Tamil News Highlights: இருமுடியில் நெகிழி கொண்டு செல்வதை நிறுத்த முதல்வர் ஆலோசனையுடன் நடவடிக்கை - சேகர்பாபு

அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Minister Sekarbabu warns Madurai Aadeenam on his political comment

பெட்ரோல், டீசல் விலை: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் சில நாட்களாகவே மாற்றம் இருந்து வருகிறது. அந்த வகையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.90க்கும், டீசல் லிட்டருக்கு ரூ.92.48க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

ஏரிகளின் நீர் நிலவரம்: சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம், கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகளில் 46.13% நீர் இருப்பு உள்ளது. செம்பரம்பாக்கம் - 56.24% ; புழல் - 71.73% ; பூண்டி - 15.82% ; சோழவரம் - 10.64% ; கண்ணன்கோட்டை - 61.20%

 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

  • Nov 21, 2024 22:11 IST

    லாரிகள் மோதிய விபத்தில் ஓட்டுநர் இடர்பாடுகளில் சிக்கி தவிப்பு

    கரூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் ரயில் தண்டவாளங்களை ஏற்றிச் சென்ற லாரி மீது மணல் லாரி மோதியதில் மணல் லாரி ஓட்டுநர் இடிபாடுகளில் சிக்கித் தவிக்கிறார். 2 ஜேசிபி, 10 தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் மீட்புப் பணி நடைபெற்று வருகிறது. இதனால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு சம்பவ இடத்தில் இருந்து லோடு லாரி ஓட்டுநர் தப்பி ஓடிய நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



  • Nov 21, 2024 20:54 IST

    லஞ்ச புகார் எதிரொலி: அதானி குழுமத்துடனான திட்டங்களை ரத்து செய்த கென்யா அரசு!

    லஞ்ச புகாரில் சிக்கிய அதானி குழுமத்துடனான ரூ5900 கோடி மதிப்பிலான முக்கிய திட்டங்களை கென்யா அரசு ரத்து செய்துள்ளது. இதன் மூலம் கென்யாவில் அதானி குழுமம் மேற்கொள்ள இருந்த விமான நிலைய விரிவாக்கம், மற்றும் மின்சார திட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 



  • Advertisment
    Advertisements
  • Nov 21, 2024 20:07 IST

    விரைவில் பயன்பாட்டுக்கு வரும் மிதக்கும் உணவகம்: அமைச்சர் ராஜேந்திரன் ஆய்வு

    சென்னையை அடுத்த முட்டுக்காடு பகுதியில் மிதக்கும் உணவகம் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த உணவகத்தில் ஒரே நேரத்தில் 100 பேர் அமர்ந்து சாப்பிட முடியும். கப்பலின் மேல்தளத்தில் நின்று இயற்கை காட்சிகளை ரசிக்கும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் இன்று அதிகாரிகளுடன் கப்பலில் பயணித்து ஆய்வு செய்தார். 2 டீசல் எஞ்சின்களுடன் 6 கடல் மைல் வேகத்தில் இந்த கப்பல் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • Nov 21, 2024 19:12 IST

    உதகை, கொடைக்கானல்: வாகன தாங்கும் திறன் ஆய்வு

    உதகை, கொடைக்கானலுக்கு எத்தனை வாகனங்கள் செல்லலாம் என்பது குறித்து ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம்.  கல்வி நிறுவனங்கள் ஆய்வு நடத்தி வருகிறது. உதகை மற்றும் கொடைக்கானல் மலைப்பாதையில் வாகன நெரிசல் ஏற்பட்டதை அடுத்து இ-பாஸ் முறை நடைமுறைப்படுத்தப்பட்டது. வாகன நெரிசல் ஏற்படாமல் இருக்க மலைப்பாதையில் எத்தனை வாகனங்களை அனுமதிக்கலாம் என்பது பற்றி ஐஐடி , ஐஐஎம் ஆய்வு மேற்கொண்டுள்ளது.



  • Nov 21, 2024 18:57 IST

    போர்க்குற்ற விவகாரம் - இஸ்ரேல் பிரதமருக்கு எதிராக கைது வாரண்ட்

    காசாவில் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளதாக அறிவித்துள்ளது.மேலும், இஸ்ரேல் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் மற்றும் ஹமாஸ் தலைவர் முகமது டெய்ஃப் என அழைக்கப்படும் முகமது டியாப் இப்ராஹிம் அல்-மஸ்ரி ஆகியோருக்கும் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.  



  • Nov 21, 2024 18:38 IST

    முட்டை விலையில் மாற்றம்

    நாமக்கலில் 22 நாட்களுக்குப் பிறகு முட்டை ஒன்றின் பண்ணைக் கொள்முதல் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஒரு முட்டைக்கு ரூ. 5.45 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது

     



  • Nov 21, 2024 18:37 IST

    விஷச் சாராய வழக்கு – 23 பேரின் காவல் நீட்டிப்பு

    கள்ளக்குறிச்சி விஷச் சாராய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள 23 பேரின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. கடலூர் சிறையில் உள்ள 23 பேரின் நீதிமன்றக் காவலை டிசம்பர் 5ம் -தேதி வரை நீட்டித்து நீதிபதி ஸ்ரீராம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.



  • Nov 21, 2024 18:18 IST

    ஆசிரியர்களை அடிக்க பாய்ந்த மர்ம கும்பல் - சிவகங்கையில் பரபரப்பு 

    சிவகங்கை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிக்குள் புகுந்து ஆசிரியர்களை அடிக்க பாய்ந்த மர்ம கும்பலால் பரபரப்பு நிலவியது. 



  • Nov 21, 2024 18:16 IST

    'அனைவருக்கும் நன்றி' - சிறையில் இருந்து வெளியே வந்த கஸ்தூரி பேச்சு 

    ``சிறையில் என்னை நன்றாக நடத்திய அனைவருக்கும் நன்றி. எனக்கு ஆதரவளித்த தெலங்கானா, ஆந்திர மக்களுக்கும் நன்றி'' என்று அவதூறு வழக்கில் சிறை சென்ற நடிகை கஸ்தூரி கூறியுள்ளார். 



  • Nov 21, 2024 17:52 IST

    காளிகேசம் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி

    கன்னியாகுமரி மாவட்டம் காளிகேசம் பகுதிக்குச் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்த கனமழையால் காளிகேசம் பகுதியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. தற்போது வெள்ளம் குறைந்து நீர்வரத்து சீரானதை அடுத்து காளிகேசம் பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதித்துள்ளது.



  • Nov 21, 2024 17:50 IST

    கெஜ்ரிவால் வழக்கில் தடை விதிக்க மறுப்பு 

    டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் விசாரணை நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை தொடர்பான விசாரணை நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கின் விசாரணை நீதிமன்றத்தின் நடவடிக்கைக்கு தடை விதிக்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்த நிலையில், கெஜ்ரிவாலின் மனு தொடர்பாக அமலாக்கத்துறை தரப்பில் பதிலளிக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



  • Nov 21, 2024 16:47 IST

    அரிட்டாபட்டி பாதுகாக்கப்பட வேண்டும் - அமைச்சர் பொன்முடி

    வனத்துறை அமைச்சர் பொன்முடி: “அரிட்டாபட்டி வனப்பகுதியாகப் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே தி.மு.க-வின் நோக்கம்; அரிட்டாபட்டியை உயிர் பன்முகத் தன்மை பகுதியாக அறிவித்துள்ளோம். டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க தமிழக வனத்துறையிடம் அனுமதி கேட்கும்போது திட்டத்தை நிராகரிக்க தமிழக அரசு வலியுறுத்தும்” என்று தெரிவித்துள்ளார்.



  • Nov 21, 2024 16:37 IST

    சென்னை மாநகராட்சியில் பதிவு செய்யப்பட்ட சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாம்

    சென்னை மாநகராட்சியில் பதிவு செய்யப்பட்ட சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நாளை (நவ.22) முதல் வரும் 30ம் தேதி வரை நடைபெறவுள்ளது.



  • Nov 21, 2024 16:35 IST

    ஆடு ஜீவிதம் படத்துகாக ஏ.ஆர். ரஹ்மானுக்கு ஹாலிவுட் இசை விருது!

    ஆடு ஜீவிதம் படத்துகாக சிறந்த வெளிநாட்டு படப் பிரிவில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானுக்கு ஹாலிவுட் இசை விருது வழங்கப்பட்டது; லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த விழாவில் ஏ.ஆர். ரஹ்மான் சார்பில் இயகுநர்பிளஸ்ஸி விருதைப் பெற்றார்.



  • Nov 21, 2024 15:51 IST

    ஒசூரில் வழக்கறிஞர் மீது தனிப்பட்ட காரணங்களுக்காக தாக்குதல் நடந்தது; பாதுகாப்பு சாத்தியமில்லை - ஐகோர்ட்

    வழக்கறிஞர்கள் மீதான தாக்குதல் சம்பவங்களுக்கு எதிராக அகில இந்திய பார் கவுன்சில் துணைத் தலைவர் உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்தார். இதில், ஒசூரில் வழக்கறிஞர் தாக்கப்பட்டது, தொழில் ரீதியாக அல்ல; தனிப்பட்ட காரணங்களுக்காக நடந்துள்ளது. ஒவ்வொருவருக்கும் பாதுகாப்பு அளிப்பது இலாதா காரியம்” என்று சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி தெரிவித்தார். 



  • Nov 21, 2024 15:39 IST

    தி.மு.க-வினர் பேசாத பேச்சையா  பேசி இருக்கிறார் கஸ்தூரி? - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி

    அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ: “தி.மு.க-வினர் பேசாத பேச்சையா நடிகை கஸ்தூரி பேசி இருக்கிறார், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக நீதிபதிகள் கூறுகின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.



  • Nov 21, 2024 15:09 IST

    எனக்கும் முதலமைச்சர் கனவு உண்டு; அதற்கான முதல் புள்ளியை வைத்துள்ளோம் - திருமாவளவன்

    வி.சி.க தலைவர் திருமாவளவன்: “நானும் முதலமைச்சர் ஆக வேண்டும்; எனக்கும் அந்தக் கனவு உண்டு; அதற்காக முதல் புள்ளியை வைத்துள்ளோம்; ஒரு புள்ளி வைத்துக்கொண்டு கோலம்போட முடியாது; நூற்றுக்கணக்கான புள்ளிகள் தேவை” என்று தெரிவித்துள்ளார்.



  • Nov 21, 2024 14:56 IST

    அமெரிக்க நீதித்துறையின் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது - அதானி குழுமம்

    அமெரிக்க நீதித்துறையின் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது. இந்த விவகாரம் தொடர்பாக சாத்தியம் உள்ள அனைத்து சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். அனைத்து விதமான ஒழுங்கு முறைகளையும் அதானி குழுமம் எப்போதும் கடைப்பிடித்து வருகிறது. அனைத்து செயல்பாடுகளிலும் வெளிப்படை தன்மையும், விதிமுறைகளையும் எப்போதும் பின்பற்றியுள்ளோம். அனைத்தும் குற்றச்சாட்டுகள் தான் தவிர, எதுவும் நிரூபிக்கபடவில்லை என குற்றச்சாட்டுக்கு அதானி குழுமம் மறுப்பு தெரிவித்துள்ளது



  • Nov 21, 2024 14:41 IST

    திருச்செந்தூர் யானை - அமைச்சர் பொன்முடி விளக்கம்

    திருச்செந்தூர் கோயிலில் வனத்துறையின் அனுமதியின்றி தான் யானையை வைத்திருந்தனர். யானை தெய்வானையின் பாதுகாப்புக்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்



  • Nov 21, 2024 14:27 IST

    நாளை தி.மு.க எம்.பி.க்கள் கூட்டம்

    நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் 25ம் தேதி தொடங்க உள்ள நிலையில், நாளை (நவ. 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது



  • Nov 21, 2024 14:12 IST

    சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சாலை மறியல்

    ஓசூரில் வழக்கறிஞர் மீதான தாக்குதலைக் கண்டித்து சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். என்.எஸ்.சி. போஸ் சாலையில் அமர்ந்து மறியல் செய்வதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது



  • Nov 21, 2024 14:09 IST

    அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க தமிழ்நாடு அரசுக்கு விண்ணப்பம் ஏதும் வரவில்லை - பொன்முடி

    அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க தமிழ்நாடு அரசுக்கு விண்ணப்பம் ஏதும் வரவில்லை. விண்ணப்பித்தாலும் அரசு நிராகரிக்கும் என வனத்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளது



  • Nov 21, 2024 13:48 IST

    5 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழை எச்சரிக்கை

    நாகப்பட்டினம், ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் அதிகாலை வேளையில் லேசான பனி மூட்டம் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது



  • Nov 21, 2024 13:33 IST

    வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவானது; நாளை மறுநாள் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் - வானிலை மையம்

    தெற்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் நாளை மறுநாள் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும். அடுத்த 2 நாட்களில் தென்மேற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழ்நாடு - இலங்கை கடற்கரைகளை நோக்கி நகரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது



  • Nov 21, 2024 13:12 IST

    இயல்பு நிலைக்கு திரும்பும் திருச்செந்தூர் கோயில் யானை

    திருச்செந்தூர் கோயில் யானை 3 நாட்களுக்கு பின் குளிக்க வைக்கப்பட்டது. இயல்பாக நவதானியம், புற்களை உட்கொண்டது. சாப்பிட்டாயா என்று கேட்ட மருத்துவரிடம், தலையை ஆட்டி பதில் கூறியது. கடந்த 18ஆம் தேதி யானை மிதித்து பாகன் உட்பட இருவர் உயிரிழந்த நிலையில், 3 நாட்களாக வெளியே அழைத்து செல்லாமல் கட்டி வைக்கப்பட்டுள்ளது.



  • Nov 21, 2024 13:09 IST

    கடன் நிலுவை தொகையை செலுத்தாதவர் வீட்டில் பெயிண்டால் எழுதி வைத்த நிதி நிறுவனம்

    புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை அருகே கடன் நிலுவை தொகையை செலுத்தாதவர் வீட்டில், இந்த வீடு அடமானத்தில் உள்ளது என பெரிதாக பெயிண்டால் நிதி நிறுவனம் எழுதியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



  • Nov 21, 2024 12:40 IST

    எடப்பாடி பழனிசாமிக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பதில்

    அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது டெண்டர் முறைகேடு வழக்கில் திமுக அரசு சிபிஐ விசாரணை கோரவில்லை. கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கில் சி.பி.ஐ விசாரணையை வரவேற்று இ.பிஎஸ் தன் மீதான புகாரில் விசாரணையை எதிர்ப்பது ஏன் என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசியுள்ளார். 



  • Nov 21, 2024 12:29 IST

    தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கில் 27ம் தேதி தீர்ப்பு

    நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பரஸ்பரம் விவாகரத்து கோரிய வழக்கில் வரும் 27ஆம் தேதி  சென்னை குடும்ப நல நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.

    விவாகரத்து கோரிய வழக்கில் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விசாரணைக்கு ஆஜராகினர்.

    திருமண பந்தத்தில் இருந்து பிரிவதில் உறுதியாக இருப்பதாக சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் இருவரும் தெரிவித்துள்ளனர்,



  • Nov 21, 2024 12:19 IST

    தனுஷ் - ஐஸ்வர்யா நீதிமன்றத்தில் ஆஜர்

    விவாகரத்து வழக்கில் சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் நடிகர் தனுஷ் ஆஜரானார். 

    கடந்த 3 முறை விசாரணைக்கு அழைத்தும் தனுஷ் - ஐஸ்வர்யா ஆஜராகாத நிலையில், இன்று இருவரும் நேரில் ஆஜராகினர். 



  • Nov 21, 2024 12:14 IST

    புயலாக மாற வாய்ப்பு

    வங்கக்கடலில் இன்று உருவாகிறது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி. 23ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருமாறுகிறது

    காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 2 நாளில் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பு உள்ளதாக தனியார் வானிலை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

    புயலாக வலுப்பெற்றால் ஃபெங்கல் என பெயரிடப்படும். சென்னையில் கரையை கடக்க அதிக வாய்ப்பு உள்ளதாகவும் தனியார் வானிலை ஆர்வலர்கள் தகவல் தெரிவித்தனர். 



  • Nov 21, 2024 11:46 IST

    எலி மருந்து நெடியால் 2 குழந்தைகள் பலி

    சென்னையில் எலி மருந்து நெடியால் உயிரிழந்த 2 குழந்தைகள் உடல் சொந்த ஊரான பட்டீஸ்வரத்தில் அடக்கம் செய்யப்படுகிறது. குழந்தைகளின் உடல்களுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்துகின்றனர். உயிரிழந்த சிறுவன் சுதர்சனுக்கு இன்று பிறந்தநாள் என்பது அங்கு மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 



  • Nov 21, 2024 11:29 IST

    ஆதாரமற்ற அவதூறுகளை பரப்புகின்றனர் - திருமாவளவன்

    வி.சி.க மீது காழ்ப்புணர்வால் வன்மம் கக்குவோரை கடந்து செல்வோம். நம்மை பற்றி ஆதாரமற்ற அவதூறுகளை பரப்புகின்றனர். விமர்சனங்கள் என்ற பெயரால் அப்பட்டமான அவதூறுகளை  பரப்புகின்றனர் என தொண்டர்களுக்கு விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி. கடிதம் எழுதியுள்ளார். 



  • Nov 21, 2024 10:42 IST

    பிற்பகல் வரை மழைக்கு வாய்ப்பு

    நாகப்பட்டினம், திருவாரூர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 6 மாவட்டங்களில் பிற்பகல் 1மணி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக  சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



  • Nov 21, 2024 10:12 IST

    அதானி பங்குகள் பெரும் வீழ்ச்சி!

    லஞ்சம் முறைக்கேட்டில் ஈடுபட்டதாக கவுதம் அதானி மீது அமெரிக்காவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் பங்குகள் பெரும் வீழ்ச்சி அடைந்துள்ளன.



  • Nov 21, 2024 09:28 IST

    தூதரகங்கள் தற்காலிகமாக மூடல்

    உக்ரைனில் ரஷ்யா வான்வழித் தாக்குதலை தீவிரப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுவதால் கீவ் நகரில் உள்ள தூதரக அலுவலகங்களை அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின்,கிரீஸ் நாடுகள் தற்காலிகமாக மூடின.



  • Nov 21, 2024 08:49 IST

    டெல்லியில் அதிகரிக்கும் காற்று மாசு

    டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசினால் 50 சதவீத அரசு மற்றும் தனியார் பணியாளர்கள் வீட்டில் இருந்தே பணியாற்றலாம் என டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.



  • Nov 21, 2024 08:47 IST

    வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்

    பாம்பனில் நேற்று பெய்த மழையால் மீனவ குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்த வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்தது.



  • Nov 21, 2024 08:46 IST

    தயார் நிலையில் மீட்புப் படையினர்

    கன்னியாகுமரி மாவட்டத்தில் வெள்ள மீட்புப் பணிகளுக்கு பேரிடர் மீட்புக் குழுவினர் மற்றும் உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் பொதுமக்கள் அவசர உதவிக்கு காவல் கட்டுப்பாட்டு அறை எண் 100 அல்லது 7010363173 என்ற எண்ணிற்கோ தொடர்பு கொள்ளலாம் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் தெரிவித்துள்ளார்.



  • Nov 21, 2024 08:35 IST

    கோயிலுக்குள் புகுந்த மழைநீர்

    திருச்செந்தூர் பகுதியில் அதிகாலை முதலே பெய்து வரும் கனமழையால் பந்தல் மண்டபம் சிவன் கோயிலுக்குள் மழைநீர் புகுந்தது.



  • Nov 21, 2024 08:10 IST

    பள்ளிக்கு விடுமுறை - ஆசிரியர்கள் முடிவெடுக்கலாம்

    தொடர் கனமழை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிப்பது குறித்து அந்தந்த பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் முடிவெடிக்கலாம் என மாவட்ட கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.



  • Nov 21, 2024 08:07 IST

    மருத்துவ மாணவர்களுக்கு புதிய சலுகை

    மருத்துவ பட்ட மேற்படிப்பு படிக்கும் மாணவர்களின் கட்டாய ஒப்பந்த பணி காலத்தை ஓராண்டாக குறைத்து தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.



  • Nov 21, 2024 07:57 IST

    மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை

    தெற்கு அந்தமானில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாவதை அடுத்து திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.



  • Nov 21, 2024 07:23 IST

    சபரிமலையில் அலர்ட்டாக இருக்கும் அதிரடிப் படை!

    சபரிமலையில் கோவில் சன்னிதானத்தைச் சுற்றி RAF வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.



  • Nov 21, 2024 07:22 IST

    ஹாக்கி: கோப்பையை வென்றது இந்தியா

    ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை மகளிர் ஹாக்கி போட்டியில் இந்திய அணி கோப்பையை வென்றது.



Petrol Diesel Rate Tamilnadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: