புதுச்சேரியில் இருந்து தைலாபுரம் வழியாக திருவண்ணாமலைக்கு புதுச்சேரி சரக்கை கடத்திச் சென்ற திருவண்ணாமலை சேர்ந்த வாலிபரை போலீசார் மடக்கிப்பிடித்தனர்.
விழுப்புரம் மாவட்ட காவல்துறை கோட்டகுப்பம் அருகே மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, இரு சக்கர வாகனத்தில் புதுவையில் இருந்து மதுபானங்கள் எடுத்துச் சென்றவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் உத்தரவின் பேரில் மது விலக்கு அமல் பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் அவர்களின் மேற்பார்வையில் கோட்டகுப்பம் மதுவிலக்கு அமல் பிரிவு ஆய்வாளர் .மீனா மற்றும் காவலர்கள் தலைமையில், தைலாபுரம் ஜங்ஷன் அருகே வாகன தணிக்கையில் இருந்தபோது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். இதில், புதுச்சேரி மதுபானங்கள் கடைக்கு வந்ததை கண்டுபிடித்தனர்.
விசாரணை செய்ததில் அவர் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அஞ்சல் அனப்பதூர் பிள்ளையார் கோவில் தெருவில் வசிக்கும் கன்னியப்பன் என்பவரின் மகன் வெங்கடேசன் (30) என்பதும், இவர் புதுச்சேரியில் இருந்து மதுபானங்கள் எடுத்துச் சென்றதை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.