/indian-express-tamil/media/media_files/2024/11/22/mumnzI6emEtmQ0CGAhJ6.jpg)
மழை நிலவரம்: நீலகிரி, கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல், தேனி, தென்காசி, கன்னியாகுமரி, நெல்லையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
Jun 12, 2025 13:38 IST
6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
நீலகிரி, கோவை, தென்காசி, நெல்லை, தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
Jun 12, 2025 13:36 IST
ஜூன் 14, 15ல் நீலகிரிக்கு ரெட் அலர்ட்
ஜூன் 14, 15ல் கோவை மலைப்பகுதிகள், நெல்லை மலைப்பகுதிகள், தென்காசி,
கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்து வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது, -
Jun 12, 2025 12:39 IST
தென்காசி அருகே முதியோர் இல்லத்தில் அடுத்தடுத்து மூவர் உயிரிழப்பு..!
தென்காசி அருகே சுந்தரபாண்டியபுரத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். நேற்று சங்கர் என்பவர் உயிரிழந்த நிலையில் இன்று முருகம்மாள், அம்பிகா ஆகியோர் உணவு ஒவ்வாமையால் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
-
Jun 12, 2025 11:02 IST
புதுக்கோட்டையில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சி நிறுத்தம் - இயக்குநர் இடமாற்றம்
புதுக்கோட்டை மாவட்டம் கொடும்பாளூரில் நடைபெற்று வந்த அகழ்வாராய்ச்சி பணிகள் கடந்த 25 நாட்களுக்கு மேலாக நிறுத்தப்பட்டுள்ளது. பணிகள் மேற்கொள்ள ஒன்றிய அரசு போதிய நிதிகள் ஒதுக்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், அகழ்வாராய்ச்சி இயக்குநராக பணியில் இருந்த அனில் குமார் என்பவரை திடீரென மத்திய அரசு இடமாற்றம் செய்துள்ளது
-
Jun 12, 2025 09:45 IST
+2 மாணவர் தற்கொலை - செல்போனில் ஆதாரங்கள் அழிப்பு
சிதம்பரம் அருகே 12ம் வகுப்பு மாணவர் முகத்தில் பிளாஸ்டிக் பை கட்டி விஷவாயு செலுத்தி தற்கொலை. சி.பி.எஸ்.இ பாடம் கஷ்டமாக இருப்பதால் பள்ளிக்கு செல்ல விருப்பம் இல்லை என மாணவர் கூறியதாக தகவல். தற்கொலை செய்வதற்கு முன்பு செல்போனில் உள்ள ஆதாரங்கள் அழிப்பு என போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
-
Jun 12, 2025 09:42 IST
திருவண்ணாமலை கிரிவலம்
திருவண்ணாமலை வைகாசி மாத பௌர்ணமியை ஒட்டி வருகை தந்த லட்சக்கணக்கான பக்தர்கள் மாட வீதி, கிரிவலப் பாதை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விட்டுச்சென்ற குப்பைகளை அகற்றும் பணியினை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் ஆய்வு மேற்கொண்டார். கிரிவல பக்தர்கள் விட்டுச்சென்ற 80 டன் குப்பைகள் இன்று அகற்றப்பட்டுள்ளன.
-
Jun 12, 2025 09:40 IST
கொடும்பாளூரில் தொல்லியல்துறையின் அகழ்வாராய்ச்சிப் பணிகள் நிறுத்தம்!
புதுக்கோட்டை மாவட்டம் கொடுமபாலூரில் நடைபெற்று வந்த ஒன்றிய தொல்லியல் துறையின் அகழ்வாராய்ச்சிப் பணிகள் கடந்த 25 நாட்களுக்கு மேலாக முழுவதுமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
பணிகள் மேற்கொள்ள ஒன்றிய அரசு போதிய நிதிகள் ஒதுக்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், அகழ்வாராய்ச்சி இயக்குநராக பணியாற்றி வந்த அனில் குமார் என்பவரை திடீரென இடமாற்றம் செய்துள்ளது ஒன்றிய அரசு. -
Jun 12, 2025 09:34 IST
மழை நிலவரம்
நீலகிரி, கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல், தேனி, தென்காசி, கன்னியாகுமரி, நெல்லையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.