Coimbatore, Madurai, Trichy News Highlights: தஞ்சையில் கலைஞர் கருணாநிதி சிலையை திறந்து வைத்தார் ஸ்டாலின்

கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
k statue

மழை நிலவரம்: நீலகிரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அவலாஞ்சி பகுதியில் 14.3 செ.மீ அளவு மழை பதிவானது. பந்தலூரில் 8.2 செ.மீ, சேரங்கோட்டில் 7.9 செ.மீ, அப்பர் பவானி பகுதியில் 7.2 செ.மீ என்ற அளவில் மழை பெய்துள்ளது. 

Advertisment

பவானிசாகர அணை நிலவரம்: பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து நேற்று விநாடிக்கு 1329 கன அடியாக இருந்த நிலையில், இன்று காலை விநாடிக்கு 5577 கன அடியாக அதிகரித்துள்ளது. 105 அடி உயரம் கொண்ட அணையில் தற்போது 83.68 அடிக்கு நீர் மட்டம் உள்ளது. நீர் இருப்பு 17.71 டி.எம்.சி. ஆக உள்ளது கால்வாய் மற்றும் ஆற்றின் வழியே விநாடிக்கு 855 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது.

  • Jun 15, 2025 19:56 IST

    முருகன் மாநாடு - 52 நிபந்தனைகளுடன் அனுமதி - ஐகோர்ட் உத்தரவு

    ஜூன் 22-ல் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டிற்கு 52 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்க உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. மாநாட்டில் மத நல்லிணக்கம் காப்பதை உறுதி செய்யப்பட வேண்டும் என நீதிபதி அறிவுறுத்தினார்.



  • Jun 15, 2025 19:18 IST

    பாசனத்திற்காக கல்லணையில் இருந்து நீரைத் திறந்து வைத்தார் ஸ்டாலின்

    கல்லணையில் இருந்து பாசனத்திற்காக நீரைத் திறந்து வைத்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். இதன் மூலம் இருந்து பாசனத்திற்காக நீரைத் திறந்து வைத்த முதல் முதலமைச்சர் என்ற பெருமையைப் பெற்றார். தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்கள் பாசன வசதி பெறும்.



  • Advertisment
    Advertisements
  • Jun 15, 2025 18:45 IST

    நாடக கலைஞர் அரிவாளால் வெட்டிக்கொலை

    கிருஷ்ணகிரி அருகே கள்ளக்காதலில் இருந்த நாடக கலைஞர் அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். சின்னநரசிம்மப்பா என்பவரின் மனைவிக்கும் நாடக கலைஞர் வெங்கடேசனுக்கும் திருமணம் தாண்டிய உறவு இருந்ததாக கூறப்படுகிறது. சின்னநரசிம்மப்பாவின் மனைவியுடன் பைக்கில் வந்த நாடக கலைஞர் வெங்கடேசனை அரிவாளால் வெட்டிய சின்னநரசிம்மப்பாவை பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்தனர். மருத்துவமனை செல்லும் வழியிலேயே வெங்கடேசன் உயிரிழந்தார்



  • Jun 15, 2025 18:24 IST

    நீட் மதிப்பெண்களில் குளறுபடி என குற்றச்சாட்டு

    நீட் தேர்வில் கோவையைச் சேர்ந்த அபிஷியா 680 மதிப்பெண்களுடன் ஆல் இந்தியா ரேங்கில் 40வது இடம் பெற்றார். அதேநேரம் நெல்லையைச் சேர்ந்த சூரிய நாராயணன் 665 மதிப்பெண்களுடன் ஆல் இந்தியா ரேங்கில் 27வது இடம் பிடித்ததாகவும், தமிழக அளவில் முதலிடம் பிடித்ததாகவும் அறிவிப்பு வெளியாகியது. அபிஷியாவை விட குறைவான மதிப்பெண் பெற்றவர் ரேங்கிங்கில் முன்னால் வந்திருப்பதால் சர்ச்சை எழுந்துள்ளது. நீட் தேர்வு அதிகாரிகள் பிரச்சினையை சரி செய்து தர வேண்டும் என மாணவி மற்றும் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்



  • Jun 15, 2025 17:41 IST

    புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு அரைநாள் விடுமுறை

    குடியரசு துணை தலைவர் வருகையால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு அரைநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது



  • Jun 15, 2025 16:31 IST

    காவல் நிலையத்தை அடித்து நொறுக்கிய நபருக்கு எலும்பு முறிவு

    மதுரை திருமங்கலத்தை அடுத்த சத்திரப்பட்டி காவல் நிலையத்தில் இரவு நேரத்தில் புகுந்து ரகளையில் ஈடுபட்ட பிரபாகரன் மற்றும் அய்யனார் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். போலீசார் கைது செய்யும் போது தப்பி ஓடிய பிரபாகரன் கீழே விழுந்ததில் கை, காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. கைதான பிரபாகரன் கடந்த 2 மாதங்களுக்கு முன்புதான் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு, சில நாட்களுக்கு முன்பு ஜாமினில் வெளியே வந்துள்ளார். 



  • Jun 15, 2025 16:22 IST

    வெடி விபத்தில் இறந்தவரின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரணம்

    சிதம்பரம் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் இறந்தவரின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு அளித்துள்ளார். வெடி விபத்தில் லதாகுமாரி என்பவர் உயிரிழந்த செய்தி அறிந்து வருத்தமடைந்தேன். விபத்தில் இறந்தவரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் பெரியகுமட்டி கிராமத்தில் பட்டாசு ஆலையில் இன்று காலை வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.



  • Jun 15, 2025 15:37 IST

    மண் சரிவால் 5 மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்ட ரயில்

    குஜராத்திலிருந்து நெல்லைக்கு சென்று கொண்டிருந்த நிலையில் திடீரென 5 மணி நேரம் ஒரே இடத்தில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். மாற்று பாதையில் இயக்கப்படுமா அல்லது இதே பாதையில் மண் முழுவதும் அகற்றிய பிறகு இயக்கப்படுமா என்பது குறித்த எந்த ஒரு தகவலும் ரயில்வே நிறுவனம் தரப்பில் இருந்து அதிகபூர்வமாக கூறப்படவில்லை என குடும்பத்தினருடன் பயணிக்கும் மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்



  • Jun 15, 2025 14:38 IST

    திருவண்ணாமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

    ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியுள்ளது. பக்தர்கள் நீண்ட வரிசையில் 5 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். கோவிலில் பக்தர்கள் ராஜகோபுரம் வழியாகவும், அம்மணி அம்மன் கோபுரம் வழியாகவும் தரிசனத்திற்கு உள்ளே சென்றனர்.



  • Jun 15, 2025 14:17 IST

    சிதம்பரம் அருகே நாட்டு வெடி உற்பத்தி கூடத்தில் விபத்து

    சிதம்பரம் அருகே சம்பந்தம் என்ற கிராமத்தில் நாட்டு வெடி செய்யும் கூடத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் லதா (37) என்ற தொழிலாளி உயிரிழந்தார். சம்பவ இடத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். வெடி விபத்தில் அந்த கூடமும் இடிந்து தரைமட்டமானது



  • Jun 15, 2025 14:16 IST

    நாமக்கல்லில் இருந்து அமெரிக்காவுக்கு 1 கோடி முட்டைகள் ஏற்றுமதி

    முதல்முறையாக நாமக்கல்லில் இருந்து அமெரிக்காவுக்கு 1 கோடி முட்டைகள் ஏற்றுமதி. தலா 4.45 லட்சம் வீதம் 21 குளிர்சாதன வசதி கொண்ட கண்டெய்னர்களில் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் இருந்து முட்டை இறக்குமதிக்கு அமெரிக்கா அனுமதி அளித்த நிலையில் முதற்கட்டமாக 1 கோடி முட்டைகள் ஏற்றுமதி செய்துள்ளனர்.



  • Jun 15, 2025 14:04 IST

    நீலகிரி மாவட்டத்தில் இன்று அதி கனமழைக்கான ’ரெட் அலர்ட்’ 

    நீலகிரி மாவட்டத்தில் இன்று அதிகனமழைக்கான ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி ஆகிய 6 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளது. நாளை மறுநாள் (ஜூன் 17ம் தேதி) நீலகிரி, கோவைக்கு மட்டும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 



  • Jun 15, 2025 14:03 IST

    ”2026ல் பாமக கூட்டணி ஆட்சி தமிழ்நாட்டில் அமைய வேண்டும்”

    திருவள்ளூரில் நடக்கும் பாமக மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் உரையாற்றிய அன்புமணி ராமதாஸ், “பாமகவால்தான் தமிழ்நாட்டில் நல்லாட்சி கொடுக்க முடியும். 2026ல் பாமக கூட்டணி ஆட்சி அமையும் கட்சியில் உறுப்பினர் சேர்க்கையை இன்னும் தீவிரப்படுத்த வேண்டும். 2026ல் பாமக கூட்டணி ஆட்சி தமிழ்நாட்டில் அமைய வேண்டும். அதற்காக தொண்டர்கள் பாடுபட வேண்டும். என் மீது கோபம் இருந்தால் அய்யா ராமதாஸ் என்னை மன்னிக்க வேண்டும். 100 வருடம் மகிழ்ச்சியோடு ராமதாஸ் வாழ வேண்டும். தந்தையிடம் மன்னிப்பு கேட்பது ஒன்றும் பெரிதல்ல” என்று அவர் கூறினார். 



  • Jun 15, 2025 14:01 IST

    ஏரியில் மூழ்கி பலியான மாணவரின் குடும்பத்தினருக்கு நிதியுதவி

    கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே ஏரியில் மூழ்கி பலியான பள்ளி மாணவரின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.



  • Jun 15, 2025 13:50 IST

    என் மீது கோபம் இருந்தால் மன்னித்து விடுங்கள் - ராமதாஸுக்கு அன்புமணி வேண்டுகோள்

    தன் மீது கோபம் இருந்தால், தன்னை மன்னிக்க வேண்டும் என ராமதாஸுக்கு அன்புமணி வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், தந்தையர்  தின வாழ்த்துகளை ராமதாஸுக்கு தெரிவித்த அன்புமணி, 100 ஆண்டுகள் அவர் மகிழ்ச்சியோடு வாழ வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.



  • Jun 15, 2025 12:49 IST

    அன்புமணி தலைமையில் பா.ம.க பொதுக்குழு கூட்டம் - நிர்வாகிகள் பங்கேற்பு

    திருவள்ளூரில் அன்புமணி தலைமையில் பா.ம.க மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடத்தப்படுகிறது. இதில், திலகபாமா, வடிவேல் ராவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் பேசிய அன்புமணி, கட்சியில் உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.



  • Jun 15, 2025 12:40 IST

    கள் இறக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட சீமான்

    திருச்செந்தூர் அருகே கள் இறக்கும் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பனை மரத்தில் ஏறி கள் இறக்கினார்.



  • Jun 15, 2025 11:40 IST

    தி.மலையில் கூட்ட நெரிசல்

    விடுமுறை தினம் என்பதால் திருவண்ணாமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்.  5 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்.



  • Jun 15, 2025 11:39 IST

    வகை அணை தண்ணீர் திறப்பு

    மதுரை, திண்டுக்கல் மாவட்ட பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.  அமைச்சர் பெரியசாமி மதகை திறந்து வைத்தார் விநாடிக்கு 900 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. 



  • Jun 15, 2025 10:44 IST

    சீமான் ஏற உள்ள பனைமரம் தயார்

    கள் இறக்க அனுமதி கோரி தூத்துக்குடி அருகே பெரியதாழை பகுதியில் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று பனைமரம் ஏறும் போராட்டம் நடத்த உள்ளார். அவர் ஏறுவதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள பனைமரம் புகைப்படம் வெளியாகி உள்ளது. 



  • Jun 15, 2025 10:17 IST

    கொள்ளையடிக்க பயன்படுத்தப்பட்ட லாரி பறிமுதல்

    கோவையில் கேரளாவைச் சேர்ந்த நகை வியாபாரியிடம் இருந்து 1.25 கிலோ தங்க கட்டிகள் கொள்ளையடித்த வழக்கில், கொள்ளையடிக்க பயன்படுத்தப்பட்ட லாரி சிக்கியது. கொள்ளை கும்பலை பிடிக்க அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார் கேரளாவில் முகாமிட்டுள்ளனர். 



  • Jun 15, 2025 10:16 IST

    நீலகிரி மலை ரயில் முதல் முதலில் இயக்கப்பட்ட நாள் இன்று!

    பழமை வாய்ந்த நீலகிரி மலை ரயில் மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரை முதல் முதலில் இந்த நாளில் தான் இயக்கப்பட்டது. 1899 ஆம் ஆண்டு தான் ரயில் தனது முதல் பயணத்தை தொடங்கியது. 



  • Jun 15, 2025 08:40 IST

    மழை நிலவரம்

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அவலாஞ்சி பகுதியில் 14.3 செ.மீ அளவு மழை பதிவு பந்தலூரில் 8.2 செ.மீ, சேரங்கோட்டில் 7.9 செ.மீ, அப்பர் பவானி பகுதியில் 7.2 செ.மீ என்ற அளவில் மழை பெய்துள்ளது



  • Jun 15, 2025 08:40 IST

    பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு

    பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து நேற்று விநாடிக்கு 1329 கன அடியாக இருந்த நிலையில், இன்று காலை விநாடிக்கு 5577 கன அடியாக அதிகரித்துள்ளது. 105 அடி உயரம் கொண்ட அணையில் தற்போது 83.68 அடிக்கு நீர் மட்டம் உள்ளது. நீர் இருப்பு 17.71 டி.எம்.சி. ஆக உள்ளது கால்வாய் மற்றும் ஆற்றின் வழியே விநாடிக்கு 855 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. 



tamilnadu news Live News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: