அடுத்த இரு தினங்களில் சென்னை சுற்றுவட்டார மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

அதிகபட்சமாக பாரிமுனையில் 11 செ.மீ மழையும், அதைத் தொடர்ந்து கொளத்தூரில் 9 செ.மீ மற்றும் பெரம்பூரில் 8 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.

அதிகபட்சமாக பாரிமுனையில் 11 செ.மீ மழையும், அதைத் தொடர்ந்து கொளத்தூரில் 9 செ.மீ மற்றும் பெரம்பூரில் 8 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.

author-image
WebDesk
New Update
rain

சென்னையில் கடந்த இரு தினங்களில் (சனி மற்றும் ஞாயிறு)பலத்த மழை பெய்ததால், நகரம் முழுவதும் ஈரப்பதமான வானிலை நிலவியதாக மண்டல வானிலை ஆய்வு மையம் (RMC) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக பாரிமுனையில் 11 செ.மீ மழையும், அதைத் தொடர்ந்து கொளத்தூரில் 9 செ.மீ மற்றும் பெரம்பூரில் 8 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.

Advertisment

இதனிடையே இன்று (திங்கள்கிழமை) நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று மண்டல வானிலை ஆய்வு மையம் (RMC) தெரிவித்துள்ளது. இது குறித்து மண்டல வானிலை ஆய்வு மையத்தின் துணை இயக்குநர் ஜெனரல் பி. கீதா, “செப்டம்பர் மாதத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக ஏற்படும் வளிமண்டல சுழற்சி வழக்கமான ஒன்றுதான். இதேபோன்ற மழை மற்றும் லேசானது முதல் மிதமான மழை அடுத்த சில நாட்களுக்கு நகரில் எதிர்பார்க்கப்படுகிறது. வட தமிழகம் மற்றும் வட கடலோர மாவட்டங்களான புதுச்சேரியில் மிதமான முதல் கனமழை எதிர்பார்க்கப்படுகிறது என்று கூறியுள்ளார்.

இது குறித்து மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின்படி, தண்டையார்பேட்டை, விம்கோ நகர், கொரட்டூர், காசிமேடு, கும்மிடிப்பூண்டி மற்றும் சோழவரம் ஆகிய பகுதிகளில் தலா 6 செ.மீ மழை பதிவாகியுள்ளது. கொரட்டூர், மணலி, அயனாவரம், அண்ணா நகர் மேற்கு மற்றும் செங்குன்றம் ஆகிய பகுதிகளில் 4 செ.மீட்டருக்கு மேல் மழை பெய்துள்ளது. செப்டம்பர் 17 மற்றும் 18 தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், கடலூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், பெரம்பலூர், மயிலாடுதுறை மற்றும் புதுச்சேரி மாவட்டங்களின் சில பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்பநிலையை பொறுத்தவரை, தமிழகம் மற்றும் புதுச்சேரியின் சில பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்தது. தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையாக பாளையங்கோட்டையில் 39.0 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. அதே சமயம், தமிழகத்தின் சமவெளிப் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலையாக கரூர் பரமத்தியில் 21 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.

Tamilnadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: