Tamilnadu News Update : சென்னையில் தனியார் ஹேட்டலில் நடைபெற்ற நடன நிகழ்ச்சியில், கடலோர காவல்படை அதிகாரியின் மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு மருத்துவக்கல்லூரி பேராசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை தேனாம்பேட்டையில், பிரபல நட்சத்தி ஹோட்டல் ஒன்றில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடன நிகழ்ச்சி நடைபெற்றள்ளது. இந்த நிகழ்ச்சியில், கடலோர காவல்படையை சேர்ந்த அதிகாரி ஒருவர் தனது மனைவியுடன் பங்கேற்றுள்ளார். இதில் நள்ளிரவு நேரத்தில் அதிகாரியின் மனைவி நடனமாடிக்கொண்டிருந்த போது இளைஞர் ஒருவர் அவரிடம் எல்லை மீறி நடந்துள்ளார்.
தொடக்கத்தில் இதை அவர் பெரிதாக எடுத்தக்கொள்ளாத நிலையில், நேரம் செல்ல செல்ல இளைஞரின் அத்துமீறல் அதிகரித்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அதிகாரியின் மனைவி இளைஞரை கண்டித்துள்ளார். ஆனாலும் அந்த இளைஞரின் பாலியல் சீண்டல்கள் தொடர்ந்து வந்த நிலையில், இது குறித்து அதிகாரியின் மனைவி தனது கணவரிடம் கூறியுள்ளார். இதனையடுத்து அதிகாரி அந்த இளைஞரிடம் கேட்டபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தேனாம்பேட்டை காவல்துறையினர். இருவரிடமும் விசாரணை நடத்தி காவல்நிலையத்திற்கு அழைத்துச்சென்றுள்ளனர். அங்கு அதிகாரியின் மனைவி அந்த இளைஞரின் மீது கொடுத்து புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், ஹோட்டலில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, இளைஞரின் அத்துமீறல் தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து அந்த இளைஞரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில், அவர் பெயர் சத்யபிரகாஷ் என்பது, திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், உதவி பேராசிரியராக பணியாற்றுவதும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவர் மீது பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த மருத்துவக்கல்லூரி இயக்குநரகம் மருத்துவர் சத்யபிரகாஷை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.