Coimbatore, Madurai, Trichy News: ராசிபுரம் - திருச்செங்கோடு சாலையில் புதிய பாலம் தரமாக உள்ளது - தமிழ்நாடு அரசு விளக்கம்

கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
secretariate

நிரம்பும் முல்லை பெரியாறு அணை: தொடர்மழையால் வரும் நீர்வரத்தால் 3 நாட்களில் 10 அடிகள் வரை முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. மணிக்கு 7 ஆயிரம் கன அடிக்கு தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் 152 அடி கொள்ளளவு உள்ள அணையின் நீர்மட்டம் 125 அடியை நெருங்கியது. 

Advertisment

குற்றால அருவியில் குளிக்க தடை: தென்காசியில் தொடர் மழை காரணமாக குற்றால அருவிகளில் தொடர்ந்து 5வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

  • May 30, 2025 06:45 IST

    ராசிபுரம் - திருச்செங்கோடு சாலையில் பள்ளிபாளையம் பாலம் தரமாக உள்ளது - தமிழ்நாடு அரசு விளக்கம்

    ராசிபுரம் - திருச்செங்கோடு சாலையில் புதிதாக கட்டப்பட்ட பள்ளிபாளையம் பாலம் தரமாக உள்ளது; பாலத்தின் தரம் குறித்து சில சமூக விரோதிகளால் தவறான செய்திகள் பரப்பப்படுகின்றன; ஒப்பந்ததாரரால் 7 ஆண்டுகளுக்கு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. 



  • May 29, 2025 19:14 IST

    தென்காசி முருகன் கோவிலுக்கு தங்கவேல் வழங்கிய மோகன்லால்

    'துடரும்' படத்தின் வெற்றிக்கு காணிக்கையாக தென்காசி அருகிலுள்ள திருமலை முருகன் கோவிலுக்கு மோகன்லால் தங்கவேல் வழங்கி உள்ளார்.'துடரும்' படத்தில் வரும் 'கொண்டாட்டம்' பாடலில் ஒரு முக்கிய வரியாக திருமலை முருகனுக்கு அரோகரா என்ற வரி இடம் பெற்று உள்ளது. அந்தப் பாடலின் வெற்றியினைத் தொடர்ந்து இந்த தங்க வேலை காணிக்கையாக கொடுத்துள்ளார்.



  • Advertisment
    Advertisements
  • May 29, 2025 19:02 IST

    பக்ரீத் பண்டிகை: அய்யலூரில் ரூ.3 கோடிக்கு ஆடு விற்பனை

    பக்ரீத் பண்டிகையையொட்டி வேடசந்தூர் அருகே உள்ள அய்யலூரில் இன்று ரூ.3 கோடிக்கு மேல் ஆடு, கோழிகள் விற்பனையாயின. குறிப்பாக செம்மறியாடுகளை வியாபாரிகள் அதிகளவில் வாங்கிச் சென்றனர்.



  • May 29, 2025 18:52 IST

    மதுரை: கஞ்சா கடத்திய 3 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை

    மதுரை சிந்தாமணி ரோடு தீயணைப்பு நிலையம் அருகே, கடந்த 2021-ம் ஆண்டு காரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தபோது அதில் 28 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.கஞ்சா கடத்திய 3 பேருக்கும் தலா 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும் தலா ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து மாவட்ட போதை பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



  • May 29, 2025 17:49 IST

    கீழடி அகழாய்வு அறிக்கை விவகாரம்: மத்திய அரசு விளக்கம்

    கீழடி அகழாய்வு அறிக்கை திருத்தம் காரணமாக மத்திய அரசு திருப்பி அனுப்பிய விவகாரத்தில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. கீழடி அறிக்கையை வெளியிடுவதில் இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனம் அக்கறை காட்டவில்லை என்பது ஒரு கற்பனைக் கதையாகும் என இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.



  • May 29, 2025 17:37 IST

    குமுளியில் கனமழை: மரம் விழுந்து ஒருவர் பலி

    தமிழ்நாடு-கேரள எல்லையான குமுளியில் சூறைகாற்றுடன் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக பேருந்து, லாரி மீது வேருடன் மரம் சாய்ந்து விழுந்தது. இதில், லாரி மீது மரம் விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார்



  • May 29, 2025 17:10 IST

    மீனவ கிராமத்தில் கரையோரம் ஒதுங்கிய ரசாயன கண்டைனர்

    கன்னியாகுமரி மாவட்டம் இணையம் சின்னவிளை மீனவ கிராமத்தில் கரையோரம்  ஒதுங்கிய ரசாயன கண்டைனர் குறித்து காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் ஆய்வு. அப்பகுதியில், ஏராளமாக தேக்கு தடிகள் மற்றும் உயர்ரக முழு அண்டி பருப்புகள் கரை ஒதுங்கி வருகிறது. மக்கள் கூட்டம் கூட்டாமாக வந்து அதனை எடுத்து செல்கின்றனர்.



  • May 29, 2025 15:52 IST

    தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு

    தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய  லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

    நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஒருசில இடங்களில் கன முதல் அதி கனமழையும்,  திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தேனி, தென்காசி  மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர் மற்றும்  திண்டுக்கல்  மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும்  பெய்ய வாய்ப்புள்ளது.



  • May 29, 2025 14:59 IST

    பல் மருத்துவமனையில் ஏற்பட்ட தொற்றால் 8 பேர் உயிரிழப்பு

    திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் 2023-ஆம் ஆண்டில் தனியார் பல் மருத்துவமனையில் ஏற்பட்ட பாக்டீரியா தொற்றின் காரணமாக 8 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. சிகிச்சைக்கு பயன்படுத்தும் கருவியை முறையாக சுத்தம் செய்யாமல், ஒரே கருவியை அனைத்து நோயாளிகளுக்கும் பயன்படுத்தியதால் 10 பேருக்கு தொற்று ஏற்பட்டதாகவும், அதில் 8 பேர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பொது சுகாதார இயக்குநரகம் மற்றும் சி.எம்.சி மருத்துவர்கள் கொண்டு குழு நடத்திய ஆய்வில் இச்சம்பவம் கண்டறியப்பட்டுள்ளது.



  • May 29, 2025 13:46 IST

    மாநகராட்சி கூட்டத்தில் தி.மு.க - அ.தி.மு.க-வினர் கைகலப்பு

    சேலம் மாநகராட்சி கூட்டத்தில் தி.மு.க மற்றும் அ.தி.மு.க-வினர் இடையே கைகலப்பு ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாமன்ற எதிர்க்கட்சி தலைவர் யாதவ மூர்த்தி, அமைச்சர் குறித்து பேசியதற்கு தி.மு.க-வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், 45-வது வார்டு தி.மு.க கவுன்சிலர் சுகாசினி குறுக்கிட்டதால் வாக்குவாதம் ஏற்பட்டது.



  • May 29, 2025 13:22 IST

    மாநகராட்சி கூட்டத்தில் திமுக-அதிமுகவினர் கைகலப்பு

    சேலம் மாநகராட்சி கூட்டத்தில் திமுக-அதிமுக கவுன்சிலர்கள் இடையே வாக்குவாதம், கைகலப்பு ஏற்பட்டுள்ளது. மாமன்ற எதிர்க்கட்சித் தலைவர் யாதவ மூர்த்தி, அமைச்சர் குறித்து பேசியதற்கு திமுகவினர் எதிர்ப்பு; திமுகவை சேர்ந்த 45ஆவது வார்டு கவுன்சிலர் சுகாசினி குறுக்கிட்டதால் வாக்குவாதம் ஏற்பட்டது.



  • May 29, 2025 11:48 IST

    பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற உத்தரவு

    வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்திருந்தது. ஒடிசா கடலோரப் பகுதிகளை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவுகிறது. நேற்று முன்தினம் வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியது. தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



  • May 29, 2025 11:47 IST

    பக்ரீத் பண்டிகை; பாவூர்சத்திரம் சந்தையில் ஆடுகள் விற்பனை அமோகம்!

    பண்டிகை வருகிற ஜூன் 7ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் சந்தையில் ஆடுகள் விற்பனை களைகட்டியது. பக்ரீத் பண்டிகையின் முக்கிய நிகழ்வாக ‘குர்பானி’ எனும் வழிபாடு இருப்பதால் ஆடுகள் வாங்கிச் செல்ல மக்கள் ஆர்வம்; ரூ.5000 முதல் ரூ.45,000 வரை ஒரு ஆடு விற்பனையாகிறது.



  • May 29, 2025 11:10 IST

    குமரி அருகே கரை ஒதுங்கிய கண்டெய்னர் - போலீஸ் விசாரணை

    அரபிக்கடலில் கவிழ்ந்த கப்பலில் இருந்த கன்டெய்னர்களில் ஒன்று கன்னியாகுமரி அருகே கரை ஒதுங்கியது. கன்னியாகுமரி அருகே வாணியக்குடியில் கடற்கரையோரம் கன்டெய்னர் கரை ஒதுங்கியது. ரசாயன பொருள் ஏற்கனவே வெளியேறிய நிலையில் கன்டெய்னர் கரை ஒதுங்கியது. கடலில் கரை ஒதுங்கும் எந்தவித பொருளையும் மீனவர்கள் தொடக்கூடாது என மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.

     



  • May 29, 2025 11:09 IST

    தொடர் மழை - கோவை சிறுவாணி அணை நீர்மட்டம் கிடுகிடு உயர்வு

     

    கோவை பகுதிகளில் தொடர் மழை காரணமாக கோவை சிறுவாணி அணையின் நீர்மட்டம் கிடுகிடு உயர்ந்துள்ளது. சிறுவாணி அணையின் நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் 2 அடி உயர்ந்துள்ளது. சிறுவாணி அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 34.80 அடியாக உள்ளது.



  • May 29, 2025 10:53 IST

    கடையநல்லூரில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலி 

    கடையநல்லூர் அருகே அச்சன்புதூர் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் சித்திக். இவர் அப்பகுதியில் கேபிள் ஆபரேட்டராக உள்ளார். இவரது மகன் முகம்மது பாசில் (24 வயது), படித்து முடித்துவிட்டு தந்தைக்கு உதவியாக இருந்தார்.

    அச்சன்புதூர் பகுதியில் கடந்த 4 நாட்களாக பலத்த காற்றும் மழையும் பெய்ததால் வீடுகளில் சரிவர கேபிள் டி.வி. தெரியவில்லை. எனவே அங்குள்ள தெருவில் கேபிள் டி.வி. ஒயரை சரி செய்வதற்காக முகம்மது பாசில் இழுத்தார். அப்போது கேபிள் ஒயர் வழியாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது.

    இதில் தூக்கி வீசப்பட்ட முகம்மது பாசிலை அருகில் உள்ளவர்கள் மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே முகம்மது பாசில் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அச்சன்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



  • May 29, 2025 09:39 IST

    11 நகராட்சிகளின் தரத்தை உயர்த்தியது தமிழ்நாடு அரசு!

    பழனி, திருச்செங்கோடு, குன்றத்தூர், உடுமலைப்பேட்டை, நந்திவரம்-கூடுவாஞ்சேரி, பல்லடம், ராமேஸ்வரம், மாங்காடு, வெள்ளக்கோயில், அரியலூர், அம்பாசமுத்திரம் ஆகிய நகராட்சிகளின் தரம் உயர்த்தப்பட்டுள்ளது



  • May 29, 2025 09:33 IST

    குற்றால அருவியில் குளிக்க தடை

    தென்காசியில் தொடர் மழை காரணமாக குற்றால அருவிகளில் தொடர்ந்து 5வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.



Tamilnadu News Latest news updates

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: