Coimbatore, Madurai, Trichy News Updates: மதுரையில் கனமழை - விமானம் தரையிறங்குவதில் சிக்கல்

கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Flight landing issue

சிப்காட் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து விபத்து: கடலூர் அருகே சிப்காட் சாயப்பட்டறை தொழிற்சாலையில்ரசாயன நீர் கொண்ட டேங்கர் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. 6 லட்சம் லிட்டர் ரசாயன நீர் கொண்ட டேங்கர் வெடித்ததால், அருகில் உள்ள வீடுகளுக்குள் ரசாயன நீர் புகுந்தது. பொதுமக்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு 20-க்கும் மேற்பட்டோர் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

  • May 15, 2025 22:01 IST

    சூலூர் விமானப்படை தளத்திற்குள் அத்துமீறி நுழைந்த நபரால் பரபரப்பு

    கோவை மாவட்டம், சூலூரில் செயல்பட்டு வரும் விமானப்படை தளத்திற்குள் பாதுகாப்பு வளையத்தை கடந்து அத்துமீறி நுழைந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட நபரை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.



  • May 15, 2025 19:34 IST

    மதுரையில் கனமழை - விமானம் தரையிறங்குவதில் சிக்கல்

    மதுரையில் கனமழை பெய்து வருவதால், விமானம் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஹைதராபாத்தில் இருந்து மதுரை வந்த இண்டிகோ விமானம், சுமார் 1 மணி நேரமாக வானில் வட்டமடித்தது.



  • Advertisment
  • May 15, 2025 18:25 IST

    கொடைக்கானலில் லேப்டாப் வெடித்து பயங்கர விபத்து - ஒருவர் படுகாயம்

    கொடைக்கானல் அருகே வில்பட்டி கிராமத்தில் பேன்சி ஸ்டோரில் லேப்டாப் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. சார்ஜ் போட்ட படி லேப்டாப் பயன்படுத்திய ஜெயவீரன் என்கிற மாற்று திறனாளி படுகாயம் அடைந்தார். மின் கசிவு காரணமாக லேப்டாப் வெடித்து சிதறியதாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது



  • May 15, 2025 18:23 IST

    பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர் மரணம்

    புதுக்கோட்டை மாவட்டம் குருங்கலூர் வேளாணி கிராமத்தில், பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர் உயிரிழந்தார். 30க்கும் மேற்பட்டோர் ஏம்பல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்



  • Advertisment
    Advertisements
  • May 15, 2025 18:22 IST

    தி.மலை: பெட்ரோல் குண்டு வீச்சு - 3 வயது குழந்தை படுகாயம்

    திருவண்ணாமலை மாவட்டம் சந்தவாசல் அருகே மனைவியை கொல்ல கணவன் பெட்ரோல் குண்டு வெடித்து சிதறியதில் 3 வயது குழந்தை படுகாயம் அடைந்தது. விளாங்குப்பத்தை சேர்ந்த ராஜா - மனைவி சின்ன பாப்பா இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சின்ன பாப்பாவுக்கு சொந்தமான 25 சென்ட் நிலத்தை தனது பெயருக்கு எழுதி வைக்க வலியுறுத்தி ராஜா தகராறு செய்து வந்துள்ளார். தனது மகள் வீட்டிற்கு சென்ற சின்ன பாப்பாவை கொலை செய்யும் நோக்கில் ராஜா வீசிய பெட்ரோல் குண்டு வெடித்ததில், சின்ன பாப்பாவின் 3 வயது பேத்தி ஆஷிகா படுகாயம் அடைந்தார். குழந்தைக்கு வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.



  • May 15, 2025 18:16 IST

    வடகாடு மோதல் விவகாரம் - மாவட்ட ஆட்சியருக்கு ஐகோர்ட் உத்தரவு

    புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு திருவிழாவில் ஏற்பட்ட இருதரப்பு மோதல் விவகாரத்தில் சம்பவ இடத்தை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்ய உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. வடகாடு திருவிழாவில் கலவரத்தன்று, மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு நடத்தாதது ஏன்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். கடந்த 4 முதல் 7ம் தேதி வரையிலான கோவில் பிரச்சினை நடந்த இடத்தின் சிசிடிவி காட்சிகளை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் சம்பவ இடத்தை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்யவில்லையெனில், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது



  • May 15, 2025 17:05 IST

    அழகர் கோவில் திருவிழா - நீதிபதிகள் பாராட்டு

    மதுரை கள்ளழகர் திருவிழாவில், எந்த இடத்திலும் சாதியபாகுபாடு இல்லை  உயர்நீதிமன்ற மதுரை அமர்வு பாராட்டு தெரிவித்துள்ளது. மதுரை சித்திரை திருவிழாவைப் போல் அனைத்து இடங்களிலும் மக்கள் ஒற்றுமையாக இருக்கலாமே என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.



  • May 15, 2025 17:04 IST

    லேப்டாப் வெடித்து பயங்கர விபத்து - ஒருவர் படுகாயம்

    கொடைக்கானல் அருகே வில்பட்டி கிராமத்தில் பேன்சி ஸ்டோரில் லேப்டாப் வெடித்து தீ விபத்து. சார்ஜ் போட்ட படி லேப்டாப் பயன்படுத்திய ஜெயவீரன் என்கிற மாற்று திறனாளி படுகாயம். மின் கசிவு காரணமாக லேப்டாப் வெடித்து சிதறியதாக முதல்கட்ட விசாரணையில் தகவல்



  • May 15, 2025 16:45 IST

    இன்னும் சில ஊர்களில் தீண்டாமை உள்ளது: உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வேதனை

    இன்னும் சில ஊர்களில் தீண்டாமை உள்ளது. இன்னும் சில ஊர்களில் சிலர் சட்டை அணிந்து போக முடியவில்லை, தெருக்களில் நடந்து செல்ல முடியவில்ல.  பிரச்சினைகளை கண்டறிந்து மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வேதனை தெரிவித்துள்ளார்.



  • May 15, 2025 16:39 IST

    காஞ்சிபுரம் திருக்கோயில் வைகாசி பிரம்மோற்சவம்: வடகலை - தென்கலை மோதல்

    காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோயிலின் வைகாசி பிரம்மோற்சவ நிகழ்ச்சியின்போது சாமியை நடுரோட்டில் நிறுத்திவிட்டு.. பிரிவினர். சில தினங்களுக்கு முன் பாடல் பாடுவதில் பிரச்னை ஏற்பட்டநிலையில் மீண்டும் சலசலப்பு.



  • May 15, 2025 16:38 IST

    வாந்தி, மயக்கம் பாதிப்பு: மருத்துவமனைக்கு செல்லாத 60 வயதான நபர் மரணம்

    புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் பகுதியில் பிறந்தநாள் விழாவில் விருந்து சாப்பிட்ட சுமார் 30 பேருக்கு வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு - மருத்துவமனைக்கு செல்லாத 60 வயதான கருப்பையா என்பவர் உயிரிழப்பு. இது குறித்து, ஏம்பல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



  • May 15, 2025 16:36 IST

    கரிகால் சோழனால் கட்டப்பட்ட கல்லணை புதுப்பிப்பு

    தமிழ்நாட்டின் நீர்ப்பாசன தந்தை என அழைக்கப்படும் சர் ஆர்தர் காட்டனின் 223வது பிறந்த தினத்தை ஒட்டி, கொள்ளிடம் ஆற்றில் அவரது புகைப்படத்திற்கு மரியாதை செய்த விவசாயிகள். பிரிட்டிஷ் பொறியாளரான சர் ஆர்தர் காட்டன், முக்கொம்பு மேலணை, கொள்ளிடம் கீழணை ஆகியவற்றை கட்டினார். கரிகால் சோழனால் கட்டப்பட்ட கல்லணையையும் புதுப்பித்தார்



  • May 15, 2025 16:35 IST

    டி.ஐ.ஜி வருண் குமார் தொடர்ந்த அவதூறு வழக்கில், சீமான் ஏன் ஆஜராகவில்லை? நீதிமன்றம் கேள்வி

    டி.ஐ.ஜி வருண் குமார் தொடர்ந்த அவதூறு வழக்கில், சீமான் ஏன் ஆஜராகவில்லை? என திருச்சி மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ள நிலையில், இந்த வழக்குஇன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. இதில் டி.ஐ.ஜி. வருண் குமார் ஆஜரானார். கடந்த முறை விசாரணையின் போது, வழக்கில் முறையாக ஆஜராவேன் எனக் கூறி சென்றீர்கள். அப்படி இருக்கையில் இன்று ஏன் ஆஜராகவில்லை?” என சீமான் தரப்பு வழக்கறிஞரிடம் நீதிபதி கேள்வி



  • May 15, 2025 16:27 IST

    தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு தொடர்பான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

    கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கான 25% இட ஒதுக்கீட்டுக்கான சேர்க்கையை உடனடியாக துவங்க கோரிய வழக்கில்,தமிழக அரசு பதிலளிக்க, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது,



  • May 15, 2025 16:26 IST

    ஜி.பி.முத்து - கிராம மக்கள் இடையே சமாதானம்

    கீழத்தெரு தொடர்பாக திருச்செந்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் சமாதான கூட்டம். ஜி.பி.முத்து வீட்டிற்கு செல்லும் வகையில் பாதையை சரி செய்து கொடுக்க அறிவுறுத்தல்



  • May 15, 2025 15:49 IST

    உதகையில் ஸ்டாலின்



  • May 15, 2025 15:17 IST

    வடகலை - தென்கலை பிரிவினர் மீண்டும் மோதல்

    காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி பிரமோற்சவ உற்சவ ஊர்வலத்தில் வடகலை - தென்கலை பிரிவினர் மீண்டும் மோதல்

    சாமி பல்லாக்கை ரோட்டின் நடுவே நிறுத்தி வைத்து இரு தரப்பும் வாக்குவாதம். போலீசார் சமாதானம் செய்ததை அடுத்து பல்லக்கு புறப்பட்டது.



  • May 15, 2025 14:29 IST

    5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

    நீலகிரி, கோவை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
    - சென்னை வானிலை ஆய்வு மையம்



  • May 15, 2025 13:48 IST

    பொள்ளாச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கூடுதல் நிவாரணம் வழங்க முதலமைச்சர் உத்தரவு..!

    தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கோயம்புத்தூர் நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது.அதன்படி, இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட 9 பேருக்கும் சாகும்வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மொத்தமாக ரூ.85 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிடப்பட்டது,இந்நிலையில் முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் செய்தி குறிப்பில் நீதிமன்றம் உத்தரவிட்ட மொத்த நிவாரணத் தொகையாகிய ரூ.85 லட்சத்திற்கும் கூடுதலாக பாதிக்கப்பட்ட பெண்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.25 லட்சம் என நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.



  • May 15, 2025 13:47 IST

    இன்று (மே 15) கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

    நீலகிரி, கோவை, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் இன்று (மே 15) கனமழைக்கு வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 



  • May 15, 2025 13:39 IST

    கணவன் - மனைவி அடுத்தடுத்து தற்கொலை

    வயிற்று வலியால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட கர்ப்பிணி மனைவி. அதையடுத்து மனைவி இறந்த சோகத்தில் கணவரும் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். திருவண்ணாமலையில் நடந்துள்ள இச்சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 



  • May 15, 2025 12:47 IST

    ஜி.பி.முத்து விவகாரம்- பேச்சுவார்த்தையில் உடன்பாடு

    தூத்துக்குடி: உடன்குடியில் பாதை தொடர்பான பிரச்னையில் ஜி.பி.முத்து, ஊர் மக்கள் இடையே சமரசம் உடன்குடி பெருமாள்புரம் கீழத்தெருவை காணவில்லையென ஆட்சியரிடம் ஜி.பி.முத்து புகார் தந்திருந்தார்



  • May 15, 2025 11:37 IST

    சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் 20 பேர் காயம்

    கிருஷ்ணகிரி அஞ்செட்டி அருகே தாண்டியத்தில் சரக்கு வாகனம் கவிழ்ந்து 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் பூக்கள் அறுவடைக்கு சென்ற 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



  • May 15, 2025 10:37 IST

    யானை தாக்கி ஒருவர் பலி

    கோவை வைதேகி நீர் வீழ்ச்சிக்கு செல்லும் சாலையில் நேற்றிரவு 11.30 மணியளவில் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவரை காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தார்.  பூலுவபட்டியைச் சேர்ந்த சுரேஷ் அபிமன்யூ (33) நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளார். ஆலாந்துறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 



  • May 15, 2025 10:06 IST

    மாடுகள் மீது மோதிய அரசு பேருந்து

    நேற்றிரவு தேனி டி.கள்ளிப்பட்டி அருகே திண்டுக்கல் பைபாஸ் சாலையைக் கடந்த தொழு மாடுகள் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் 18 மாடுகள் உயிரிழப்பு. 20க்கும் மேற்பட்ட மாடுகள் காயம் தேவாரம் பகுதியைச் சேர்ந்த சுருளிச்சாமி, நூற்றுக்கும் மேற்பட்ட நாட்டு இன மாடுகளை உரத்திற்காக தோட்டங்களில் தொழுவம் அமைத்து மேய்ச்சல் செய்து வருகிறார். அரசுப் பேருந்து ஓட்டுநரான அழகர்சாமி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 



  • May 15, 2025 09:55 IST

    கோவை: காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி

    கோவை மாவட்டம் வைதேகி நீர் வீழ்ச்சிக்கு செல்லும் சாலையில் நேற்றிரவு 11.30 மணியளவில் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவரை காட்டு யானை தாக்கியதில் பூலுவபட்டியைச் சேர்ந்த சுரேஷ் அபிமன்யூ (33) என்பவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்து உள்ளார். ஆலாந்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



  • May 15, 2025 09:28 IST

    மதுரை: அழகர் மலைக்கு புறப்பட்டார் கள்ளழகர்

    மதுரை கருப்பணசாமி கோவில் சன்னதியில் இருந்து பூப்பல்லக்கில் அழகர் மலைக்கு புறப்பட்டார். அங்கு திரண்டு வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா... கோஷத்துடன் கள்ளழகரை தரிசனம் செய்தனர். தொடர்ந்து கள்ளழகர் மூன்றுமாவடி, அப்பன் திருப்பதி, கள்ளந்திரி வழியாக நாளை காலை அழகர் மலைக்கு போய் சேருகிறார்.



  • May 15, 2025 09:27 IST

    கடலூர் சிப்காட்டில் டேங்கர் வெடித்து விபத்து

    கடலூர் அருகே சிப்காட் சாயப்பட்டறை தொழிற்சாலையில் ரசாயனநீர் கொண்ட டேங்கர் வெடித்து விபத்து ஏற்பட்டது. 6 லட்சம் லிட்டர் ரசாயன நீர்கொண்ட டேங்கர் வெடித்து விபத்து ஏற்பட்டதால், அருகில் உள்ள வீடுகளுக்குள் ரசாயன கழிவு நீர் புகுந்தது இதனால் கண்எரிச்சல், வாந்தி, மயக்கம் ஏற்பட்டு 20க்கும் மேற்பட்டோர் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



Trichy Madurai Coimbatore Tamilnadu News Latest

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: