/indian-express-tamil/media/media_files/2025/06/17/b5A1fR6qmvTiF5j0YvcK.jpg)
மழை நிலவரம்: கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பும் நெல்லை, திண்டுக்கல், குமரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.
-
Jun 17, 2025 21:30 IST
முருகன் மாநாட்டிற்கு வரும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு
மதுரையில் ஜூன் 22-ஆம் தேதி நடைபெற இருக்கும் முருகன் மாநாட்டிற்கு பிற மாவட்டங்களில் இருந்து வாகனங்களில் வருகை தரும் பக்தர்கள், தாங்கள் வசிக்கும் பகுதிக்கு உட்பட்ட டி.எஸ்.பி அலுவலகத்திற்கு நேரடியாக சென்று விண்ணப்பித்து வாகனத்திற்கான பாஸ் பெற வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.
-
Jun 17, 2025 20:50 IST
வி.சி.க பிரமுகர் படுகொலை - போலீசார் விசாரணை
திருவண்ணாமலையில் வி.சி.க பிரமுகரும், வழக்கறிஞருமான அக்ரி காமராஜ் என்பவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உறவினர்கள் இடையே ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக கொலை நடந்ததாக கூறப்படும் நிலையில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
Jun 17, 2025 19:01 IST
முருக பக்தர்கள் மாநாடு - தென்னக ரயில்வே சிறப்பு ஏற்பாடு
முருகனுக்கு உகந்த கிருத்திகை திருநாளாம் வரும் ஜூன்.22-ம் தேதி முருக பக்தர்கள் சார்பாக மதுரை மாநகரில் ‘முருக பக்தர்கள் மாநாடு’ க்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அழைப்பு விடுத்துள்ளார். இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. முருக பக்தர்கள் மாநாட்டில் அரசியல் பேச்சு இருக்காது.
இந்த மாநாட்டில் உத்திரப் பிரதேச மாநிலத்தின் முதல்- மந்திரி யோகி ஆதித்திய நாத், ஆந்திர துணை முதல்-மந்திரி பவன் கல்யாண் உள்ளிட்ட முக்கிய அரசியல் பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர். நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொள்வதற்கும் வாய்ப்புகள் உள்ளது. எடப்பாடி பழனிசாமி, சீமான், உள்ளிட்ட தலைவர்களுக்கும் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. கலைத் துறையினர், பிற அமைப்பினர்களுக்கும் அழைப்பிதழ் அளிக்கப்பட்டுள்ளது. அனைவரும் பங்கேற்பதாக தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில், முருக பக்தர்கள் மாநாட்டிற்காக சென்னையில் இருந்து நெல்லைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. வரும் 21ஆம் தேதி சென்னை எழும்பூரில் இருந்து நெல்லைக்கு சிறப்பு ரயில் மறுமார்க்கத்தில் 22ஆம் தேதி நெல்லையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. -
Jun 17, 2025 18:48 IST
நெல்லை கொலை வழக்கு - 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு
நெல்லை மாவட்டம் கூத்தங்குழியில் ரீகன் என்பவரை கொலை செய்த வழக்கில் 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2008-ல் ரீகன் என்பவர் அரிவாளால் வெட்டப்பட்டும் வெடிகுண்டு வீசியும் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நெல்லை கூடுதல் அமர்வு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. கணேசன், சிலம்பரசன், ஜான்பால், சஞ்சய், ஜேம்ஸ், அந்தோணி மைக்கேல் உள்பட 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
Jun 17, 2025 18:43 IST
சிவகங்கை - சட்ட விரோத குவாரிக்கு ரூ.91 கோடி அபராதம்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே மல்லாக்கோட்டை பகுதியில் உள்ள மேகா புளூமெட்டல்ஸ் என்ற குவாரியில் கடந்த மாதம் 6 தொழிலாளர்கள் உயிரிழந்த விவகாரத்தில் நடத்தப்பட்ட விசாரணையில் உரிமம் காலாவதி ஆன பிறகும் குவாரி இயங்கி வந்தது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து கண்காணிக்கத் தவறியதாக கனிமவளத்துறை ஆர்.ஐ., வி.ஏ.ஓ இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், குவாரி உரிமையாளருக்கு ரூ.91 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
-
Jun 17, 2025 17:30 IST
லாரி கவிழ்ந்து விபத்து: 2 பெண்கள் உயிரிழப்பு
திருப்பத்தூர் மாவட்டம் பல்லடம் அருகே கண்டெய்னர் லாரி கவிழ்ந்த விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்தனர். சாலையோரம் நின்றிருந்த பெண்கள் இருவர் கண்டெய்ணர் லாரிக்கு அடியில் சிக்கி இறந்தன. கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் நின்றிருந்த பெண்கள் மீது மோதி சரிந்தது.
-
Jun 17, 2025 16:31 IST
நீலகிரியில் மிக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
நீலகிரியில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதா வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
-
Jun 17, 2025 16:04 IST
சென்னை-நெல்லை இடையே 21-ம் தேதி சிறப்பு ரயில்
சென்னையில் இருந்து நெல்லைக்கு வரும் 21 ஆம் தேதி ( சனிக்கிழமை) சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் இந்த சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.சென்னை எழும்பூரில் இரவு 9.55 மணிக்கு புறப்படுட்டு மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலை நெல்லைக்கு 8.45 மணிக்கு இந்த ரயில் சென்றடையும். தாம்பரம், செங்கல்பட்டு, திருச்சி மதுரை, கோவில்பட்டி உள்ளிட்ட ரயில் நிலையங்கள் வழியாக நெல்லைக்கு இந்த ரயில் சென்றடையும்.
-
Jun 17, 2025 15:52 IST
கூடலூர் அருகே காட்டு யானையை விரட்ட 2 கும்கிகள் வரவழைப்பு
கூடலூர் அடுத்த பிதர்காடு பகுதியில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். முகாமிட்டுள்ள காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டன. காட்டு யானைகளை விரட்ட முதுமலையில் இருந்து ஜம்போ மற்றும் கிருஷ்ணா கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டது. நாளை முதல் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் பணிகள் தொடங்கும் என வனத்துறையினர் தகவல் தெரிவித்தனர்.
-
Jun 17, 2025 15:39 IST
பல்லடம் அருகே கண்டெய்னர் லாரி கவிழ்ந்து 2 பெண்கள் உயிரிழப்பு
பல்லடம் அருகே கண்டெய்னர் லாரி கவிழ்ந்ததில் சாலையோரம் நின்று கொண்டிருந்த 2 பெண்கள் உயிரிழந்தனர். ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலை ஓரம் நின்று கொண்டிருந்த பெண்கள் மீது கவிழ்ந்தது. கண்டெய்னர் லாரி கவிழ்ந்ததில் அதன் அடியில் சிக்கி 2 பெண்கள் உடல் நசுங்கி உயிரிழந்தனர். கண்டெய்னர் லாரி விபத்து காரணமாக திருச்சி – கோவை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
-
Jun 17, 2025 15:38 IST
சிவகங்கையில் புதிய திட்டங்களுக்கு உதயநிதி அடிக்கல்
சிவகங்கையில் ரூ.4.5 கோடியில் புதிய திட்டப் பணிகளுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். ரூ.33 கோடி மதிப்புள்ள முடிவுற்ற திட்டப் பணிகளை துணை முதல்வர் தொடங்கி வைத்தார்; மேலும் ரூ.24 கோடி மதிப்பில் 1,518 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினார். முன்னதாக சிவகங்கையில் நடக்கும் திட்டப் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் உதயநிதி ஆலோசனை நடத்தினார்.
-
Jun 17, 2025 15:37 IST
ஊராட்சி நிதியில் மோசடி: ஆட்சியருக்கு கோர்ட் ஆணை
நெல்லை நொச்சிகுளம் ஊராட்சி நிதியில் நடைபெற்றுள்ள மோசடி குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. நெல்லை மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டது. ஊராட்சி நிதி பற்றி புகார் வந்தால் தமிழ்நாடு பஞ்சாயத்துகள் சட்டத்தில் ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவைப்பட்டால் விசாரணை நடத்தி 12 வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஐகோர்ட் கிளை தெரிவித்தது.
-
Jun 17, 2025 14:52 IST
கடலில் கலந்த ரசாயனம் - நிலை அறிக்கை தர உத்தரவு
கேரளாவில் நடந்த சரக்கு கப்பல் விபத்தால், குமரி கடலில் ரசாயனங்கள் கலந்திருந்தன; அவற்றை அகற்றக் கோரிய வழக்கின் தற்போதையை நிலை குறித்த அறிக்கையை மத்திய, மாநில அரசுகள் தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
கடலில் ரசாயனம் கலந்ததால் மீனவர்களுக்கு இழப்பீடு வழங்கக் கோரி குமரியை சேர்ந்த 4 பேர் வழக்கு தொடர்ந்திருந்தனர் -
Jun 17, 2025 14:51 IST
மாணவர்களுடன் மதிய உணவருந்திய துணை முதல்வர்
பல்வேறு நலத்திட்டங்களை வழங்க சிவகங்கைக்கு சென்றுள்ள துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மாவட்ட விளையாட்டு அரங்க விடுதி மாணவர்களுடன் அமர்ந்து மதிய உணவருந்தினார்
-
Jun 17, 2025 14:50 IST
தென்காசி அருகே காப்பகத்தில் உணவு ஒவ்வாமை: பலி 5 ஆக உயர்வு
தென்காசி அருகே முதியோர் காப்பகத்தில் கெட்டுப்போன இறைச்சி உணவு சாப்பிட்ட விவகாரத்தில் ஏற்கனவே 4 பேர் இறந்த நிலையில், சிகிச்சையில் இருந்த முப்புடாதி (50) என்பவர் இன்று உயிரிழந்துள்ளார். நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 11 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
-
Jun 17, 2025 14:11 IST
திண்டுக்கல் அருகே நீதிமன்ற உத்தரவின்படி கட்சி கொடி கம்பங்கள் அகற்றம்
வத்தலகுண்டு, பட்டிவீரன்பட்டியில் கோர்ட் உத்தரவின்படி கட்சி கொடி கம்பங்கள் அகற்றப்பட்டன. சாலையோரம் இருந்த கட்சி கொடிக் கம்பங்களை போலீசார் உதவியுடன் பேரூராட்சி நிர்வாகம் அகற்றியது.
-
Jun 17, 2025 14:10 IST
பட்டாசு விபத்தில் இறந்தோர் குழந்தைகளுக்கு உதவித்தொகை
விருதுநகர் மாவட்டத்தில் விபத்தில் உயிரிழந்த பட்டாசு ஆலை தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். பெற்றோரில் ஒருவரை இழந்தவர்களுக்கு ரூ.2000, இருவரையும் இழந்தவர்களுக்கு ரூ.4000 என 41 குழந்தைகளுக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்கபடுவதுடன், அவர்களின் கல்விச் செலவு அனைத்தையும் அரசே ஏற்றுக்கொண்டுள்ளது
-
Jun 17, 2025 13:55 IST
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் முப்பரிமாணக் காட்சி வெளியீடு
மதுரையில் அமையவிருக்கும் எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனைக்கான முப்பரிமாண மாதிரிப் படத்தை (3D model) தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்த புதிய மாதிரிப் படம், மருத்துவமனையின் எதிர்காலக் கட்டமைப்பு மற்றும் வசதிகளைத் தெளிவாகக் காட்டுகிறது.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் குறித்த தகவலின்படி, முதல் கட்டப் பணிகள் 2026 ஆம் ஆண்டிலும், இரண்டாம் கட்டப் பணிகள் 2027 ஆம் ஆண்டிலும் நிறைவடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில், நோயாளிகளுக்கு நவீன மருத்துவச் சேவை வழங்கும் வகையில், 900 படுக்கைகள் கொண்ட அதிநவீன வசதிகள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், அவசரகால மருத்துவ சேவைகளை விரைவுபடுத்தும் வகையில் ஹெலிகாப்டர் தளம் (Helipad) மற்றும் குறுங்காடு (Mini Forest) போன்றவையும் எய்ம்ஸ் வளாகத்தில் அமைக்கப்படவுள்ளன.
-
Jun 17, 2025 12:18 IST
பட்டாசு விபத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதந்திர உதவித்தொகை வழங்கிய கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன்
விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குழந்தைகளுக்கு, தமிழக அரசின் மாதந்திர உதவித்தொகை மற்றும் கல்விச் செலவுக்கான ஆணைகள் வழங்கப்பட்டன. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், 41 குழந்தைகளுக்கு ரூ.5,62,000 மதிப்பிலான உதவித்தொகை ஆணைகளை வழங்கிப் பேசினார்.
பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு: மாதம் ரூ.4,000 உதவித்தொகை வழங்கப்படும்.
ஒருவரை இழந்த குழந்தைகளுக்கு: மாதம் ரூ.2,000 உதவித்தொகை வழங்கப்படும்.
மேலும், இந்தக் குழந்தைகளின் பள்ளி முதல் கல்லூரி வரையிலான படிப்பு செலவு முழுவதையும் அரசே ஏற்றுக்கொள்ளும் என்றும் அமைச்சர் உறுதிப்படுத்தினார். -
Jun 17, 2025 11:35 IST
நெல்லையில் கோயில் நிலத்தில் கட்டப்பட்ட திருமண மண்டபத்திற்கு சீல் வைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள வெங்கடாஜலபதி கோயில் நிலத்தில் திருமண மண்டபம் கட்டப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவுப்படி மண்டபத்திற்கு சீல் வைக்க அதிகாரிகள் வந்த நிலையில், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்
-
Jun 17, 2025 11:06 IST
410 மீட்டர் நீள படுகை அணை கட்டுமானப் பணிகள்; உதயநிதி ஸ்டாலின் ஆய்வு
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் புதூர் வைகை ஆற்றுப் படுகையில் 410 மீட்டர் நீளத்தில் கட்டப்பட்டுவரும் படுகை அணையின் கட்டுமானப் பணிகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
-
Jun 17, 2025 10:45 IST
முருக பக்தர்கள் மாநாட்டை அரசியல் மாநாடு என்றுதான் சொல்வார்கள் –டி.டி.வி தினகரன்
மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டை அரசியல் மாநாடு என்றுதான் சொல்வார்கள் என அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார்
-
Jun 17, 2025 09:53 IST
முழு கொள்ளளவை எட்டிய அமராவதி அணை
உடுமலை முழு கொள்ளளவை எட்டிய அமராவதி அணையிலிருந்து வினாடிக்கு 7,500 கன அடி நீர் திறப்பு. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 6,000 கன அடியாக உள்ளது.
-
Jun 17, 2025 09:53 IST
ஆழியார் கவி அருவியில் வெள்ளப்பெருக்கு
பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக ஆழியார் கவி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நீர்வரத்து சீரானதும் அனுமதி அளிக்கப்படும் என வனத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
-
Jun 17, 2025 09:28 IST
குற்றாலத்தில் 3 ஆவது நாளாக குளிக்க தடை
வெள்ளப்பெருக்கு காரணமாக குற்றாலத்தின் அனைத்து அருவிகளிலும் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை, 3வது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது
-
Jun 17, 2025 09:28 IST
அவலாஞ்சியில் 21 செ.மீ மழை பதிவு
நிலகிரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அவலாஞ்சியில் 21 செ.மீ மழை கொட்டித் தீர்த்தது. 4 நாட்களுக்குப் பின் மழையின் தாக்கம் இன்று சற்று குறைந்துள்ளதால் பள்ளிகள் வழக்கம்போல் செயல்படுகின்றன.
-
Jun 17, 2025 09:25 IST
மழை நிலவரம்
கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு நெல்லை, திண்டுக்கல், குமரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.