Advertisment

கோடையில் 423 மில்லியன் யூனிட்களை எட்டிய தமிழகத்தின் மின் நுகர்வு

கடந்த இரண்டு ஆண்டுகளாக மின் தேவை 16,481 மெகாவாட்டில் இருந்து 19,387 மெகாவாட்டாக உயர்ந்துள்ளது.

author-image
WebDesk
New Update
Tamilnadu

Tamilnadu power demand

தமிழ்நாடு மின்சார வாரியம் பலமுறை உறுதியளித்த போதிலும், நுகர்வோர், குறிப்பாக கிராமப்புறங்களில் உள்ளவர்கள், தற்போது அடிக்கடி மின்வெட்டை அனுபவித்து வருகின்றனர்.

Advertisment

சென்னையின் அம்பத்தூர் போன்ற சில பகுதிகளில் இரவு முழுவதும் மின்வெட்டால் பொதுமக்கள் தூக்கமின்றி தவித்தனர். மறுநாள் காலைதான் மின்சாரம் சீரானது. இதேபோல், கடந்த சில வாரங்களாக தென் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சில மின்வெட்டுப் பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன.

பகல் நேரங்களில் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டுகளால் ஏசி உள்ளிட்ட மின்சாதனங்கள் கடுமையாக சேதமடைவதாக சென்னை வாசிகள் கூறுகின்றனர்.

மின்துறை அமைச்சர் வி செந்தில் பாலாஜி, ஐந்து அல்லது ஆறு இடங்களில் சில தனிப்பட்ட பிரச்சினைகளை ஒப்புக்கொண்டார்.

மின் ஏற்ற இறக்கங்கள் மற்றும் கேபிள் கோளாறுகள் போன்ற தொழில்நுட்ப பிரச்சனைகளை கையாள தமிழ்நாடு மின்சார வாரியம் அனைத்து வசதிகளையும் கொண்டுள்ளது, என்று அவர் கூறினார்.

சென்னையில் உள்ள தமிழ் நாடு மின்சார வாரியம் தலைமையகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தைத் தொடர்ந்து, மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி புதன்கிழமை கூறியதாவது: கடந்த இரண்டு ஆண்டுகளாக மின் தேவை 16,481 மெகாவாட்டில் இருந்து 19,387 மெகாவாட்டாக உயர்ந்துள்ளது.

இந்த ஆண்டு உச்ச கோடை மாதங்களில் மாநிலத்தின் மின் நுகர்வு 423 மில்லியன் யூனிட்களை எட்டியது, புதிய சாதனையை படைத்துள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், மின் விநியோகம் தொடர்ந்து தடையின்றி உள்ளது.

எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் அதிகரித்து வரும் மின் தேவையை திறமையாக நிர்வகித்ததே இந்த சாதனைக்கு காரணம் என்று அவர் கூறினார்.

சென்னையைப் பற்றி குறிப்பாகப் பேசிய அமைச்சர் பாலாஜி, செவ்வாய்கிழமை அன்று மாநகரின் மின் தேவை 4,016 மெகாவாட்டை எட்டியது, அதே நேரத்தில் நுகர்வு 90 மில்லியன் யூனிட்டாக இருந்தது.

கடந்த இரண்டு ஆண்டுகளில், மின் பயன்பாடு குறிப்பிடத்தக்க உள்கட்டமைப்பு மேம்பாடுகளுக்கு உட்பட்டுள்ளது. மின் தேவையை எதிர்கொள்ள சென்னையில் மட்டும் 400 கி.வோ. புதிய துணை மின் நிலையம் உட்பட 13 துணை மின் நிலையங்கள் புதியதாக நிறுவப்பட்டுள்ளன.

3,000 கி.மீ. தூரத்துக்கு மேல்நிலை மின்கம்பிகள் புதைவடங்களாக மாற்றப்பட்டுள்ளன. 4,749 வளைய சுற்றுத்தர அமைப்புகள் சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் புதியதாக நிறுவப்பட்டுள்ளன.

இதன்படி தமிழ்நாடு முழுவதும், கடந்த இரண்டு ஆண்டுகளில் 40,020 மின்மாற்றிகள் வைக்கப்பட்டுள்ளன.

அனைத்து துணை மின் நிலையங்களிலும் மே 31 வரை மின்தடை செய்ய வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மின்னகம் மூலம் பெறப்படும் புகார்கள் மீது உடனடியாக தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment