Coimbatore, Madurai, Trichy News live updates: வேலூரில் திருநங்கைகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்க எதிர்ப்பு

கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Protest Mh
  • Apr 19, 2025 20:15 IST

    மலேசியாவிற்கு சுற்றுலா சென்ற காரைக்குடி இளைஞர்கள் கடத்தல்

    மலேசியாவிற்கு சுற்றுலா சென்ற காரைக்குடி இளைஞர்கள் கடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரைக்குடியைச் சேர்ந்த நூர் முகம்மது இஸ்மாயில் மற்றும் அவரது உறவினர் முஹமது தாரிக் ஆகியோர் பிப்ரவரி 13-ஆம் தேதி மலேசியாவிற்கு சுற்றுலா சென்றனர். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர்களது உறவினரை தொடர்பு கொண்ட அடையாளம் தெரியாத நபர் ஒருவர், சுற்றுலாவிற்கு வந்த இளைஞர்களை கடத்தியுள்ளதாக கூறியுள்ளார். மேலும், ரூ. 26 லட்சம் கொடுத்தால் மட்டுமே இருவரையும் விடுவிக்க முடியும் என்று மிரட்டல் விடுத்துள்ளார். இதனால், இருவரையும் மீட்டு தருமாறு சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அவர்களது உறவினர்கள் மனு அளித்துள்ளனர்.



  • Apr 19, 2025 18:23 IST

    வேலூரில் திருநங்கைகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்க எதிர்ப்பு

    வேலூர் மாவட்டம்,வருவாய்த்துறையை கண்டித்து உப்பரப்பள்ளி கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். முதலில் தங்களுக்கே வீட்டுமனை பட்டா வழங்க மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். திருநங்கைகளுக்கு பட்டா வழங்கினால் தீக்குளிப்போம் என ஊர்மக்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.



  • Advertisment
  • Apr 19, 2025 15:31 IST

    ஒசூர்: குவாரி, கிரஷர், லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம்!

    ஒசூர் பகுதி குவாரி, கிரஷர், லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தி வருகின்றனர். கோனேரிப்பள்ளியில் டிப்பர் லாரிகளை ஒரே இடத்தில் நிறுத்தி 1000-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.



  • Apr 19, 2025 13:59 IST

    உதகையில் பிளாஸ்டிக் பொருட்கள் - ஆட்சியர் கடும் எச்சரிக்கை

    உதகையில் மாவட்ட ஆட்சியர் தலைமையில்  தூய்மை பணி நடைபெற்ற நிலையில்,  பிளாஸ்டிக் பொருட்கள் வைத்திருந்த வணிக  நிறுவனங்களுக்கு ஆட்சியர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். 



  • Advertisment
    Advertisements
  • Apr 19, 2025 11:48 IST

    வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர் உயிரிழப்பு

    கோவை வெள்ளியங்கிரி மலையில் மேலும் ஒரு பக்தர் உயிரிழந்துள்ளார். தூத்துக்குடியை சேர்ந்த புவனேஷ் என்ற இளைஞர் 
    7வது மலையில் ஏறும் போது கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். மலையில் உயிரிழந்த இளைஞர் உடலை டோலி கட்டி மீட்ட வனத்துறையினர்



  • Apr 19, 2025 11:22 IST

    ‘மலரும் புன்னகை’யால் மீட்டெடுக்கப்பட்ட புன்னகைகள்!

    விருதுநகர்: 'மலரும் புன்னகை’ திட்டத்தின் கீழ் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் எத்துப்பல் உள்ள மாணவ, மாணவிகளுக்கு சீரான பல் வரிசைக்கான மறு சீரமைப்பு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ரூ.30,000 முதல் ரூ.1.40 லட்சம் வரை செலவாகும் இச்சிகிச்சை, மாவட்ட நிர்வாகத்தின் முயற்சியில் முற்றிலும் இலவசமாக 300 மாணவ மாணவிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது; மேலும் பலரும் வரும் நாட்களில் இதில் பயன்பெற உள்ளனர்



  • Apr 19, 2025 09:52 IST

    குமரி கண்ணாடி பாலத்தில் மக்களுக்கு அனுமதி

    கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை-விவேகானந்தர் பாறையை இணைக்கும் கண்ணாடி பாலம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு பணிகளுக்காக மூடப்பட்டிருந்த கண்ணாடி கூண்டு பாலம் 4 நாட்களுக்குப் பின் மீண்டும்  திறக்கப்பட்டது. வழக்கம்போல் கண்ணாடி கூண்டு பாலத்டில் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. 



  • Apr 19, 2025 09:14 IST

    சமயபுரம் கோயிலுக்குச் சென்ற மினி பேருந்து கவிழ்ந்து விபத்து

    சமயபுரம் முத்துமாரியம்மன் கோயிலுக்குச் சாமி கும்பிட சென்ற மினி பேருந்து மதுரை - ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 15-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.



Trichy Coimbatore Tamilnadu News Update Madurai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: