நெல்லை, தூத்துக்குடி மழை அபாயம் நீங்கியது: தமிழ்நாடு வெதர்மேன்

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர் தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது.

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர் தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது.

author-image
WebDesk
New Update
rain news

தமிழ்நாடு மழை விபரம்

கடந்த சில தினங்களாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்திற்கு மழை அபாயம் நீங்கியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisment

தமிழகத்தில் கடந்த ஒரு மாத காலமாக தொடர் மழை பெய்து வருவதால், தமிழகம் முழுவதும் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதில் கடந்த வாரத்தில் வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக பெயர் கனமழையால், சென்னை மாநகரம் வெள்ளத்தில் மூழ்கிய நிலையில், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

இந்த பேரிடர் பாதிப்பில் இருந்து சென்னை மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பிய நிலையில், கடந்த இரு தினங்களாக தமிழகத்தின் தென்மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர் தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது.

மேலும் நீர்நிலைகள் வேகமாக நிரம்பியுள்ளதால், மக்கள் வசிக்கும் இடங்களில் வெள்ளம் சூழ்ந்து பொதுமக்கள் மிகுந்த துயரத்தை சந்தித்து வருகின்றனர். வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்க மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், வெள்ள பாதிப்பின் காரணமாக வீட்டின் மொட்டை மாடியில் தஞ்சமடைந்த மக்களை மீட்க ஹெலிகாப்டர் கொண்டுவரப்பட்டது.

Advertisment
Advertisements

தென்மாவட்டங்களில் வரலாறு காணாத இந்த மழையின் காரணமாக பொதுமக்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து வரும் நிலையில், மேலும் மழை நீடித்தால் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகின்றனர். இதனிடையே நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்திற்கு மழை அபாயம் நீங்கியுள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் சமூகவலைத பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியிட்டுள்ள பதிவில், வரலாற்று சிறப்புமிக்க மழையை தந்த (தூத்துக்குடி மற்றும் நெல்லை) காலங்காலமாக பேசப்படும் சுற்றறிக்கை நீங்கி மழையும் செல்கிறது நிவாரணப் பணிகள் தற்போது மைய அரங்கேற உள்ளன. வேதாரநயம், கோடியக்கரை - ராமேஸ்வரம் சில பகுதிகளில் இன்று மழை பெய்யக்கூடும். சென்னை வறட்சியான வானிலை தொடரும்.

இந்த தகவல் தென் மாவட்ட மக்கள் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட அமைச்சர் உதயநிதி நேற்று தென்மாவட்டங்களுக்கு சென்ற நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் 4 மாவட்ட ஆட்சியர்களுடன் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் வெள்ள பாதிப்பு குறித்து ஆலோசனை நடத்தினார். மேலும் வெள்ள பாதிப்பில் அரசு அதிகாரிகள்ன் நடவடிக்கைக்கு திமுக தொண்டர்கள் உதவி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

tamilnadu rain

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: