தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களின் பல பகுதிகளில் கனமழை பெற்று வரும் நிலையி்ல, இன்று 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஒடிசா கடலோர பகுதியை ஒட்டிய வங்கக்கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி தாழ்வு மண்டலமாக வலு பெற்றுள்ள நிலையில், தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக உயர்ந்துள்ளது. தமிழகத்தில், மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய மாவட்டங்களில், 3 இடங்களில் கன மழையும், 16 இடங்களில் மிதமான மழையும் பெய்துள்ளது. அதிகபட்சமாக நீலகிரிமாவட்டம் அவலாஞ்சியில் 19.செ.மீ மழை பதிவாகியுள்ளது,
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஒரிரு இடங்களில் தரைக்காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஒருசில இடங்களிலும், தேனி, தென்காசி, திருநெல்வேலி.மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கன மற்றும் மிக கனமழை இருக்கும்.
திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல் இன்று நீலகிரி மற்றுமு் கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், கனமுதல் மிக கன மழைக்கும், தேனி, தென்காசி, மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.
சென்னையில் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்" என்று தெரிவித்துள்ளது.