/indian-express-tamil/media/media_files/EUapjWwGEow7msMJJlm5.jpg)
புயலின் தாக்கத்தால் தமிழ்நாட்டுக்கு மழைக்கான வாய்ப்பு குறையும் என்றும் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கவே வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 2 வாரங்களாக வெயிலின் தாக்கம் குறைந்து, மழை பெய்தது. அதிகபட்சமாக கன்னியாகுமாரி மாவட்டம் மைலாடியில் 10 செ.மீ. மழை பெய்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று முதல் 31ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாகவலுவடைந்திருக்கிறது. இதற்கு ராமேல் என்று பெயரிடப்பட்டுள்ளது .
இந்த புயலின் தாக்கத்தால் தமிழ்நாட்டுக்கு மழைக்கான வாய்ப்பு குறையும் என்றும், வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கவேவாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் இன்று இயல்பான வெப்ப நிலை இருக்கும் என்றும் நாளை முதல் 29ம் தேதி வரை இயல்பைவிட வெப்பம் அதிகரிக்கும் என்றும் வானிலை ஆய்வும் மையம் தெரிவித்துள்ளது.
குமரிக்கடல், மன்னார், வளைகுடா, அதனையொட்டிய தென் மாவட்ட கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 65 கி.மீ வரையிலான வேகத்தில் இன்றும், நாளையும் வீசக்கூடும். வடக்கு மற்றும் மத்தியவங்கக்கடல்பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 75 கி.மீ முதல் 130 கி.மீ வரையிலான வேகத்தில் இன்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.