11 IST
"76 குற்றச்சாட்டுகளில் 66 குற்றச்சாடுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன" -சுரேந்திர மோகன், சிபிஐ தரப்பு வழக்கறிஞர்
“பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் அரசுத் தரப்பில் விசாரிக்கப்பட்ட 48 சாட்சிகளில் ஒன்று கூட பிறழ் சாட்சியாக மாறவில்லை. பாதிக்கப்பட்ட அனைத்துப் பெண்களும் பயமின்றி, சுதந்திரமாக சாட்சியளித்துள்ளார்கள். 9 பேர் மீதான 76 குற்றச்சாட்டுகளில் 66 குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன” என்று சிபிஐ தரப்பு வழக்கறிஞர் சுரேந்திர மோகன் கூறியுள்ளார்.
-
May 13, 2025 11:41 IST
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு - குற்றவாளிகளுக்கு சாகும் வரை ஆயுள் கோரி வாதம்
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை கோரியுள்ளதாக அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
-
May 13, 2025 11:40 IST
வழக்கின் தண்டனை - பாடமாக இருக்க வேண்டும்
பொள்ளாச்சி வழக்கு - மதியம் 12 மணிக்கு தண்டனை விவரம் அறிவிக்கப்பட உள்ளது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை வைத்துள்ளோம். பாதிக்கப்பட்ட பெண்கள் பயமின்றி சுதந்திரமாக சாட்சி அளித்துள்ளனர். இந்த வழக்கின் தண்டனை மற்றவர்களுக்கு பாடமாக இருக்க வேண்டும். இது போன்ற தவறுகள் மீண்டும் நடக்க கூடாது, தண்டனை கடுமையாக இருக்க வேண்டும் என அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
-
May 13, 2025 11:17 IST
பொள்ளாச்சி வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்
பொள்ளாச்சியில் பல இளம்பெண்களை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததோடு அதனை வீடியோ பதிவு செய்து மிரட்டிய வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் எனக் கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தண்டனை விவரங்கள் பிற்பகல் 12 மணிக்கு வெளியிடப்படும் என நீதிபதி நந்தினி தேவி அறிவித்துள்ளார். நாட்டையே உலுக்கிய பரபரப்பு வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் என நீதிபதி அறிவித்துள்ளதால் பலரும் பட்டாசு வெடித்து கொண்டாடுகின்றனர்.
-
May 13, 2025 10:45 IST
பொள்ளாச்சி வழக்கு - 9 பேரும் குற்றவாளிகள்
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என்று நீதிபதி அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளார். தண்டனை விவரம் 12 மணிக்கு அறிவிக்கப்படும் எனவும் நீதிபதி நந்தினி தேவி கூறியுள்ளார்.
-
May 13, 2025 10:44 IST
பொள்ளாச்சி வழக்கு - தீர்ப்பு வாசிப்பு
நீதிமன்ற அறையின் கதவுகள் அனைத்தும் மூடப்பட்டு கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினிதேவி தீர்ப்பை வாசித்து வருகிறார்.
-
May 13, 2025 10:19 IST
பொள்ளாச்சி பாலியல் வழக்கு
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பு வழங்கப்பட உள்ள நிலையில் நீதிபதி நந்தினி தேவி நீதிமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.
-
May 13, 2025 10:12 IST
வெள்ளியங்கிரி மலை ஏறிய சிறுவன் உயிரிழப்பு
கோவை, பூண்டி வெள்ளியங்கிரி மலை ஏறிய சிறுவன் உயிரிழந்தார். தந்தையுடன் மலை ஏறி சாமி கும்பிட்டு விட்டு கீழே இறங்கிய சிறுவன் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
-
May 13, 2025 10:11 IST
மிஸ் கூவாகம் தேர்வு
விழுப்புரத்தில் நடைபெற்ற மிஸ் கூவாகம் போட்டியில் திருநெல்வேலியை சேர்ந்த ரேனுகா, 2025 மிஸ் கூவாகமாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
-
May 13, 2025 10:06 IST
ரயிலில் மிடில் பெர்த் சரிந்து விழுந்து பெண் காயம்
சென்னை - பாலக்காடு விரைவு ரயிலில் மிடில் பெர்த் சரிந்து விழுந்ததில் கீழ் பெர்த்தில் படுத்திருந்த சூர்யா என்ற பெண் காயமடைந்தார். நடு பெர்த்தில் படுத்திருந்த நபர் கீழே இறங்கியபோது சங்கிலில் நழுவி கீழ் பெர்த்தில் விழுந்தது. ரத்தம் சொட்டச் சொட்ட பயணம் செய்த சூர்யா ரயிலில் முதலுதவி பெட்டி கூட இல்லை என குற்றம் சாட்டினர்.
-
May 13, 2025 09:49 IST
வெம்பக்கோட்டை அகழாய்வில் நட்சத்திர அணிகலன்கள் கண்டெடுப்பு
வெம்பக்கோட்டை அகழாய்வில் சுடுமண்ணால் செய்யப்பட்ட நட்சத்திர அணிகலன்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது; ஆச்சர்யங்கள் நிறைந்த பல தொல்பொருள்களை தன்னுள் வைத்திருக்கும் வெம்பக்கோட்டை 3-ம் கட்ட அகழாய்வுத் தளத்தில் 1.90 மீட்டர் ஆழத்தில், சுடுமண்ணால் செய்யப்பட்ட நட்சத்திர அணிகலன்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 1.8 மி.மீ சுற்றளவும், 0.6 மி.மீ கணமும், 3.4 கிராம் எடையும் கொண்ட இந்த அணிகலன் அதன் இணையோடு கிடைத்திருப்பது கூடுதல் சிறப்பு. இன்னும் பழந்தமிழர் பொக்கிஷங்கள் பலவற்றை தொல்லியல் துறை வெளிச்சத்திற்கு கொண்டு வரும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
-
May 13, 2025 09:21 IST
பொள்ளாச்சி வழக்கு: இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பு
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட 9பேர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர். சபரிராஜன், திருநாவுக்கரசு, வசந்த குமார், சதீஷ், மணிவண்ணன், ஹேரன்பால், பாபு, அருளானந்தம், அருண்குமார் ஆகிய 9 பேர் கோவை நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டனர். இன்னும் சற்று நேரத்தில் கோவை மகளிர் நீதிமன்றத்தில் தீர்ப்பு அறிவிக்கப்பட உள்ளது.
-
May 13, 2025 09:11 IST
கூத்தாண்டவர் திருவிழா: திருநங்கைகள் தாலி கட்டிக் கொள்ளும் நிகழ்ச்சி
உளுந்தூர்பேட்டை அருகே உலக பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருநங்கைகள் தாலி கட்டிக் கொள்ளும் நிகழ்ச்சி இன்று மாலை நடைபெற உள்ளது. நாளை காலை தேரோட்டம், 15ம் தேதி விடையாத்தை, 16ம் தேதி தர்மர் பட்டாபிஷேகத்துடன் 18 நாள் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.