குற்ற வழக்கு விசாரணை: சாட்சியம் அளிக்கும் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயத்திற்கு போலீஸ் பாதுகாப்பு!

நீதிமன்ற விசாரணைக்கு வருவதை முன்னிட்டு சகாயத்திற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற விசாரணைக்கு வருவதை முன்னிட்டு சகாயத்திற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
sagayam ias, sagayam ias vrs accepted, sagayam ias relieved from service, சகாயம், சகாயம் ஐஏஎஸ், சகாயம் அரசுப் பணியில் இருந்து விடுவிப்பு, sagayam relived from january 2, ias officer sagayam

முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் சாட்சி அளிக்க உள்ள நிலையில் சென்னை காவல்துறை போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கிரானைட் உரிமம் மோசடி வழக்கில் சாட்சியளிக்க முன்வந்துள்ள முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயத்திற்கு, நாளை சென்னையில் நடைபெறும் நீதிமன்ற விசாரணைக்கு வருவதை முன்னிட்டு அவருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டவிரோத கிரானைட் குவாரி வழக்குகள் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகின்ற நிலையில், அதில் முக்கிய சாட்சியாக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் நீதிமன்றத்தில் ஆஜராகிறார். இதற்காக அவருக்கு ஏற்கனவே மூன்று முறைகள் சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், போலீஸ் பாதுகாப்பு நீக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டி அவர் ஆஜராக முடியவில்லை என தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து தமிழக காவல்துறையின் பாதுகாப்பு நீக்கம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவருக்கு“பாதுகாப்பு வழங்கத் தவறினால் மத்திய பாதுகாப்பு வழங்க உத்தரவிடப்படும்” என மதுரை சிறப்பு நீதிமன்றம் எச்சரித்தது. இந்த சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, சகாயம் நாளை சென்னையில் உள்ள சிவில் நீதிமன்றத்தில் ஆஜராகும் பொழுது, அவரது பாதுகாப்புக்கு தேவையான போலீஸ் உதவி வழங்கப்படும் என்று சென்னை காவல்துறை அறிவித்துள்ளது.

Sagayam Ias

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: