Advertisment

தேர்தல் புறக்கணிப்பு... சொன்னதை செய்த கிராம மக்கள் : வெறுச்சோடிய வேங்கைவயல் வாக்குச்சாவடி!

குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் குற்றவாளிகளை கைது செய்யாத அரசை கண்டித்து வேங்கை வயல் மக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர்.

author-image
WebDesk
New Update
LS boycott Vengaivayal

தேர்தலை புறக்கணித்த வேங்கை வயல் மக்கள்

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம் குறித்து எந்த நடவடிக்கையும் இல்லாததால் தேர்தலை புறக்கணிக்க போவதாக அக்கிராம மக்கள் கூறியிருந்த நிலையில், தற்போது அதை தீவிரமாக செயல்படுத்தி வருகின்றனர்.

Advertisment

இந்தியாவில் 18-வது நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் முதற்கட்டமாக இன்று (ஏப்ரல் 19) தமிழ்நாடு, புதுச்சேரி, அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட 21 மாநிலங்களில் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் பொதுமக்கள் என பலரும் இன்று காலை முதலே தங்களுக்கென ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடிக்கு சென்று தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.

இதனிடையே கடந்த ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் சிலர் மலம் கலந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. சாதிய வன்கொடுமையின் உச்சமாக நடந்த இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று, அரசியல் கட்சியினர் சார்பில் ஆர்ப்பாட்டங்க்ள நடத்தப்பட்டது. ஆனாலும் இந்த வழக்கில் எவ்வித முன்னேற்றமும் இல்லை.

குற்றவாளிகள் கைது செய்யப்படாத நிலையில், வழக்கு சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டது. அதேபோல் இந்த வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், வழக்கில் இதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. மேலும் இதில் வேங்கை வயல் மற்றும் அதனை சுற்றியுள்ள இறையூர், முத்துக்காடு உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த சுமார் 150-க்கு மேற்பட்ட நபர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

உச்சநீதிமன்றமும், ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைந்துள்ள நிலையில், டி.என்.ஏ டெஸ்ட் மற்றும் குரல் மாதிரி சோதனை என பலகட்ட சோதனைகள் நடத்தப்பட்ட நிலையிலும் குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை. இதனால் இந்த வழக்கில் குற்றவாளிகளை கைது செய்யும் வரையில் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக வேங்கை வயல் கிராம மக்கள் கூறியிருந்தனர். 15 மாதங்கள் ஆகியும் இன்னும் குற்றவாளிகளை கண்டுபிடிக்காததால் தங்களுக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் தேர்தலை புறக்கணிப்பதாக ஊரில் நுழைவு வாயிலில் பேனர் ஒட்டப்பட்டிருந்தது.

அதன்படி இன்று வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில், தமிழகத்தின் மற்ற பகுதிகளை போலவே வேங்கை வயலிலும் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு, வாக்குப்பதிவு தொடங்கியது. ஆனால் பொதுமக்கள் யாரும் வாக்களிக்க வரவில்லை. இதன் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், தேர்தல் அதிகாரிகள் மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வாக்களிக்க சம்மதிக்க வைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Parliament Election Vengaivayal
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment