மீண்டும் உயரும் மின்கட்டணம்? ஒரு யூனிட்டிற்கு எவ்வளவு அதிகரிப்பு தெரியுமா?

மின் கட்டண உயர்வு விகிதங்களை தயாரித்து வைத்துள்ள தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், இந்த அறிவிப்பை ஓரிரு நாட்களில் வெளியிடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

மின் கட்டண உயர்வு விகிதங்களை தயாரித்து வைத்துள்ள தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், இந்த அறிவிப்பை ஓரிரு நாட்களில் வெளியிடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

author-image
WebDesk
New Update
How smart is the Centre smart meter plan and why Kerala move to opt out underscores some of the scheme inadequacies Tamil News

தமிழகத்தில் வரும் ஜூலை 1-ந் தேதி முதல், மின் கட்டணத்தை 3.16 சதவீதம் உயர்த்துவதற்காக மின்வாரியும் முடிவு செய்துள்ள நிலையில், இதற்கான கட்டண விகிதங்கள் குறித்து, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தயாராக வைத்துள்ளதாகவும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒரிரு நாட்களில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

Advertisment

தமிழகத்தில் பொதுமக்கள் பயன்பாடு, தொழிற்சாலைகள், மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு தேவையான மின்சாரத்தை தமிழ்நாடு மின்சார வாரியம் வழங்கி வரும் நிலையில், இதற்கான கட்டண நிர்ணையம் செய்யும் உரிமையை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வைத்துள்ளது, மின்கட்டணம் உயர்வு உள்ளிட்ட பல அறிவிப்புகள் இந்த ஆணையம் தான் வெளியிட்டு வருகிறது. இந்த ஆணையம் தமிழகத்தில் ஆண்டுதோறும் மின்கட்டணத்தை உயர்த்துவதாக கடந்த 2022-ம் ஆண்டு அறிவித்தது.

அதன்படி கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழகத்தில் 10 முதல் 52 சதவீதம் வரை மின்கட்டணம் உயர்த்தப்பட்டது. இந்த நிதியாண்டு முதல் 2026-27 நிதியாண்டு வரை மின்கட்டணத்தை உயர்த்திக்கொள்ள, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்திருந்த நிலையில், மின்கட்டணத்தை உயர்த்துவதற்கான பரிந்துரைகளையும் வழங்கியது அதன்படி 6 சதவீதத்திற்கு மேல் மின்கட்டணத்தை உயர்த்த கூடாது என்றும் கூறியிருந்தது.

அதன்படி 2023-ம் ஆண்டு, 2.18 சதவீதம் உயர்த்தப்பட்ட மின் கட்டணம், 2024-ம் ஆண்டு 4.18 சதவீதம் உயர்த்தப்பட்டது. ஆண்டுதோறும் கட்டண உயர்வை எதிர்கொள்ளும் மக்கள் இதனால் மிகுந்த துயரத்திற்கு உள்ளாகி வருகின்றனர். ஆனாலும் 2025-ம் ஆண்டுக்கான கட்டண உயர்வை அறிவிக்க மின்சார வாரியம் தயாராகி வருகிறது. அதன்படி மின் கட்டண உயர்வு விகிதங்களை தயாரித்து வைத்துள்ள தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், இந்த அறிவிப்பை ஓரிரு நாட்களில் வெளியிடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment
Advertisements

இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நுகர்வோர் குறியீட்டு எண் 3.16 ஆக உள்ளதாக மே மாதம் மத்திய அரசு அறிவித்த நிலையில், அதை வைத்து 3.16 சதவீதம் மின் கட்டணத்தை உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகவும், அதன்படி பார்த்தால், வீட்டு பயன்பாட்டுக்கு ஒரு யூனிட்டுக்கு 15-37 காசுகள் வரை மின் கட்டணம் உயரும் என்றும், கூறப்படுகிறது. கடந்த ஆண்டு 4.83 சதவீதம் வரை மின் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், இந்த ஆண்டு 3.16 சதவீதம் என சற்று குறைவாக உயர்த்தப்பட்டுள்ளது, தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி அமைந்ததில் இருந்து தொடர்ந்து 4-வது ஆண்டாக மின் கட்டணம் உயர்த்தப்படுவது குறிப்பிடத்தக்கது. 

Tamilnadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: