Admk mlas Swearing Ceremony : தமிழகத்தில் காலியாக இருந்த 22 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில், திமுக 13 இடங்களையும், அதிமுக 9 இடங்களையும் கைப்பற்றின. அதிமுக 9 இடங்களில் வெற்றிபெற்றதன் மூலம் சட்டபேரவையில் பெரும்பான்மையுடன் ஆட்சியை தக்கவைத்தது. இந்நிலையில், அதிமுக உறுப்பினர்கள், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் சபாநாயகர் தனபால் இன்று பதவிப்பிரமாணம் செய்துவைக்கவுள்ளார்.
இன்றைய வானிலை மையம் குறித்த செய்தியை படிக்க.
Live Blog
political events today live :9 தொகுதிகளில் வெற்றி பெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் இன்று பதவி ஏற்கின்றனர்.
ஆந்திர சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு தே்ர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆந்திராவின் புதிய முதல்வராக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி 30ம் தேதி பதவியேற்க உள்ளார்.
ராகுல் காந்தி பதவி விலகக் கூடாது என்பதை வலியுறுத்தி சென்னையில் காங்கிரஸ் கட்சியினர் பேரணி நடத்தினர். தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல் காந்தி பதவி விலக உள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் அவர் பதவி விலகக் கூடாது என்பதை வலியுறுத்தும் விதமாக தமிழக காங்கிரஸ் கட்சியினர் சென்னை தேனாம்பேட்டையில் பேரணியில் ஈடுபட்டனர். இதில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி உட்பட மூத்த தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர். அப்போது தொண்டர் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
நாங்குநேரி சட்டமன்ற தொகுதி காலியானதாக, சட்டப்பேரவை செயலர் சீனிவாசன் அறிவிப்பு
நாங்குநேரி தொகுதி காலியானதற்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டது.
நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் பதவியை வசந்தகுமார் ராஜினாமா செய்த நிலையில் சட்டப்பேரவை செயலர் அறிவிப்பு
தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் தனபாலிடம் வசந்தகுமார் வழங்கினார்.
சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் வசந்தகுமார் https://t.co/gq4OE7nID5 https://t.co/OVVURdieSc
— News18 Tamil Nadu (@News18TamilNadu) 29 May 2019
அதிமுக எம் எல் ஏக்கள் பதவியேற்பு விழா லைவ்வாக
Swearing-in Ceremony of 9 ADMK MLAs held https://t.co/MQXMF7Kvi0
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) 29 May 2019
மோடி பதவியேற்பு விழா: மு.க.ஸ்டாலினை தொடர்ந்து, கமலுக்கும் அழைப்பு இல்லை
தமிழகத்தில் 38 நாடாளுமன்ற தொகுதி தேர்தலும் 18 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் கடந்த ஏப்ரல் மாதம் 18ஆம் தேதி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து எஞ்சிய 4 சட்டசபை தொகுதிகளுக்கு கடந்த 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. 9 தொகுதிகளில் வெற்றி பெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் இன்று பதவி ஏற்கின்றனர். அவர்களுக்கு சட்டசபையில் சபாநாயகர் தனபால் முறைப்படி பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights