Chennai News Highlights: சென்னை - அரக்கோணம் வழித்தடத்தில் சென்ற சரக்கு ரயிலில் தீ

Tamil Nadu News Update: செய்திகள் அனைத்தையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

Tamil Nadu News Update: செய்திகள் அனைத்தையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
fire accident

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

  • Jul 12, 2025 22:09 IST

    ”கட்சிகளை உடைத்து மகிழ்வதுதான் பா.ஜ.க. வேலை”

    அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியை மக்கள் ஒருபோதும் அங்கீகரிக்க மாட்டார்கள் என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். கடந்த தேர்தலில் அ.தி.மு.க.வை 4 துண்டுகளாகவும், தற்போது பா.ம.க.வை 2 துண்டுகளாவும் பா.ஜ.க.வினர் ஆக்கிவிட்டனர். கட்சிகளை இரண்டாக உடைத்து மகிழ்வதுதான் பா.ஜ.க.வின் வேலை என்றும் அவர் கூறினார்.



  • Jul 12, 2025 22:02 IST

    நான் முதல்வன் திட்டம் படுதோல்வி - அன்புமணி ராமதாஸ்

    நான் முதல்வன் திட்டத்திற்கு விளம்பரம் செய்வதில் காட்டிய அக்கறையில் நூற்றில் ஒரு பங்கை கூட, அத்திட்டத்தை பயனுள்ள முறையில் வடிவமைப்பதில் திமுக அரசு காட்டவில்லை என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறி உள்ளார். அடுத்து அமையவிருக்கும் பாட்டாளி மக்கள் கட்சி அங்கம் வகிக்கும் ஆட்சியில், திறன் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்தை மிகச் சிறப்பான முறையில் கனவுத் திட்டமாக உருவாக்கி இளைஞர்கள் பயனடையும் வகையில் செயல்படுத்துவோம் என உறுதியளிக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.



  • Advertisment
  • Jul 12, 2025 21:59 IST

    நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பாஜக வழக்கறிஞர் சஸ்பெண்ட்

    நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 4 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட பாஜக வழக்கறிஞர் ஏ.மோகன்தாஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். வழக்கறிஞர் தொழில் செய்யத் தடை விதித்து தமிழ்நாடு புதுவை பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் பார் கவுன்சில் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.



  • Jul 12, 2025 21:23 IST

    ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் குழந்தைகள் மையக் கட்டடம் திறப்பு

    சென்னை திரு.வி.க.நகர் மண்டலம், வார்டு-74 ல் குழந்தைகள் மையக் கட்டடம், பல்நோக்கு மையக் கட்டடம் மற்றும் உடற்பயிற்சிக் கூடத்தினை அமைச்சர் சேகர்பாபு பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார். வார்டு-74, சந்திரயோகி சமாதி சாலையில் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட குழந்தைகள் மையக் கட்டடத்தினைப் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார்.



  • Advertisment
    Advertisements
  • Jul 12, 2025 21:07 IST

    சென்னை- சிங்கப்பூர் விமானம் தாமதம்- பயணிகள் அவதி

    சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் புறப்பட தயாரானது. விமானத்தில் பயணிகள் 217 பேர் இருந்தனர். விமானம் புறப்படுவதற்கு முன்பாக விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு இருப்பதை விமானி கண்டறிந்தார். இதனால் விமானம் புறப்படாமல் ஓடுபாதையில் நிறுத்தப்பட்டது. உரிய நேரத்தில் விமானத்தில் தொழில் நுட்ப கோளாறு கண்டறியப்பட்டதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. விமானத்தின் கோளாறு சீர் செய்யப்படும் வரை பயணிகள் விமானத்திற்குள்ளேயே அமர்ந்து இருந்தனர். இதனால், பயணிகள் கடும் அவதி அடைந்தனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு விமானம்காலை 11.30 மணிக்கு சிங்கப்பூருக்குப் புறப்பட்டது.



  • Jul 12, 2025 20:44 IST

    தமிழகத்தில் அதிமுக தனித்துதான் ஆட்சி: எடப்பாடி பேட்டி

    கூட்டணி ஆட்சி என்பதில் பாஜக உறுதியாக இருக்கும் நிலையில், தனித்து அதிமுக ஆட்சி அமைக்கும் என்பதை மீண்டும் மீண்டும் எடப்பாடி பழனிசாமி உறுதிபடுத்தி வருகிறார். இதனால் அதிமுக - பாஜக கூட்டணியில் இரு கட்சி தலைவர்களின் கருத்துகளால் குழப்பம் தொடர்ந்து நீடித்து வருகிறது.



  • Jul 12, 2025 20:18 IST

    நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா

    சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து ஆய்வுகளை முடித்து கொண்டு சுபான்ஷூ சுக்லா உள்ளிட்ட நால்வர் திங்கட்கிழமை பூமிக்கு திரும்புகின்றனர். அன்றைய தினம் மாலை 4.15 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து விண்கலம் தனியாக பிரிக்கப்படும். பின்னர் மாலை 4.35 மணிக்கு விண்கலம் பூமியை நோக்கி தன்னுடைய பயணத்தை தொடங்கும். சுமார் 24 மணி நேர பயணத்திற்கு பிறகு வருகிற 15-ந்தேதி பகல் சுமார் 3 மணி அளவில் பூமிக்கு திரும்புகின்றனர்.



  • Jul 12, 2025 19:59 IST

    த.வெ.க. ஆர்ப்பாட்டத்திற்கு 16 நிபந்தனைகளுடன் அனுமதி

    லாக்கப் மரணங்கள் தொடர்பாக, பலியானவர்களின் குடும்பத்தினரை, பனையூர் அலுவலகத்தில் வைத்து த.வெ.க. தலைவர் விஜய் இன்று நேரில் சந்தித்து பேசினார். த.வெ.க. போராட்டத்திற்கு 16 நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. ஆர்ப்பாட்டத்தின்போது, பைக் பேரணி செல்ல கூடாது, ஊர்வலம் நடத்த கூடாது, பட்டாசுகளை வெடிக்க கூடாது என 16 நிபந்தனைகள் காவல் துறை தரப்பில் அறிவுறுத்தலாக வழங்கப்பட்டு உள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியினர், தொண்டர்கள் என 6,000 பேர் பங்கேற்க உள்ளனர். இதனை முன்னிட்டு, 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.



  • Jul 12, 2025 19:30 IST

    5 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

    தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. அதன்படி திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மிதமான இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ராமநாதபுரத்திலும் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • Jul 12, 2025 19:22 IST

    தமிழ்நாட்டில் இன்று 15 இடங்களில் 100 டிகிரி F வெயில்

    தமிழ்நாட்டில் இன்று 15 இடங்களில் 100 டிகிரி F வெயில் சுட்டெரித்தது. மதுரை விமான நிலையம் - 106.7° F மதுரை நகரம் - 104.72° F கரூர் பரமத்தி, நாகப்பட்டினம் - 102.2° F திருச்சி - 102.02° F வேலூர் - 101.84° F ஈரோடு - 101.12° F அதிராம்பட்டினம், நுங்கம்பாக்கம் - 100.76° F மீனம்பாக்கம் - 100.58° F புதுச்சேரி, தஞ்சாவூர் - 100.4° F காரைக்கால், பாளையங்கோட்டை, பரங்கிப்பேட்டை - 100.04° F வெயில் சுட்டெரித்தது.



  • Jul 12, 2025 19:21 IST

    அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு

    அமெரிக்க அதிபர் டிரம்ப் கொண்டு வந்த 'பிக் பியூட்டிஃபுல் பில்' (Big Beautiful Bill) மசோதா கடந்த 4-ந்தேதி சட்டமானது. இந்த சட்டத்தின்கீழ் குடியேற்றம் அல்லாத விசாக்களுக்கு 250 டாலர் புதிய விசா கட்டணத்தை டிரம்ப் அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த புதிய கட்டணம், ஏற்கனவே உள்ள விசா செலவுகளுடன் கூடுதலாக வசூலிக்கப்படும். மேலும் இது திரும்பப் பெற முடியாத கட்டணமாகும். 2026-ம் ஆண்டு முதல் அமலுக்கு வருகிறது.



  • Jul 12, 2025 19:18 IST

    லாக்கப் மரணம்: த.வெ.க. சார்பில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம்

    தமிழகத்தில் கடந்த 4 வருடங்களில் லாக்கப்பில் உயிரிழந்தவர்களுக்கு நீதி கேட்கும் வகையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை வைத்து, தமிழக வெற்றி கழகம் கட்சி சார்பில் நாளை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் சென்னை சிவானந்தா சாலையில் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் நடைபெறுகிறது. இந்நிலையில், லாக்கப் மரணங்கள் தொடர்பாக, பலியானவர்களின் குடும்பத்தினரை, த.வெ.க. தலைவர் விஜய் இன்று நேரில் சந்தித்து பேசி வருகிறார்.



  • Jul 12, 2025 19:09 IST

    25-ம் தேதி எம்.பியாக பதவியேற்கிறார் கமல்ஹாசன்

    மாநிலங்களவைக்கு தமிழ்நாட்டிலிருந்து திமுக சாா்பில் பி.வில்சன், கவிஞா் சல்மா, சிவலிங்கம், மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் ஆகியோரும், அதிமுக சாா்பில் தனபால், ஐ.எஸ்.இன்பதுரை ஆகியோரும் உறுப்பினர்களாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், கமல்ஹாசன் மற்றும் திமுகவை சேர்ந்த 3 பேரும் மாநிலங்களவை எம்.பியாக பதவியேற்க போகிறார்கள் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி, 25-ம் தேதி 4 பேரும் எம்.பியாக பதவியேற்க உள்ளனர்.



  • Jul 12, 2025 19:03 IST

    சென்னையின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை

    சென்னையின் பல்வேறு பகுதிகளில் தற்போது மிதமான மழை பெய்து வருகிறது. சென்னை எழும்பூர், வேப்பேரி, சென்ட்ரல், மெரினா, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், மாம்பலம், சைதாப்பேட்டை, வடபழனி, வளசரவாக்கம், ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர், கிண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. சென்னையில் பகலில் வெயில் கொளுத்திய நிலையில், தற்போது மழை பெய்து வருவதால் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.



  • Jul 12, 2025 18:56 IST

    IIM மாணவி வன்கொடுமை: மாணவருக்கு போலீஸ் காவல்

    கொல்கத்தா IIM விடுதியில் மாணவிக்கு போதைப்பொருள் கொடுத்து சக மாணவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட மாணவர் பர்மானந்த் ஜெயினுக்கு ஜூலை 19 வரை போலீஸ் காவல் - கொல்கத்தா நீதிமன்றம் உத்தரவு



  • Jul 12, 2025 18:29 IST

    போதைப்பொருள் கடத்தல் -11 மாதங்களில் 1411 வழக்குகள்

    போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீஸ் தனிப்படை உருவாக்கப்பட்டு கடந்த 11 மாதங்களில் 1411 வழக்குகள் பதிவு வெளிநாட்டவர்கள் உள்பட 3778 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 2534 கிலோ கஞ்சா , 61,627 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன    
    129 கொக்கைன், மெத், அம்பட்டமின் போதைப் பொருள் கடத்தல் வழக்குகள் பதிவு - 67 கிலோ பறிமுதல்.



  • Jul 12, 2025 18:04 IST

    ஏர் இந்தியா விபத்து அறிக்கை: விமானிகள் சங்கம் கண்டனம்

    ஏர் இந்தியா விபத்து தொடர்பான முதற்கட்ட விசாரணை அறிக்கை குறித்து இந்திய விமானிகள் சங்கம் விமர்சனம்


    விமான விபத்து குறித்த முதற்கட்ட விசாரணை அறிக்கை விமானிகள் மீது பழிபோடும் வகையில் உள்ளது. ஏர் இந்தியா விபத்து விசாரணையில் வெளிப்படைத்தன்மை இல்லை. அனுபவம் வாய்ந்த நிபுணர்கள் இல்லை. 
    விசாரணை அறிக்கையை திட்டவட்டமாக நிராகரிக்கிறோம், நியாயமான மற்றும் உண்மை விசாரணை தேவை - விமானிகள் சங்கம்



  • Jul 12, 2025 17:07 IST

    காவல் மரணங்கள்: குடும்பத்தினரை சந்திக்கும் விஜய்

    கடந்த 4 ஆண்டுகளில் காவல்துறை விசாரணையின் போது உயிரிழந்த 21 பேர் குடும்பத்தினரை பனையூரில் வைத்து சந்திக்கும் விஜய்



  • Jul 12, 2025 16:29 IST

    'ப' வடிவில் பள்ளி வகுப்பறைகளை மாற்றி அமைக்க உத்தரவு

    '' வடிவில் வகுப்பறை  இருந்தால் மாணவர்களின் கவனம் ஆசிரியர் மீதும், கற்றல் மீதும் இருக்கும். எனவே '' வடிவில் பள்ளி வகுப்பறைகளை மாற்றி அமைக்க பள்ளிகளுக்கு, பள்ளிக் கல்வி இயக்குநரகம் உத்தரவு



  • Jul 12, 2025 16:27 IST

    சென்னை காவல் ஆணையர் பேட்டி

    வீடியோ: சன் நியூஸ்



  • Jul 12, 2025 15:55 IST

    போதை பொருள் கடத்தல் வழக்குகளில் 3,778 பேர் கைது

    சென்னையில், கடந்த 11 மாதங்களில் போதை பொருள் கடத்தல் வழக்குகளில் 3,778 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தவிர 2,534 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார் தனிப்படை அமைத்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.



  • Jul 12, 2025 14:56 IST

    ராமதாஸ் இல்லத்தில் ஒட்டுக்கேட்பு கருவி; உரிய விசாரணை செய்ய வேண்டும் - கே. பாலு

    தைலாபுரம் தோட்டத்தில் இருக்கும் தனது இல்லத்தில், ஒட்டுக் கேட்பு கருவி பொருத்தப்பட்டிருந்ததாக பா.ம.க நிறுவனர் ராமதாஸ் குற்றச்சாட்டு முன்வைத்தார். இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக சைபர் பாதுகாப்பு வல்லுநர்கள் அடங்கிய குழுவை அமைத்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என அக்கட்சி செய்தித் தொடர்பாளர் கே. பாலு வலியுறுத்தியுள்ளார்.



  • Jul 12, 2025 14:14 IST

    லாக்-அப் மரணமடைந்தவர்களின் குடும்பத்தினரை சந்திக்கும் விஜய்; த.வெ.க அலுவலகத்திற்கு வருகை

    காவல் நிலைய விசாரணையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், இன்று நேரில் சந்திக்கிறார். அதன்படி, சுமார் 10-க்கும் மேற்பட்டோரின் குடும்பத்தினர் பனையூரில் செயல்பட்டு வரும் அக்கட்சி அலுவலகத்திற்கு வருகை தந்துள்ளனர்.



  • Jul 12, 2025 13:52 IST

    திருமலா பால் நிறுவனம் மேலாளர் மரணம் தற்கொலையே: சென்னை காவல் ஆணையர் அருண் விளக்கம்

    திருமலா பால் நிறுவன மேலாளர் நவீன் பொல்லினேனி மரணம் தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அருண் விளக்கம் அளித்துள்ளார். திருமலா பால் நிறுவன மேலாளர் நவீன் பொல்லினேனி மரணம், தற்கொலை என அறிவியல்பூர்வமாக உறுதி செய்யப்பட்டது. விசாரணை முடிந்த பிறகு, கொளத்தூர் துணை ஆணையர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கபப்டும். மத்திய குற்றப்பிரிவுக்கு புகார் வந்தால் முகாந்திரம் இருந்தால் மட்டுமே வழக்குப் பதியப்படும். நவீன் பொல்லினேனியை போன் மூலமாக யாரும் மிரட்டியதாக தகவல் வரவில்லை. தற்கொலை தூண்டப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுகிறது என்றும் கூறினார்



  • Jul 12, 2025 13:07 IST

    பாட்டாளி மக்கள் கட்சியின் எதிர்காலம் நான்தான் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிக்கை

    பாட்டாளி மக்கள் கட்சியின் எதிர்காலம் நான்தான் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ” அரசியல் எதிர்காலம் குறித்த கேள்வியோ, ஐயப்பாடோ உங்களுக்குத் தேவை இல்லை. உங்கள் எதிர்காலம் நான்தான். உங்களின் நிகழ்காலமும் நான்தான். எப்போதும் போல உங்களோடு நான் நிற்கிறேன்” என தெரிவித்துள்ளார்.



  • Jul 12, 2025 12:57 IST

    அதிமுக வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் : ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவிற்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி

    அதிமுக வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவிற்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார். அதிமுக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்பதன் மூலம் கூட்டணி ஆட்சி என்ற அமித் ஷா கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. தனிக்கட்சி ஆட்சியா?, கூட்டணி ஆட்சியா? என்பதில் அதிமுக-பாஜக இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.



  • Jul 12, 2025 12:57 IST

    பேருந்து, மெட்ரோ, மின்சார ரயில்களில் ஒரே டிக்கெட்டில் பயணிப்பதற்கான சோதனை முயற்சி தொடங்கியது!!

    பேருந்து, மெட்ரோ, மின்சார ரயில்களில் ஒரே டிக்கெட்டில் பயணிப்பதற்கான சோதனை முயற்சி தொடங்கியது. அடுத்த மாதம் செல்போன் செயலியை அறிமுகம் செய்யவுள்ள நிலையில் சோதனை முயற்சி தொடங்கப்பட்டது. சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் (CUMTA) சோதனை முயற்சியை தொடங்கியுள்ளது. ANNA APP எனும் தற்காலிக பெயரில் செயலி மூலம் சோதனை முயற்சியை CUMTA தொடங்கியது.



  • Jul 12, 2025 12:54 IST

    சேராத இடம் சேர்ந்து... இ.பி.எஸ் பேச்சுக்கு பெ.சண்முகம் விமர்சனம்

    இதுவரை பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் மட்டுமே பேசி வந்த கொள்கைகளை, சேராத இடம் சேர்ந்துள்ள எடப்பாடி பழனிசாமியும் எதிரொலித்து வருகிறார் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம் விமர்சித்துள்ளார்.  மேலும், “பாஜகவுடன் கூட்டணி வைத்தவுடன் எடப்பாடி பழனிசாமி பாஜக ஆளாகவே மாறிவிட்டார் என்பதுதான் பிரச்சனை.போரை நிறுத்தியதாக டிரம்ப் பேசி வருவது போல் கூட்டணி ஆட்சி என அமித் ஷா பேசி வருகிறார்," என்றும் அவர் தெரிவித்துள்ளார்.



  • Jul 12, 2025 12:52 IST

    தி.மு.க-வுடனான கூட்டணியில் அதிருப்தி இல்லை - வைகோ பேச்சு 

    "திமுக கூட்டணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருப்போம்; முதல்வர் ஸ்டாலின் திராவிட மாடல் அரசை தொடர்ந்து நடத்துவார். 2026ல் திமுக தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெறும், கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லாமல் தி.மு.க ஆட்சி அமைக்கும். கூட்டணி ஆட்சி வேண்டும் என நான் விரும்பவில்லை, தமிழ் மக்கள் ஏற்கவும் மாட்டார்கள். தி.மு.க-வுடனான கூட்டணியில் அதிருப்தி என எந்த ம.தி.மு.க நிர்வாகியும் தெரிவிக்கவில்லை" என்று ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். 



  • Jul 12, 2025 12:15 IST

    தனியார் காப்பகத்தில் 18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை : 3 பேர் கைது

    வண்டலூர் அருகே தனியார் காப்பக உரிமையாளரின் ஓட்டுநர் 18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரையடுத்து, காப்பக உரிமையாளர் அருள்தாஸ், அவரது மகள் பிரியா, கார் ஒட்டுநர் பழனி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். வண்டலூர் காவல் நிலையத்தில் குழந்தைகள் நல அலுவலர் புகார் அளித்த நிலையில் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



  • Jul 12, 2025 12:15 IST

    “சேராத இடம் சேர்ந்து” – எடப்பாடி பழனிசாமி பேச்சுக்கு மார்க்சிஸ்ட் கம்யூ., மாநில செயலாளர் பெ.சண்முகம் விமர்சனம்

    இதுவரை பாஜக, ஆர்.எஸ்.எஸ் மட்டுமே பேசி வந்த கொள்கைகளை, சேராத இடம் சேர்ந்துள்ள எடப்பாடி பழனிசாமியும் எதிரொலித்து வருகிறார் என்று மார்க்சிஸ்ட் கம்யூ., மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார். மேலும், “பாஜகவுடன் கூட்டணி வைத்தவுடன் எடப்பாடி பழனிசாமி பாஜக ஆளாகவே மாறிவிட்டார் என்பதுதான் பிரச்சனை.போரை நிறுத்தியதாக டிரம்ப் பேசி வருவது போல் கூட்டணி ஆட்சி என அமித் ஷா பேசி வருகிறார்,”இவ்வாறு தெரிவித்தார்.



  • Jul 12, 2025 11:59 IST

    பெங்களூரு கோர சம்பவம் - விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு

    பெங்களூரு ஆர்.சி.பி  வெற்றிப் பேரணி கூட்ட நெரிசலில்  சிக்கி 11 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை வெளியாகி இருக்கிறது. அதன்படி, கர்நாடக கிரிக்கெட் வாரியம், ஆர்.சி.பி, டி.என்.ஏ நிர்வாகத்தின் கவன குறைவே விபத்திற்கு காரணம் என்றும், "எழுத்துப்பூர்வமான அனுமதி பெறாமலேயே நிகழ்ச்சிக்கு பார்வையாளர்களை அழைத்துள்ளனர். நிகழ்ச்சி நடக்கும் வளாகத்திற்கு வெளியே ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தப்படவில்லை. நிகழ்ச்சி வளாகத்திற்கு வெளியே போதுமான அளவு போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • Jul 12, 2025 11:56 IST

    வெப்ப அலை - 10 நாட்களில் மட்டும் 2,300 பேர் மரணம் 

    ஐரோப்பியாவின் பிரான்ஸ், ஸ்பெயின், போர்ச்சுகல், ஸ்வீடன் உள்ளிட்ட நாடுகளில் வெப்ப அலை காரணமாக கடந்த 10 நாட்களில் மட்டும் 2,300 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை வீட்டை விட்டு வெளியேற மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை. அலுவலகங்கள், வணிக வளாகங்கள் ஆகியவை பகுதி நேரமாக செயல்படுகின்றன.



  • Jul 12, 2025 11:55 IST

    ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பான விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு – போயிங் நிறுவனம் அறிக்கை

    இந்தியா விமான விபத்து தொடர்பான விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம் என்று போயிங் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்தியாவின் விமான விபத்து புலனாய்வு அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில் போயிங் நிறுவனம் இவ்வாறு தெரிவித்துள்ளது. அதில், “விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள், எங்கள் வாடிக்கையாளருக்கும், அதிகாரிகளுக்கும் தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் வழங்கி வருகிறோம்” என்று கூறியுள்ளது.



  • Jul 12, 2025 11:43 IST

    சென்னை வண்டலூரில் 18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை - 3 பேர் கைது 

    சென்னை வண்டலூர் அருகே குழந்தைகள் காப்பகத்தில் 18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஊமனாஞ்சேரியில் செயல்பட்டு வந்த குழந்தைகள் காப்பகத்தில் 18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த குழந்தைகள் காப்ப உரிமையாளர் அருள்தாஸ், அவரது மகள் ப்ரியா மற்றும் கார் ஓட்டுநர் பழனி ஆகிய 3 பேரை கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் வைத்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    குழந்தைகள் காப்பகத்தில் 40-க்கும் மேற்பட்ட சிறுமிகள் தங்கி உள்ளனர். அவர்களுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை அளிக்கப்பட்டு வந்துள்ளது. இதுகுறித்து காப்பகத்திற்கு ஆய்வுக்கு வந்த குழந்தைகள் நலஅதிகாரிகளிடம் சிறுமிகள் முறையிட்டனர். இதனை தொடர்ந்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில் 18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டுள்ளது அம்பலமானது.

     



  • Jul 12, 2025 11:39 IST

    அமெரிக்கா கூடுதலாக 10% வரி விதித்தால் பின்னலாடை ஏற்றுமதி பாதிக்கும் - ஏற்றுமதியாளர்கள் கவலை

    இந்திய பொருள்களுக்கு அமெரிக்கா கூடுதலாக 10% வரி விதித்தால் ஏற்றுமதி பாதிக்கப்படும் என அமெரிக்க வரி விதிப்பு குறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன் வேதனை தெரிவித்தார். அமெரிக்கா கூடுதலாக 10% வரி விதித்தால் பின்னலாடை ஏற்றுமதி பாதிக்கும் என்று ஏற்றுமதியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.



  • Jul 12, 2025 11:06 IST

    குரூப் 4 தேர்வு முடிவுகள் 3 மாதத்தில் வெளியிடப்படும்: டி.என்.பி.எஸ்.சி. தலைவர்  பேட்டி

    குரூப் 4 தேர்வு முடிவுகள் 3 மாதத்தில் வெளியிடப்படும் என டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பிரபாகர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் 4,922 மையங்களில், டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு நடைபெற்று வருகிறது. 3,935 பணியிடங்களுக்கு நடைபெறும் இந்த தேர்வை 13 லட்சத்து 89 ஆயிரம் பேர் எழுதுகின்றனர். 

    இந்நிலையில் சென்னையில் தேர்வு மையத்தில் டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பிரபாகர் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-4 தேர்வு தமிழ்நாடு முழுவதும் தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னையில் 311 மையங்கள் உள்பட தமிழகம் முழுவதும் 4,922 மையங்களில் குரூப் 4 போட்டி தேர்வு நடைபெறுகிறது.

    தேர்வுத்தாள் தயார் செய்து ரகசியமாக கொண்டு செல்ல வேண்டிய நிலை, மதுரையில் மட்டும் ஒருசில பிரச்சினைகள் இருந்தது, மற்ற இடங்களில் பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டது. மாவட்ட அலுவலர், வட்டாட்சியர் ஆகியோர் பரிசோதித்த பின் அனுப்பப்படுகிறது. கடந்தாண்டு 10,000 பேரும், நடப்பாண்டில் தற்போது வரை 11,000க்கும் மேற்பட்டோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 7 தேர்வுகளை அறிவித்து அதில் 5 தேர்வுகளை முடித்துள்ளோம். குரூப் 4 தேர்வு முடிவுகள் 3 மாதத்தில் வெளியிடப்படும். வரும் நாட்களில் 10,000 காலி பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வு நடைபெறும் என்று கூறினார்.



  • Jul 12, 2025 10:36 IST

    பாலங்களின் இணைப்புகள் நொறுங்கியதே விபத்துக்கு காரணம் - முதல்கட்ட விசாரணையில் தகவல் 

    குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் அமைத்த உயர்மட்ட விசாரணைக் குழுவின் முதற்கட்ட அறிக்கையின்படி, வதோதரா மாவட்டத்தின் பத்ரா தாலுகாவின் முஜ்பூர் கிராமத்தில் உள்ள கம்பீரா ஆற்றுப் பாலம் இடிந்த விபத்துக்கு அதன் ‘பெடெஸ்டல், ஆர்டிகுலேஷன்’ என்ற இணைப்புகள் நொறுங்கியதே காரணம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதன் எதிரொலியாக மாநிலத்தில் உள்ள சுமார் 7,000 பாலங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.



  • Jul 12, 2025 10:00 IST

    அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணி வெற்றி பெற்றால் கூட்டணி ஆட்சி: அமித்ஷா

    தமிழ் நாட்டில் அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணி வெற்றி பெற்றால் கூட்டணி ஆட்சி அமையும் என்று அமித்ஷா திட்டவட்டாக அறிவித்துள்ளார். கூட்டணி ஆட்சி என்று அமித்ஷா கூறவில்லை என்று எடப்பாடி பழனிச்சாமி கூறி வரும் நிலையில், ஆட்சியில் பா.ஜ.க. பங்கேற்குமா என்ற கேள்விக்கு அமித்ஷா ஆம் என்று பதில் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



  • Jul 12, 2025 09:26 IST

    சமூகவலைதள கணக்குகளை மீட்டு தரக்கோரி ராமதாஸ் புகார்

    தனது சமூகவலைதள கணக்குகளை அன்புமணி ஆதரவாளர்களிடம் இருந்து மீட்டு தரக்கோரி, ராமதாஸ் தரப்பில் டி.ஜி.பியிடம் புகார் அளித்துள்ளர். எக்ஸ் தளத்தில் பாஸ்வேட் மாற்றப்பட்டுள்ளது, அதை மீட்டெடுக்க தேவையான தகவல்கள் வேறொருவரிடம் கொடுக்கப்பட்டுள்ளது என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.



  • Jul 12, 2025 07:57 IST

    சிகரங்கள் ஏறி சாதனை படைத்த பெண்ணுக்கு மு.க.ஸ்டாலின் பாராட்டு

    உலகின் 7 கண்டகளில் உயரமான சிகரங்களை குறுகிய காலத்தில் ஏறி இந்திய அளவில் சாதனை படைத்த பெண்மணி முத்தமிழ்செல்வியை, குடும்பத்துடன் வரவழைத்து முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டி வாழ்த்து!



  • Jul 12, 2025 07:15 IST

    டி.என்.பி.எஸ்.சி குருப் 4 தேர்வு

    தமிழ்நாடு முழுவதும் இன்று 4,922 மையங்களில் டி.என்.பி.எஸ்.சி குருப் 4 தேர்வு நடைபெறுகிறது. 3935 காலி பணியிடங்களுக்காக, 13.89 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதுகின்றனர்.



  • Jul 12, 2025 07:12 IST

    ஏர் இந்தியா விபத்து - வெளியான ரிப்போர்ட் 

    குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில் 241 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக  15 பக்கங்களை கொண்ட முதற்கட்ட விசாரணை அறிக்கையை விமான விபத்து புலனாய்வு பணியகம் வெளியிட்டுள்ளது. ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட 32 நொடிகளில் 2 எஞ்சின்களும் நின்றுபோனது கண்டுபிடிப்பு. எஞ்சின்களுக்கு எரிபொருள் செல்வது தடைப‌ட்டதால்தான் விபத்து ஏற்பட்டதாக ஆய்வில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எஞ்சின்களுக்கு எரிபொருள் செல்லாத‌து குறித்து ஏர் இந்தியா விமான பைலட்கள் பேசிக்கொண்டது குரல் பதிவு மூலம் அம்பலமாகியுள்ளது. ஏன் எரிபொருள் துண்டிக்கப்பட்டது என்று ஒரு பைலட் கேட்டதும், அதற்கு நான் அல்ல என்று மற்றொரு விமானி பதில் குரல் பதிவு வெளியாகியுள்ளது.



Tamil News Live Update

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: