Advertisment

நேரடி விவாதம்; அமைச்சர் மா.சு சவாலை ஏற்கிறேன்: சீமான் அறிவிப்பு

சென்னை சைதாப்பேட்டை பகுதியில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமில் பங்கேற்ற மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார்.

author-image
WebDesk
New Update
Seeman Maasu

சீமான் - மா.சுப்பிரமணியன்

நேரடி விவாதத்திற்கு அழைத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் சவாலை ஏற்கிறேன். எந்த தொலைக்காட்சியில் விவாதம் என்று சொல்லுங்கள். ஆனால் இந்த விவாதம் நேரலையாக இருக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

Advertisment

சென்னையில் தொடர் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ள பாதிப்பில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது நிலைமை சீரமைக்கப்பட்டு மக்கள் தங்களது வழக்கமான பணிகளை செய்ய தொடங்கியுள்ளனர். ஆனாலும் பல இடங்களில் இன்னும் பழைய நிலை திருப்பாத நிலையில், மழைநீர் வடிகால் அமைத்தது குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை விட வேண்டும் என்று எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கூறியிருந்தார்.

இதனிடையெ சென்னை சைதாப்பேட்டை பகுதியில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமில் பங்கேற்ற மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது புயல் மழையை வைத்து யாரும் அரசியல் செய்ய வேண்டாம். மழைநீர் வடிகால் தொடர்பாக தமிழக அரசு மேற்கொண்ட விவாதிக்க தயார் என்றும் கூறியிருந்தார்.

மேலும் வெள்ள பாதிப்புகள் குறித்து பேசி அரசியல் செய்யாமல், மழை நீர் வடிகால் பணிகளுக்காக 4 ஆயிரம் என்ன ஆனது என்று கேட்கும், எடப்பாடி பழனிச்சாமி மற்றும் சீமான் ஆகியோருடன் ஒரே மேடையில் விவாதிக்க தயார். யாராக இருந்தாலும், மேடையில் விவாதிக்க நான் தயாராக இருக்கிறேன். என்னென் பணிகள் மேற்கொள்ளப்பட்டது என்பதை நேரடியாக அழைத்துச்சென்று விளக்கம் அளிக்க தயாராக இருப்பதாக கூறியிருந்தார்.

இது தொடர்பாக பதில் அளித்துள்ள நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், அமைச்சர் மா.சுப்பிரமணியனை மதிக்கிறேன். அவருடைய சவால் மற்றும் அழைப்பை நான் ஏற்கிறேன். எடப்பாடி வராரோ இல்லையோ நான் தயாராக இருக்கிறேன். ஆனால் அவர்கள் தான் நிறைய ஊடகங்கள் வைத்திருக்கிறார்கள். அவர்களே நேரத்தை குறித்துவிட்டு எந்த தொலைக்காட்சிக்கு வர வேண்டும் என்று சொல்கிறார்களோ அங்கே வருவேன்.

ஆனால் இந்த விவாதம் நேரலையாகத்தான் இருக்க வேண்டும். அவர் 5 ஆண்டு காலம் சென்னை மேயராக இருந்துள்ளார். இன்றைய முதல்வரும் 5 ஆண்டுகள் மேயராக இருந்துள்ளார். அவர்களிடம் நிறைய கேள்விகள் இருக்கிறது. இந்த இரண்டரை ஆண்டுகள் விட்டுவிடலாம். இதற்கு முன் ஆட்சியில் இருந்தபோது இந்த மழைநீர் கழிவு நீர் வழிந்து ஓடுவதற்கு, நீங்கள் கட்டிய வெட்டிய கால்வாய் எங்கே? அந்த வரைபடம் மற்றும் தெளிவான விளக்கத்துடன் வாருங்கள் பேசுவோம் என்று கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Seeman Ma Subramanian
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment