Coimbatore, Madurai, Trichy News Updates: கரூர் வாகன விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரண நிதி அறிவிப்பு

கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
CM MK Stalin

ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரிப்பு: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 5,000 கனஅடியில் இருந்து 6,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. தமிழக காவிரி நீர்படிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து உயர்ந்துள்ளது. இதனால், சுற்றுலாப் பயணிகளும், வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

  • May 18, 2025 00:18 IST

    கிணற்றுக்குள் வேன் கவிழ்ந்து விபத்து - 5 சடலங்கள் மீட்பு

    தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே கிணற்றுக்குள் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், சுமார் 4 மணி நேர போராட்டத்திற்கு பிறகு 5 பேரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



  • May 17, 2025 21:08 IST

    கிணற்றுக்குள் பாய்ந்த வேனை மீட்கும் பணியில் தொய்வு

    தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே சாலையோரம் இருந்த கிணற்றில் ஆம்னி வேன் ஒன்று பாய்ந்தது. இந்த வேனில் குழந்தை உட்பட 5 பேர் சிக்கிக் கொண்டதாக கூறப்படும் நிலையில், வேனை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக, கிணற்றில் அதிகப்படியாக சகதி இருப்பதால், மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.



  • Advertisment
  • May 17, 2025 19:31 IST

    கரூர் விபத்து - நிவாரண நிதி அறிவிப்பு

    கரூரில் ஏற்பட்ட வாகன விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் நிவாரண நிதி அறிவித்துள்ளார். அதன்படி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 3 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ. 1 லட்சமும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரமும் நிவாரண நிதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.



  • May 17, 2025 19:06 IST

    ஜல்லிக்கட்டு காளை முட்டியதில் உரிமையாளர் கைது

    மதுரை, கீழக்கரை ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை சேகரிக்கும் பகுதியில் நின்று கொண்டிருந்த போது மாடு முட்டியதில், காத்தாலி என்ற மாடு உரிமையாளர் உயிரிழந்தனர். 



  • Advertisment
    Advertisements
  • May 17, 2025 17:29 IST

    டெல்டா பகுதிகளில் தூர்வாரும் பணிகளை முன்கூட்டியே தொடங்குக: பெ.சண்முகம் பேட்டி

    டெல்டா பகுதிகளில் தூர்வாரும் பணிகளை முன்கூட்டியே தொடங்க வேண்டும் என பெ.சண்முகம் தெரிவித்துள்ளார். தென்மேற்குப் பருவமழை முன்கூட்டியே தொடங்க உள்ளதால் மேட்டூர் அணை முன்கூட்டியே திறக்கப்பட வாய்ப்புள்ளது. கடைமடை வரை நீர் செல்ல போர்க்கால அடிப்படையில் தூர்வாரும் பணிகளை தொடங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் வலியுறுத்தியுள்ளது.



  • May 17, 2025 17:29 IST

    டெல்டா பகுதிகளில் தூர்வாரும் பணிகளை முன்கூட்டியே தொடங்குக: பெ.சண்முகம் பேட்டி

    டெல்டா பகுதிகளில் தூர்வாரும் பணிகளை முன்கூட்டியே தொடங்க வேண்டும் என பெ.சண்முகம் தெரிவித்துள்ளார். தென்மேற்குப் பருவமழை முன்கூட்டியே தொடங்க உள்ளதால் மேட்டூர் அணை முன்கூட்டியே திறக்கப்பட வாய்ப்புள்ளது. கடைமடை வரை நீர் செல்ல போர்க்கால அடிப்படையில் தூர்வாரும் பணிகளை தொடங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் வலியுறுத்தியுள்ளது.



  • May 17, 2025 17:18 IST

    தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை

    தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், வந்தவாசி, விழுப்புரம், வேலூர், வாணியம்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு என்றும் சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. 



  • May 17, 2025 17:12 IST

    கோவையில் ரூ.327 கோடியில் புதிய மத்திய சிறைச்சாலை - தமிழ்நாடு சுற்றுச்சூழல் ஆணையம் உத்தரவு

    கோவையில் 97 ஏக்கரில் ரூ.327 கோடியில் புதிய மத்திய சிறைச்சாலை அமைக்கப்பட உள்ளது. காரமடை, பிளிச்சியில் சிறைச்சாலை வளாகம் அமைக்க கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள சுற்றுச்சூழல் அனுமதிக்கப்பட்டது. கட்டுமானப் பணிகளுக்கு அனுமதி அளித்து தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் உத்தரவிட்டது.



  • May 17, 2025 16:45 IST

    சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு: உதகையில் கடும் போக்குவரத்து நெரிசல்

    உதகை தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சி நடைபெற்று வரும் நிலையில், இதனை பார்க்க, ஏராளமான சுற்றுலா பயணிகள் உதகையில் குவிந்து வருகின்றனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், 2 கி.மீ. தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன



  • May 17, 2025 16:39 IST

    வேலூரில் இடி, மின்னலுடன் மழை

    வேலூர் மாநகரில் இடி, மின்னலுடன் மழை -  சத்துவாச்சாரி, கிரீன் சர்க்கிள் உள்ளிட்ட பகுதிகளில் மழை



  • May 17, 2025 15:44 IST

    காற்றில் முறிந்த வாழைகள்

    அன்னூர் சுற்றுவட்டார பகுதியில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழையில் சுமார் 50,000 வாழைகள் முறிந்து விழுந்தன.

    ஒரு வாழைக்கு 150 முதல் 200 ரூபாய் வரை செலவு செய்துள்ளதாகவும், அரசு இழப்பீடு வழங்கவும் விவசாயிகள் கோரிக்கை



  • May 17, 2025 15:27 IST

    காஞ்சிபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை

    காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.

    ராஜாம்பேட்டை, தாங்கி, வென்குடி, ஊத்துக்காடு, புளியம்பாக்கம், வாரணவாசி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.



  • May 17, 2025 14:38 IST

    14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

    கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தருமபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகை ஆகிய 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

    சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை



  • May 17, 2025 13:55 IST

    ரூ.15,000 லஞ்சம் - வருவாய் ஆய்வாளர் கைது

    திருவாரூரில் ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர் கைது செய்யப்பட்டுள்ளார். வருவாய் ஆய்வாளர் ஜான் டைசனை கையும் களவுமாக லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்துள்ளனர். நிலத்தை அளவீடு செய்ய லஞ்சம் வாங்கிய நிலையில் கைது செய்யப்பட்டு இருக்கிறார். 



  • May 17, 2025 13:22 IST

    செஞ்சி தேர்வு மையத்தில் முறைகேடு - தேர்வுத்துறை இயக்குநரிடம் அறிக்கை சமர்ப்பிப்பு

    செஞ்சி தேர்வு மையத்தில் முறைகேடு நடந்ததற்கான ஆதாரம் இல்லை என்று அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. முதற்கட்ட விசாரணை அறிக்கையை தேர்வுத்துறை இயக்குநரிடம் அதிகாரிகள் சமர்ப்பித்தனர். 167 மாணவர்களின் விடைத்தாள்களை சரிபார்த்ததில் எந்தவித முறைகேடுகளும் நடைபெறவில்லை என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. செஞ்சியில் ஒரே தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய 167 மாணவர்கள் வேதியியல் பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றனர்.



  • May 17, 2025 12:43 IST

    ரூ.68 கோடி மதிப்பில் புதிய சாலைக்கான பூமி பூஜை; அமைச்சர் கே என் நேரு பங்கேற்பு

    திருச்சி மாநகருக்கு உட்பட்ட உறையூர் முதல் கோணக்கரை குடமுருட்டி பாலம் வரை ரூ.68 கோடி மதிப்பில் புதிய சாலைக்கான பூமி பூஜை விழா இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு புதிய சாலைக்கு அடிக்கல் நாட்டினார்.

    இதில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், மாநகராட்சி ஆணையர் சரவணன், மேயர் அன்பழகன் மற்றும் நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்ததாவது; திருச்சி மாரீஸ்மேம்பால பணிகள் ரயில்வே நிர்வாகத்தால் கால தாமதம் ஆகி வருகிறது. தற்போது 90 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளது. ரயில்வே நிர்வாகம் 6 மாதத்திற்குள் முடித்து தருவதாக கூறியுள்ளனர். அதேபோல ஜங்சன் அரிஸ்டோ மேம்பால பணிகளும் விரைவில் முடிவையும். மெட்ரோ ரயில் சேவை கோயம்புத்தூர் மற்றும் மதுரையில் முதலில் அமைய உள்ளது. திருச்சியில் மெட்ரோ ரயில் சேவை வழங்குவதற்கு சர்வே எடுப்பதற்காக நிதி ஒதுக்கி உள்ளனர். திருச்சி ஜங்சன் பகுதியில் இருந்து சத்திரம் பேருந்து நிலையம் வரை elivated highway அமைப்பதற்கு பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் மத்திய அரசு 6 வழி சாலையாக பேருந்து நிலையத்தில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கு உயர் மட்ட சாலை (elivated highway, அமைப்பதற்கும், கரூர் சாலையில் இருந்து துவாக்குடி வரை நான்கு வழி சாலை அமைப்பதற்கும் ஏற்பாடு செய்து வருகின்றனர் என்றார். 

    இதனைத்தொடர்ந்து பாஜக கூட்டணியை போல, இந்தியா கூட்டணி வலிமையாக இல்லை என சிதம்பரம் கூறியுள்ளது குறித்த கேள்விக்கு, அதை அவரிடம் தான் கேட்க வேண்டும் என தெரிவித்தார்.முன்னதாக, திருச்சிராப்பள்ளி மேற்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அரவானூர் பகுதியில் ரூ.9 கோடி மதிப்பீட்டில் 135 குடியிருப்பு வாசிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்காளை வழங்கினார் அமைச்சர் கே என் நேரு. 

    செய்தி: க.சண்முகவடிவேல்.



  • May 17, 2025 12:21 IST

    ராமதாஸ் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் - 2-வது நாளாக அன்புமணி புறக்கணிப்பு 

    பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்காமல் 2வது நாளாக அன்புமணி புறக்கணித்துள்ளார். தைலாபுரத்தில் பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தலைமையில் இளைஞரணி, மகளிரணி உள்ளிட்ட அணிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. பா.ம.க மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை புறக்கணித்த நிலையில் இளைஞரணி கூட்டத்திலும் அன்புமணி பங்கேற்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • May 17, 2025 11:38 IST

    திருநள்ளாறில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

    திருநள்ளாறு சனி பகவான் கோயிலில் குவிந்த பக்தர்கள். 3 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து சாமி தரிசனம்



  • May 17, 2025 11:17 IST

    6 சவரன் நகைக்காக பெண் கொலை

    நீலகிரி, கூடலூர் அருகே 6 சவரன் நகைக்காக பெண் கொலை செய்யப்பட்டுள்ளார். வீட்டில் தனியாக இருந்த 55 வயது பெண்ணை வெட்டிக் கொன்று நகைகள் திருடப்பட்டுள்ளது.  4 தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடுதல் வேட்டையை தொடங்கியுள்ளது. 



  • May 17, 2025 11:05 IST

    அதிமுக முன்னாள் எம்எல்ஏ நீதிபதி வீட்டில் சோதனை

    மதுரை உசிலம்பட்டியில் உள்ள அதிமுக முன்னாள் எம்எல்ஏ நீதிபதி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை. 2016 - 2021 வரை உசிலம்பட்டி எம்எல்ஏவாக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரில் சோதனை நடக்கிறது



  • May 17, 2025 10:55 IST

    10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற தந்தை, மகன்.

    அருப்புக்கோட்டை மண்டபசாலையில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற தந்தை, மகன் குடும்பத்தினர் மகிழ்ச்சி. தந்தை செந்தில்குமார் (45) 210 மதிப்பெண்களுடனும், மகன் கவின்குமார் 358 மதிப்பெண்களுடனும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 



  • May 17, 2025 10:17 IST

    பஞ்சப்பூரில் 3.5 கி.மீ.க்கு ஆறு வழிச்சாலை திட்டம்: நேரு

    திருச்சி பஞ்சப்பூரில் 3.5 கி.மீ.க்கு ஆறு வழிச்சாலை அமைக்க திட்டம். திருச்சியில் மெட்ரோ அமைப்பதற்கான ஆய்வறிக்கை தயார் செய்ய நிதி ஒதுக்கப்பட்டுள்ளது; நகராட்சி, பேரூராட்சி அனைத்தையும் இணைத்து வாக்காளர்களை வார்டுகளில் சேர்க்கும் பணி என்று அமைச்சர் கே.என்.நேரு அறிவித்துள்ளார். 



  • May 17, 2025 10:15 IST

    தைலாபுரத்தில் பாமக நிர்வாகிகள் கூட்டம்

    திண்டிவனம் அருகே தைலாபுரத்தில் ராமதாஸ் தலைமையில் பாமக நிர்வாகிகள் கூட்டம் பாமக மகளிரணி, மாணவரணி, இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெறுகிறது



  • May 17, 2025 09:47 IST

    விபத்தில் மூளைச்சாவு அடைந்த நபரின் உறுப்புகள் தானம்

    திருவள்ளூர்: ஆரணியில் சாலை விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த சந்திரகுமார் என்பவரின் உடல் உறுப்புகளைத் தானமாக வழங்கிய குடும்பத்தினர். சிறுநீரகங்கள், கல்லீரல், கண்கள் மற்றும் தோல் போன்ற உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டதால் 5 பேருக்கு மறுவாழ்வு கிடைக்கவுள்ளன.

     



  • May 17, 2025 09:12 IST

    திருச்செந்தூர் கடலில் கரை ஒதுங்கிய பெண் சடலம்

    திருச்செந்தூர் அமலிநகர் கடற்கரையில் நேற்று மதியம் சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண்ணின் உடல் இறந்த நிலையில் கரை ஒதுங்கி கிடந்தது. வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கிய போலிசார், இறந்த நிலையில் கரை ஒதுங்கிய பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? கடலில் குளித்தபோது அலையில் சிக்கி தண்ணீரில் மூழ்கி இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



  • May 17, 2025 09:11 IST

    காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம்

    காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது. 7-வது நாள் விழாவை முன்னிட்டு 100 டன் எடையுள்ள 63 அடி உயரமும் 30 அடி அகலமும் 5 நிலைகளும் கொண்ட தேரில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் வரதராஜ பெருமாள் எழுந்தருளி காஞ்சிபுரம் நகரின் ராஜ வீதிகளில் பவனி வந்தார். பக்தி முழக்கத்துடன் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். திரளான பக்தர்கள் திரண்டு வந்த சாமி தரிசனம் செய்தனர்.



  • May 17, 2025 09:10 IST

    கரூர் அருகே பயங்கர விபத்து-சிறுமி உள்பட 4 பேர் பலி

    கரூர் செம்மடை நாவல் நகர் அருகே ஆம்னி பேருந்து, சாலையின் தடுப்பு சுவரை தாண்டி எதிர் திசையில் வந்த சுற்றுலா வேன் மீது மோதியதில் அதில் பயணித்த சிறுவன், சிறுமி, ஓட்டுநர் உள்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 15 பேர் காயமடைந்து உள்ளனர்.



  • May 17, 2025 09:10 IST

    கும்பக்கரை அருவியில் குளிக்கத் தடை

    கடந்த சில நாட்களாக கும்பக்கரை அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அருவியின் பாதுகாப்பு கம்பிகள் சேதமடைந்துள்ளது. இந்த நிலையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதையடுத்து பாதுகாப்பு கருதி, இன்று ஒரு நாள் மட்டும் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.



Tamilnadu Trichy Madurai Coimbatore

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: