/tamil-ie/media/media_files/uploads/2017/11/cyclone-vardah-750.jpg)
today chennai weather forecast : 8 லட்சம் பேர் வெளியேற்றம்
அடுத்த 3 தினங்களில் புயல் சின்னம் உருவாக வாய்ப்புள்ளது என்றும், இந்த நாட்களில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை வானிலை மையம் எச்சரிக்கை :
நேற்றைய தினம் செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை மைய இயக்குநர் புவியரசன் தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளது என்றும், சென்னையை பொருத்தவரையில் இப்போது மழை இல்லை என்று கூறினார்.
மேலும், தாய்லாந்து வளைகுடா அதனை ஒட்டி நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி , மத்தியவங்க கடலில் நிலவி வரும் காரணத்தினால் இது அந்தமான் பகுதியில் மேற்கு, வட மேற்காக நகர்ந்து புயலாக மாற வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், 10 , 11, 12, 13 ம் தேதிகளில் மீனவர்கள் அந்தமான், ஒட்டிய கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி குமரிக்கடல், இலங்கை அருகே நிலவி வருகிறது. இதன் காரணமாக தென் தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை , தூத்துக்குடி மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.