/indian-express-tamil/media/media_files/2025/08/18/seeman-na-2025-08-18-00-24-02.jpg)
விழுப்புரம் மாவட்ம் செஞ்சி அருகே பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற சீமான், மேடையில் பேச தொடங்கியுடன் கீழே சலசலப்பு ஏற்பட்டதால், ஆலேசமாக கீழே இறங்கி வந்து பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த வீடியோ பதிவும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழக அரசியலில் தற்போது முக்கிய அரசியல் கட்சியாக இயங்கி வரும் நாம் தமிழர் கட்சி, மற்ற கட்சிகளை போல் தேர்தல் பிரச்சரங்களை தொடங்கியுள்ள நிலையில், சமீப காலமாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பல சர்ச்கைகளில் சிக்கி வருகிறார். பெரியார் குறித்து அவதூறாக பேசியது தொடங்கி திருச்சி போலீஸ் வருண்குமாருடன் மோதல்வரை பல்வேறு சர்ச்சைகளை எதிர்கொண்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது இவர் மேடையில் பேசியபோது நடந்துகொண்ட விதம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் அமைந்துள்ள கோட்டையை யுனஸ்கோ நிறுவனம்உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பில், செஞ்சி கோட்டை மராட்டியர்களால் கட்டப்பட்டது என்று குறிப்பிட்டிருந்ததை கண்டித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட தலைவர்கள் அறிக்கை வெளியிட்டிருந்தனர்.
நீங்கதான் அறிவார்ந்த அரசியல் பன்னுற ஆளுங்களா?? தலைவனே இப்படி இருந்தா தொண்டர்கள் எப்படி இருப்பாங்க? @NaamTamilarOrg@Seeman4TN#Seemanpic.twitter.com/YLJwx9Je3e
— 🦈Dhayalson TVK🦈 (@Dhayalson7) August 17, 2025
இந்த அறிக்கைகள் இணையத்தில் வைரலாக பரவிய நிலையில், பலரும், செஞ்சி கோட்டையை தமிழர்களின் பாரம்பரியமான கோட்டை என்றும், மராட்டிய மன்னருக்கு இதில் எந்த இல்லை என்று தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். இதனிடையே, வரலாற்று திரிபை தடுத்து நிறுத்தி, தமிழ் மன்னர் கோனேரிக்கோன் கட்டியது செஞ்சி கோட்டை என்றும், இது தமிழ் மன்னர் கோட்டை என அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, நாம் தமிழர் கட்சியின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
என்ன #சீமான் இப்படி எல்லாம் பண்ணிட்டு இருக்காரு 🥶
— தளபதி ரிஷி (@ThalapathiRISHI) August 17, 2025
Worst behavior from him..👎🏻#Seemanpic.twitter.com/JX9N4xI21C
விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையேற்று பேசினார். சீமான் பேச தொடங்கியபோது செய்தியாளர்கள் அங்கு வந்துள்ளனர். அப்போது, பவுன்சர்கள் அவரை தடுத்து நிறுத்தினர். இதனால் பவுன்சர் மற்றும் செய்தியாளர்கள் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்ட நிலையில், மேடையில் பேசிய சீமான், பேச்சை நிறுத்திவிட்டு, ஆவேசமாக, அவர்களைத் தாக்குவது போல் வேகமாகப் பாய்ந்துகொண்டு வந்தார். அவரை கட்சியினர் தடுத்து நிறுத்தினர். இந்தச் சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், சீமான் நடந்துகொண்ட விதம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.