தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை மையம் எச்சரிக்கை :
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரத்தால், மேற்கு தொடர்ச்சி மலையொட்டிய பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கோவை, நீலகிரி, நெல்லை, தேனி ஆகிய மாவட்டங்களில் நேற்றும் பலத்த மழை பெய்தது.
24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக கோவை மாவட்டம் சின்னக் கல்லாரில் 7 செமீ, வால்பாறையில் 5 செமீ, நீலகிரி மாவட்டம் தோவாலாவில் 4 செமீ, தேனி மாவட்டம் பெரியாறில் 3 செமீ மழை பதிவாகியுள்ளது.
இதனால் வால்பாறையில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, “வடமேற்கு வங்க கடலில் நேற்று மீண்டும் ஒரு புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.
ஏற்கனவே உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியும் இதே வடமேற்கு திசையில் தான் நிலைகொண்டிருந்தது.மழை பதிவாகியுள்ளது.
இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் கூறுகையில், ''வடமேற்கு மத்திய வங்கக்கடல், அந்தமான் நிக்கோபர் கடல்பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம். இந்தப் பகுதிகளில் கடல் சீற்றமாகக் காணப்படுவதால், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்.
அடுத்த 24 மணிநேரத்தில் வெப்பச் சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
வடமேற்கு மத்திய வங்கக்கடல், அந்தமான் நிக்கோபர் கடல்பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம். இந்தப் பகுதிகளில் கடல் சீற்றமாகக் காணப்படுவதால், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்.” என்று தெரிவித்தார்.