Coimbatore, Madurai, Trichy News Highlights:  சேலம் அருகே கோயில் திருவிழாவில் பட்டாசு வெடித்து விபத்து - 3 பேர் உயிரிழப்பு

கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Slm fire accident

திருச்செந்தூர் கோவிலில் மூத்த குடிமக்களுக்கு வசதி

Advertisment

திருச்செந்தூர் முருகன் கோயிலில் தரிசனத்திற்காக வரும், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கான பக்தர்கள் தரிசன வரிசையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த செயல் மூத்த குடிமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

சித்திரை திருவிழா கோலாகலம்

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சித்திரை திருவிழா கோலாகலமாக தொடங்கியுள்ளது. நம்பெருமாள் நெல் அளவை கண்டருளும் வைபவத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றுள்ளனர்.

  • Apr 25, 2025 22:15 IST

    கோயில் திருவிழாவில் பட்டாசு வெடித்து விபத்து - 3 பேர் உயிரிழப்பு

    சேலம் மாவட்டம், கஞ்சநாயக்கன்பட்டியில் கோயில் திருவிழாவின் போது பட்டாசு வெடித்து விபத்து ஏற்பட்டது. குறிப்பாக, சுவாமி திருக்கல்யாணத்திற்காக பூசாரிப்பட்டி பகுதியில் இருந்து சீர்வரிசை எடுத்துச் சென்ற போது விபத்து நிகழ்ந்தது. இதில் மூன்று பேர் உயிரிழந்தனர். 



  • Apr 25, 2025 19:22 IST

    உதகையில் கூடுதலாக 500 வாகனங்களுக்கு அனுமதி

    உதகைக்கு அதிகளவு வாகனங்கள் வருவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்த நிலையில், சுற்றுலா பயணிகளுக்காக கூடுதலாக 500 வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  வார நாட்களில் 6000 வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், தற்போது கூடுதலாக 500 வாகனங்களுக்கு அனுமதி வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



  • Advertisment
    Advertisements
  • Apr 25, 2025 17:28 IST

    ஆளுநர் ஆர்.என். ரவியின் செயல் அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல – திருமாவளவன்

    சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு பின், பல்கலைகழக துணைவேந்தர்கள் மாநாட்டிற்கு ஆளுநர் அழைப்பு விடுத்தது, தமிழக அரசுக்கு நெருக்கடியாக இருப்பதாக அனைவராலும் உணரப்பட்டது. துணைவேந்தர்களுக்கும் நெருக்கடி ஏற்பட்டது. அந்த நெருக்கடியை கவர்னர் வேண்டுமென்றே உருவாக்கியுள்ளார். இன்று அந்த மாநாட்டை துணைவேந்தர்கள் புறக்கணிக்கிறார்கள். ஆளுநர் ஆர்.என். ரவியின் செயல் அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல என திருச்சியில் வி.சி.க தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.



  • Apr 25, 2025 16:57 IST

     20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் அறிவிப்பு 

    தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் திருவாரூர், தென்காசி, தேனி, விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகை, அரியலூர், கடலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், கோவை, நீலகிரி, மதுரை, திண்டுக்கல், திருப்பூர் ஆகிய 20 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.



  • Apr 25, 2025 16:23 IST

    பள்ளி வாகனங்களின் தரம் குறித்து ஆட்சியர் ஆய்வு

    விழுப்புரத்தில் பள்ளி வாகனங்களின் தரம் குறித்து  மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்துள்ளார். பேருந்தின் உள்கட்டமைப்பு வசதி, ஆவணங்களை  சரிபார்த்த அதிகாரிகள் அவசரகால வழி, வேக கட்டுப்பாட்டு கருவி, சிசிடிவி கேமரா குறித்து ஆய்வு செய்தனர். பேருந்தின் உள்கட்டமைப்பு வசதி, ஆவணங்களை அதிகாரிகள் சரிபார்த்தனர். 



  • Apr 25, 2025 16:13 IST

    டி.எஸ்.பி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை துணை காவல் கண்காணிப்பாளர் பிரதீப் பேசியதாக ஆடியோ வைரலாகியது. அதில் புதுக்கோட்டை மணல் லாரிகளில் மணல் கடத்த ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ரூ.5000 வசூலிக்க வேண்டும்  என உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், துணை காவல் கண்காணிப்பாளர் பிரதீப் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து ஐ.ஜி அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். 



  • Apr 25, 2025 14:23 IST

    நீதிபதிக்கு கொலை மிரட்டல்: போலீஸ் பாதுகாப்பு

    மதுரையில் கஞ்சா கடத்தல் வழக்கில் 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சகோதரர்கள், நீதிபதிக்கு கொலை மிரட்டல் விடுத்த விவகாரம் - போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி வீட்டுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.



  • Apr 25, 2025 13:14 IST

    துணை வேந்தர்களை காவல்துறை மிரட்டியுள்ளது - ஆர்.என்.ரவி

    துணைவேந்தர் மாநாட்டில் பங்கேற்கக் கூடாது என துணைவேந்தர்களின் வீடுகளுக்கு சென்று காவல் துறை மிரட்டியுள்ளது. மாநாட்டில் பங்கேற்றால் வீடு திரும்ப முடியாது என வீடு தேடிச் சென்ற காவல்துறை மிரட்டியுள்ளது; முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்த மாநாட்டில் துணைவேந்தர்கள் கலந்துகொள்ளவில்லை” என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார். 



  • Apr 25, 2025 12:32 IST

    துணைவேந்தர்கள் மாநாட்டில் ஜெகதீப் தன்கர்

    உதகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி நடத்தும் துணைவேந்தர்கள் மாநாட்டில் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் பங்கேற்றுள்ளார். பெரும் சர்ச்சைகளுக்கு இடையே தொடங்கியுள்ளது ஆளுநரின் துணைவேந்தர்கள் மாநாடு



  • Apr 25, 2025 11:53 IST

    மாணவர்கள் ஆற்றில் மூழ்கி பலி

    பொள்ளாச்சி அருகே ஆழியார் பகுதிக்கு சுற்றுலா வந்த மாணவர்கள் ஆழியார் ஆற்றில் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். சென்னை பூந்தமல்லி பிசியோதெரபி கல்லூரியில் 4ம் ஆண்டு படித்து வந்த தருண், ரேவந்த், ஆண்டோ ஜெனிப் ஆகிய மூவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.



  • Apr 25, 2025 11:27 IST

    52 பல்கலைக்கழகங்களில் 34 பல்கலைக்கழக பிரதிநிதிகள் துணைவேந்தர்கள் மாநாட்டில் பங்கேற்பு

    52 பல்கலைக்கழகங்களில் 34 பல்கலைக்கழக பிரதிநிதிகள் துணைவேந்தர்கள் மாநாட்டில் 
    பங்கேற்றுள்ளதாக ஆளுநர் மாளிகை தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் சில தனியார் துணைவேந்தர்கள் பங்கேற்றன.



  • Apr 25, 2025 11:24 IST

    விசாரணைக்கு ஆஜரான துணைவேந்தர் ஜெகநாதன்

    பெரியார் பல்கலைக்கழக முறைகேடு புகார் தொடர்பாக துணைவேந்தர் ஜெகநாதன் சேலத்தில் விசாரணைக்கு ஆஜரானார்.



  • Apr 25, 2025 11:18 IST

    சற்று நேரத்தில் தொடங்கும் துணைவேந்தர்கள் மாநாடு

    உதகையில் ஆளுநர் நடத்தும் துணைவேந்தரகள் மாநாடு சற்று நேரத்தில் தொடங்குகிறது. துணைவேந்தர்கள் மாநாட்டை குடியரசு துணைத் தலைவர் தொடங்கி வைக்கிறார். மாநாட்டில் 34 பல்கலைக்கழக துணைவேந்தர்கள், பல்கலைக்கழக பிரதிநிதிகள் பங்கேற்கின்றன என ஆளுநர் தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது.



  • Apr 25, 2025 10:35 IST

    ஜூன் 12இல் மேட்டூர் அணை திறப்பு - துரைமுருகன்

    மேட்டூர் அணை ஜூன் 12 ஆம் தேதி பாசனத்திற்காக திறக்கப்படும். நீர்பிடிப்பு பகுதிகளில் தூர்வாரும் பணிகள் முடிக்கப்படும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் எச்சரித்துள்ளார்.



  • Apr 25, 2025 10:13 IST

    விருத்தாச்சலம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சஸ்பெண்ட்

    விருத்தாச்சலம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். போக்சோ வழக்கில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர்களை விடுவிக்க பணம் வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.  வழக்கில் குற்றவாளி அல்லாதவர்களையும் விடுவிக்க பணம் வாங்கியதாக புகார். அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயலட்சுமி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.  கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவு அதே காவல் நிலையத்தில் எழுத்தராக பணிபுரியும் தலைமைக்காவலர் சிவசக்தி சஸ்பெண்ட்



  • Apr 25, 2025 09:47 IST

    உதகை துணை வேந்தர்கள் மாநாடு: நெல்லை எம்.எஸ் பல்கலைகழக துணைவேந்தர் பங்கேற்கவில்லை என தகவல்

    உதகையில் ஆளுநர் ரவி நடத்தும் பல்கலைக்கழக துணை வேந்தர் மாநாட்டில் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணை வேந்தர் சந்திரசேகர் பங்கேற்கவில்லை. மாநாட்டில் பங்கேற்க திருநெல்வேலியில் இருந்து உதகமண்டலம் சென்ற நிலையில், தனது முடிவை மாற்றி பாதியிலேயே நெல்லை நோக்கி திரும்புவதாக சந்திரசேகர் தகவல்.



  • Apr 25, 2025 09:46 IST

    நெல்லை இருட்டுக்கடை உரிமை விவகாரத்தில் மீண்டும் பிரச்னை

    நெல்லை இருட்டுக்கடை உரிமை யாருக்கு என்ற விவகாரத்தில் மீண்டும் புதிய பிரச்னை எழுந்துள்ள நிலையில், பிஜிலி சிங் எழுதி வைத்த உயிலின் அடிப்படையில் வழக்கு தொடர நயன் சிங் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  தற்போதைய உரிமையாளராக உள்ள கவிதாவின் சகோதரர் நயன் சிங் இருட்டு கடை ஸ்தாபனம் தனக்கு தான் சொந்தம் என பொதுஅறிவிப்பு வெளியிட்டுள்ளார்.  உயிலில் குறிப்பிட்டபடி ஜெயராம் சிங் மகன் நயன் சிங்க்கு மட்டும் இருட்டுக்கடை ஸ்தாபனம் பாத்தியபட்டது.  இருட்டுக்கடை விவகாரம் தொடர்பாக 2வது மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் திருநெல்வேலியில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பிஜிலி சிங் எழுதி வைத்த உயிலின் அடிப்படையில் வழக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்க உள்ளார் நயன்சிங்



Tamilnadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: