Advertisment

ஓ.பி.எஸ் தாயார் மரணம்: நள்ளிரவில் நேரில் சென்று இரங்கல் தெரிவித்த சீமான்

ஒ.பி.எஸ் தாயார் மரணம் குறித்து அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

author-image
WebDesk
New Update
ஓ.பி.எஸ் தாயார் மரணம்: நள்ளிரவில் நேரில் சென்று இரங்கல் தெரிவித்த சீமான்

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் நாச்சியார் (95) வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 22 தேனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கட்ந்த இரு தினங்களுக்கு முன்பு ஒ.பன்னீர்செல்வம் தனது தாயாரை மருத்துவமனையில் சென்று சந்தித்து அவரது உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

Advertisment

இந்நிலையில் நேற்று இரவு அவருக்கு உடலை மேலும் மோசமடைந்த நிலையில், வயது மூப்பு காரணமாக மருத்துவர்களின் சிகிச்சைக்கு அவரது உடல் ஒத்துழைக்கவில்லை. இதனால் அவரை வீட்டுக்கு கொண்டு வந்த நிலையில், அவர் மரணமடைந்ததாக தகவல் வெளியானது. ஒ.பி.எஸ் தாயார் மரணம் அவரது குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதனிடையே ஒ.பி.எஸ் தாயார் மரணம் குறித்து அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

எடப்பாடி பழனிச்சாமி

அண்ணன் ஒ.பி.எஸ் தாயார் மரணம் வருத்தம் அளிக்கிறது. அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கிறேன். அவரது குடும்பத்திற்கு எனது ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறேன்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்

முன்னாள் முதலமைச்சர் அண்ணன் ஒ.பன்னீர்செல்வம் அவர்களின் தாயார் பழனியம்மாள் அவர்கள் உடல்நலக்குறைவின் காரணமாக மறைவெய்தினார் என்றறிந்து மிகவும் வேதனையடைகிறேன். ஆளாக்கிய அன்னையை இழந்து தவிக்கும் திரு. பன்னீர்செல்வம் அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

டி.டி.வி தினகரன்(அ.ம.மு.க)

முன்னாள் முதலமைச்சரும், சட்டப்பேரவை எதிர்கட்சித் துணைத்தலைவருமான திரு.ஓ.பன்னீர் செல்வம் அவர்களின் தாயார் பழனியம்மாள் காலமான செய்தி அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். அவரது மறைவால் வாடும் திரு.ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது சகோதரர் உள்ளிட்ட உறவினர்கள், குடும்பத்தினர், நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

வி.கே.சசிகலா

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர், அன்பு சகோதரர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் தாயார் பழனியம்மாள் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன். அன்பு சகோதரர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு, இந்த கடினமான நேரத்தில் மன தைரியத்தையும், இந்த இழப்பை தாங்கிக் கொள்ளும் சக்தியையும் தர வேண்டும் என எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். தனது தாயாரை இழந்து வாடும் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும்,கழகத் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.

கே.அண்ணாமலை (பா.ஜ.க)

முன்னாள் முதலமைச்சர் அண்ணன் திரு. ஒ.பன்னீர்செல்வம் அவர்கள் தாயார் பழனியம்மாள் காலமான செய்தியறிந்து அவரை தொலைப்பேசி மூலமாக தொடர்பு கொண்டு அவருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொண்டேன். அவரது தாயாரின் ஆன்மா சாந்தியடைய ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன்.

தமிழிசை சௌந்திரராஜன் (தெலுங்கான ஆளுனர்)

தமிழக முன்னாள் முதல்வர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் தாயார் திருமதி.பழனியம்மாள் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து மிகவும் மனவேதனை அடைந்தேன்.தாயை இழந்து வாடும் அண்ணன் ஒ.பன்னீர்செல்வம் அவர்களுக்கும், குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலையும்,ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

ராமதாஸ் (பா.ம.க)

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் தாயார் பழனியம்மாள் காலமானதையறிந்து வேதனையடைந்தேன். தாயாரை இழந்து வாடும் பன்னீர்செல்வம் அவர்களுக்கும், குடும்பத்தினருக்கும் இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அன்புமணி ராமதாஸ்(பா.ம.க)

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் தாயார் பழனியம்மாள் முதுமை காரணமாக மறைவெய்தியதை அறிந்து வேதனையடைந்தேன். பன்னீர்செல்வம் மற்றும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

விஜயகாந்த் (தே.மு.தி.க)

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த மன வேதனையடைந்தேன். தாயாரை இழந்து தவிக்கும் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் அவரது குடும்பத்தினருக்கு, உற்றார் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

சீமான் (நா.த.க)

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஐயா ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் அன்புத்தாயார் அம்மா பழனியம்மாள் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். தாயை இழந்து பெருந்துயரில் வாடும், ஐயா ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், தொண்டர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கிறேன். அம்மையார் பழனியம்மாள் அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu Ops
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment