/indian-express-tamil/media/media_files/3ajBOIl7cBAOCPpcCGd5.jpg)
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போது நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் ஆதரித்து பொதுக்கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சியை சேர்ந்த, சாட்டை துரைமுருகன், திமுக தலைவராக இருந்த மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி மற்றும் தமிழ்நாடு அரசை தரக்குறைவாக விமர்சித்ததாக புகார் எழுந்தது. இதன் அடிப்படையில் ஏ. கே.அருண் என்பவர் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்திருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில், திருநெல்வேலி வீராணம் பகுதியில் தனியார் ஹோட்டலில் தங்கியிருந்த சாட்டை துரைமுருகனை திருச்சி மாவட்ட சைபர் க்ரைம் போலீசார் கைது செய்து திருச்சிக்கு அழைத்து வந்துள்ளனர். அப்போது சாட்டை துரைமுருகனை அவரது வாகனத்திலேயே காவல்துறை திருச்சி அழைத்து வந்தாக தகவல் வெளியானது. மேலூர் சுங்கச்சாவடி அருகே வரும் போது பின்னால் வந்த லாரி இந்த காரின் மீது மோதியுள்ளது.
இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக காயமின்றி துரைமுருகன் தப்பினார் என நாம் தமிழர் கட்சியினர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர். அங்கிருந்து வேறு கார் மூலம் திருச்சி அழைத்து வந்துள்ளனர். இதே போன்று யூடிபர் சவுக்கு சங்கரை போலீசார் கைது செய்து அழைத்து வரும்போது ஏற்பட்ட விபத்தை போலவே இப்போது சாட்டை துரைமுருகனுக்கு நடந்துள்ளது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்கள்.
இந்நிலையில், திருச்சி கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றதில், திருச்சி முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றம் (PCR) நீதிபதி சாமிநாதன் முன்னிலையில், இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி நீதிமன்ற காவலுக்கு செல்ல தேவையில்லை என கூறியதை தொடர்ந்து சாட்டை துரைமுருகன் விடுவிக்கப்பட்டார்.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.