தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் பகல், இரவு நேரங்களில் மின் தடை ஏற்பட்டதால் மக்கள் அவதியடைந்தனர். ஆங்காங்கே போராட்டமும் நடத்தப்பட்டது. இந்நிலையில், இதுகுறித்து மின் வாரியம் விளக்கம் அளித்துள்ளது. அதில், "தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் மின் தேவை அதிகரித்த வண்ணம் உள்ளது. தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், மின் தேவையும் அதிகரித்துள்ளது. கோடை வெயிலின் தாக்கத்தால் மின் மாற்றிகள், புதைவட கம்பிகள், மின் கம்பிகளில் பழுது ஏற்படுவதால் சில இடங்களில் மின் தடை ஏற்பட்டது. மே 2-ல் தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவிற்கு மாநிலத்தின் மின் தேவை 20.830 மெகா வாட் என்ற புதிய உச்சத்தை எட்டியது.
நேற்றைய தினம் 4769 மெகா வாட் என்ற புதிய உச்சத்தை எட்டியது. மின் தடைகள் ஏற்படும் போது உடனுக்குடன் சரி செய்யப்பட்டு தடையில்லா மின்சாரம் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தொடர் மின் தடை பகுதிகளில் பொறியாளர்கள் கள ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மின் தடை தொடர்பான புகார்களை 94987 94987 என்ற எண்ணின் மூலம் 24 மணி நேரமும் மின்னகம் மையத்தில் தெரிவிக்கலாம்.
சென்னையில் மின் தடை புகார்களை சரி செய்ய 60 சிறப்பு நிலை குழுக்கள் அமைக்கப்பட்டு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை, புறநகர் பகுதிகளில் இரவு நேர மின்தடை ஏற்படும் போது உடனடியாக சரி செய்ய சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது"என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“