/indian-express-tamil/media/media_files/2025/04/18/WiC4kn8n2e7jv12xZlb0.jpg)
வக்பு சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு: நெல்லையில் கடையடைப்பு
வக்பு சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, நெல்லை மேலப்பாளையத்தில் இன்று கடையடைப்பு போராட்டம். 1500-க்கு மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ள நிலையில், மேலப்பாளையம் நகரின் முக்கிய இடங்களில் காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மேல்பாதி கோயில் தரிசனத்திற்கு மக்கள் வரவில்லை
விழுப்புரம் மாவட்டம், மேல்பாதி திரௌபதி அம்மன் கோயில் இரண்டாவது நாளாக திறக்கப்பட்ட நிலையில், பட்டியலின மக்கள் தரிசனம் செய்ய வரவில்லை.நேற்று பட்டியலின மக்கள் தரிசனத்திற்குஒருதரப்பினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் கோயிலுக்கு இன்று யாரும் வரவில்லை
-
Apr 18, 2025 20:50 IST
‘என் மீது சாதிய ரீதியில் தாக்குதல் நடத்தப்படவில்லை’ - மாணவன் சின்னத்துரை விளக்கம்
தன் மீது சாதிய ரீதியில் தாக்குதல் நடத்தப்படவில்லை என மாணவன் சின்னத்துரை விளக்கம் அளித்துள்ளார். இன்ஸ்டாகிராமில் பழகிய நபர்கள் அழைத்த இடத்திற்கு சென்ற போது, தாக்குதல் நடத்தி செல்போனை பிடுங்கினர்,
ஆறுதல் தெரிவிக்க வந்த காங்கிரஸ் கட்சியின் மாநில Sc பிரிவு தலைவர் ரஞ்சன் குமாரிடம் மாணவன் சின்னத்துரை தெரிவித்துள்ளார். -
Apr 18, 2025 19:22 IST
தென்காசி அருகே இளைஞர் கொலை; கைதானவர் தப்பி ஓட முயன்றபோது காலில் எலும்பு முறிவு
ன்காசி அருகே இளைஞர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் கைதான 5 பேரை நீதிமன்றத்திற்கு அழைத்து சென்ற போது செண்பகம் என்பவர் தப்பி ஓட முயன்ற போது கீழே விழுந்து வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
-
Apr 18, 2025 18:56 IST
டி.எஸ்.பி. தலைமையில் சிலுவை யாத்திரை
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே புனித வெள்ளி சிலுவை யாத்திரைக்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், டி.எஸ்.பி. தலைமையில் பலத்த பாதுகாப்புடன் புனித வெள்ளி சிலுவை யாத்திரை நடந்தது
-
Apr 18, 2025 18:15 IST
தென்காசி அருகே தலை துண்டித்து இளைஞர் கொலை - இளம்பெண் கைது
தென்காசி மாவட்டம் கீழப்புலியூரில் தலை துண்டித்து இளைஞர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் கொலைக்கு திட்டம் தீட்டி கொடுத்த இளம்பெண் மகாதேவி என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
-
Apr 18, 2025 18:13 IST
மருதமலைக்கு காரில் வருபவர்களுக்கு அனுமதி இல்லை – கோயில் நிர்வாகம்
மருதமலை முருகன் கோயிலுக்கு காரில் வருபவர்களுக்கு அனுமதி இல்லை என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. விசேஷ தினங்களில் மருதமலை முருகன் மலைக்கோயிலுக்கு 4 சக்கர வாகனங்களில் செல்ல பக்தர்களுக்கு அனுமதி இல்லை. பக்தர்கள் படிக்கட்டுகள் மற்றும் கோயில் பேருந்தை பயன்படுத்துமாறு கோயில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது
-
Apr 18, 2025 18:12 IST
கள்ளக்குறிச்சி அருகே டாஸ்மாக்கில் 2 கிராமத்தினர் மோதல்
கள்ளக்குறிச்சி அருகே டாஸ்மாக்கில் நேற்று மரூர் – எடையூர் ஆகிய 2 கிராமங்களைச் சேர்ந்தவர்கள் மதுபோதையில் மோதலில் ஈடுபட்டனர். இன்று மீண்டும் அதே கிராமங்களைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒருவர் மீது ஒருவர் கொலைவெறி தாக்குதல் நடத்தினர். மோதல் சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
Apr 18, 2025 18:10 IST
கொடைக்கானலில் 60 இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி கண்காணிப்பு
கொடைக்கானலில் சுற்றுலா சீசன் தொடங்கியுள்ள நிலையில் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பிற்கு நட்சத்திர ஏரியைச் சுற்றி 60 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. போக்குவரத்து நெரிசலை சரி செய்ய சிசிடிவி மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மது பாட்டில் போன்ற குப்பைகளை ஏரியில் வீசுவோரை கட்டுப்படுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த வார இறுதியில் அனைத்து சிசிடிவி கேமராக்களும் பயன்பாட்டிற்கு வரும்
-
Apr 18, 2025 17:13 IST
லாரி மீது கார் மோதி விபத்து - 3 பேர் உயிரிழப்பு
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே காரும் எதிரே வந்த லாரியும் மோதி விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் உயிரிழந்தனர். விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வரும் நிலையில், சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
-
Apr 18, 2025 16:38 IST
திருவண்ணாமலையில் பெண் வங்கி ஊழியர் தற்கொலை
திருவண்ணாமலையில் பெண் வங்கி ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணமாகி ஒன்றரை ஆண்டுகளில் தற்கொலை செய்து கொண்ட நிலையில், இறப்புக்கு கணவன் மற்றும் மாமியார் தான் காரணம் எனக் கூறி அப்பெண்ணின் ஊழியர்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தினர்.
-
Apr 18, 2025 14:29 IST
ராமேஸ்வரம் – கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் ரூ.1,000 கோடியில் புதிய பைபாஸ் சாலை
ராமேஸ்வரம் – கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் நகர பகுதிகளை இணைக்காதவாறு ரூ.1,000 கோடியில் புதிதாக பைபாஸ் அமைக்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது.ராமேஸ்வரத்தில் இருந்து கொச்சி வரையிலான தேசிய நெடுஞ்சாலை மதுரை வழியாக செல்கிறது.இச்சாலையில் மதுரை – ராமநாதபுரம் மார்க்கத்திலும், மதுரை – தேனி மார்க்கத்தில் உசிலம்பட்டி துவங்கி நாகமலை புதுக்கோட்டை வரையிலும், நான்கு வழிச்சாலைகளாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளன. இச்சாலை அமைக்கப்பட்டபோது ஊரக பகுதிகளாக இருந்த மதுரை மாவட்டத்திற்கு உட்பட்ட விராட்டிபத்து, அச்சம்பத்து பகுதிகள், உசிலம்பட்டி, ஆண்டிபட்டி வரையிலான பகுதிகள் நகரமயமாக்கல் காரணமாக மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளாக வளர்ந்து வருகின்றன.
இதனால், சம்பந்தப்பட்ட பகுதிகளை கடந்து செல்லும்போது பிரதான சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இதை தவிர்க்க பழைய பைபாஸ் சாலையை விரிவாக்கம் செய்வது அல்லது ஏற்கனவே உள்ள சாலைக்கு நிகராக புதிய பைபாஸ் சாலை அமைப்பது ஆகிய பணிகள் இச்சாலையை பராமரிக்கும் மாநில நெடுஞ்சாலைத்துறையின் தேசிய நெடுஞ்சாலை பிரிவால் நடந்து வருகின்றன.
இதன்படி, சம்பந்தப்பட்ட சாலையில் மதுரை மாவட்டம், நாகமலை புதுக்கோட்டை துவங்கி முடக்குச்சாலை சந்திப்பு வரை விரிவாக்கம் செய்வதில் விராட்டிபத்து, அச்சம்பத்து பகுதிகளில் நில ஆர்ஜித பிரச்னைகள் எழுந்ததால் அதை தவிர்க்க, முடக்குச்சாலை சந்திப்பில் பாலம் கட்டப்பட்டுள்ளது. மேலும், ஊர்ப்பகுதிக்குள் நுழையாமல் சென்றுவர புறவழிச்சாலை அமைக்கும் பணிகள் ரூ.260 கோடியில் நடந்து வருகின்றன.
இப்பணிகளுடன் சேர்த்து, கொச்சி சாலை பயணிக்கும் திசையில் உள்ள உசிலம்பட்டி, ஆண்டிபட்டி ஆகிய பகுதிகளில் ஊருக்குள் செல்லாத வகையில் மாற்றுச்சாலை அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
Apr 18, 2025 13:47 IST
ஓடும் போதே திடீரென தீ பிடித்து எறிந்த கார்
கரூர் மாவட்டம் ராயனூர் பகுதியை சேர்ந்த காமராஜ் என்பவர் தனது மாருதி ஆல்டோ காரை சர்வீஸ் செய்வதற்காக கரூரில் உள்ள ஓர்க் ஷாப்பில் விட்டுள்ளார்.. சர்வீஸ் செய்யப்பட்ட வண்டியை மெக்கானிக் தனசேகர் என்பவர் ஓட்டி பார்ப்பதற்காக எடுத்து வந்துள்ளார் அப்போது கரூரிலிருந்து மூலமங்கலம் பிரிவு வரை சென்ற தனசேகர் திரும்பி சேலம் கரூர் தேசிய நெடுஞ்சாலையில் தளவா பாளையம் என்ற பகுதியில் வந்தபோது காரின் முன் பக்கத்தில் புகை வருவதைக் கண்ட அவர் உடனடியாக காரை சாலையின் ஓரம் நிறுத்திவிட்டு கீழே இறங்கி உள்ளார். கார் மளமளவென தீப்பற்றி முழுவதும் எரிய தொடங்கியது இதனை எடுத்து அருகில் இருந்தவர்கள் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.. விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அனைத்தனர். இருப்பினும் அதற்குள் கார் முழுவதுமாக எரிந்து நாசமானது. நெடுஞ்சாலையில் கார் தீ விபத்து நடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
Apr 18, 2025 13:21 IST
கல்லூரி சிஇஓ-க்கு வலைவீச்சு
கோவை அருகே கல்லூரியில் பணியாற்றிக் கொண்டு படித்து வந்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை ஏற்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள கல்லூரி சிஇஓ பிரசன்னாவை போலீஸ் வலைவீசி தேடி வருகிறது.
-
Apr 18, 2025 12:59 IST
வறுமையால் விஷமருந்திய தாய்
கணவரை இழந்து மகள், மகனுடன் தனியாக வசித்து வந்த தாய் விபரீத முடிவு எடுத்துள்ளார். வாட்டிய வறுமையால் மகள், மகனுக்கு விஷம் கொடுத்து தானும் விஷமருந்திய ஜீவகுமாரி. ஜீவகுமாரியும் மகளும் உயிரிழந்துள்ளனர். மகன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
-
Apr 18, 2025 12:26 IST
ராமேஸ்வரம்: ரூ.30 கோடி மதிப்பு அறைகள் முடக்கம்
ராமேஸ்வரம் பாம்பன் பகுதியில் இயங்கி வரும் செவன் ஹில்ஸ் பாம்பன் ஐலேன்ட் தனியார் ரிசார்ட்டில் ரூ.30 கோடி மதிப்பு 60 அறைகளை முடக்கியது அமலாக்கத்துறை. பணப்பரிவர்த்தனை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
-
Apr 18, 2025 11:19 IST
கோவையில் மக்களிடம் கட்ட பஞ்சாயத்து செய்த டி.எஸ்.பி மீது பொதுமக்கள் புகார்
கோவையில் செயல்பட்டு வந்த நிதி நிறுவனம் முன்னாள் ராணுவ வீரர்கள் உட்பட பொதுமக்கள் பலரிடம், மோசடி செய்ததாக தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்டங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்ட டி.எஸ்.பி ஒருவர் மோசடி செய்த நிதி நிறுவனத்துடன் இணைந்து பாதிக்கப்பட்ட மக்களிடம் கட்டப்பஞ்சாயத்து செய்து வருவதாக, கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர்.
-
Apr 18, 2025 10:25 IST
புராதனச் சின்னங்களை பார்க்க இன்று ஒரு நாள் இலவசம்!
சர்வதேச பாரம்பரிய தினத்தையொட்டி, புதுக்கோட்டை மாவட்டம் கொடும்பாளூர் புராதனச் சின்னங்களை சுற்றுலாப் பயணிகள் இன்று ஒரு நாள் கட்டணமின்றி கண்டு ரசிக்கலாம் என தொல்லியல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Apr 18, 2025 10:24 IST
பள்ளி மாணவியை திருமணம் செய்து இளைஞர் மீது போக்சோ
பொள்ளாச்சியில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு ஆசை வார்த்தை கூறி, கேரளா அழைத்து சென்று திருமணம் செய்து 22 வயது இளைஞர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவருக்கு கடந்த ஆண்டு முதல் திருமணம் நடந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
-
Apr 18, 2025 10:19 IST
அணையில் இருந்து வரும் நீரில் பொங்கி வரும் நுரை: விவசாயிகள் வேதனை
ஓசூர்: கெலவரப்பள்ளி அணையிலிருந்து பாசனத்திற்கு திறக்கப்பட்டுள்ள நீரிலிருந்து பொங்கி வரும் நுரையால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கர்நாடகத்தில் தென்பெண்ணை ஆற்றின் கரையோர தொழிற்சாலைக் கழிவு நீர் ஆற்றில் கலப்பதைத் தடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.
-
Apr 18, 2025 09:48 IST
11ம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த இளைஞர் போக்சோவில் கைது.
பொள்ளாச்சியில் 11ம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த இளைஞர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
Apr 18, 2025 09:48 IST
அட்டை உற்பத்தி ஆலையில் பயங்கர தீவிபத்து
காஞ்சிபுரம் இருங்காட்டுக்கோட்டை சிப்காட்டில் அட்டை உற்பத்தி செய்யும் ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது. பல்வேறு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.
-
Apr 18, 2025 09:46 IST
நெல்லை மேலப்பாளையத்தில் கடையடைப்பு
வக்பு வாரிய திருத்தச் சட்டத்தை எதிர்த்து நெல்லை மேலப்பாளையத்தில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. அனைத்து ஜமாத், அனைத்து அரசியல் கட்சி சார்பில் நடக்கும் போராட்டத்தையொட்டி கடைகள் அடைக்கப்பட்டன. 1500 க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில் ஆட்டோ, கார், வேன் ஆகியவை இயங்கவில்லை.
-
Apr 18, 2025 09:42 IST
கரூர் - சிறுமி கடத்தல், 2 பேர் கைது
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே திருமணம் செய்து கொண்டு காதலுடன் தப்ப முயன்ற 17 வயது சிறுமி கடத்தப்பட்ட நிலையில், பெற்றோர் கட்டாய திருமணம் செய்து வைக்க முயன்றதால் காதலுடன் சிறுமி தப்பி ஓட முயன்றுள்ளார். ஆனால் சிறுமி சென்ற வேனை வழிமறித்த உறவினர்கள், அடித்து நொறுக்கிய நிலையில், காதலனின் தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில் சிறுமியின் உறவினர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.