/tamil-ie/media/media_files/uploads/2017/11/school.jpg)
Tamilnadu rains
கனமழை எச்சரிக்கை காரணமாக தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட பள்ளிகளுக்கு இன்று (டிச.9) விடுமுறை விடப்பட்டுள்ளது.
தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மாலத் தீவு பகுதியில் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த சில மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதனால் தமிழ்நாட்டில் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் இன்று (டிச.9) கன மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
மேலும் இந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.
இதனால் நெல்லை, தென்காசி மாவட்ட பள்ளிகளுக்கு இன்று (டிச.9) விடுமுறை விடப்பட்டுள்ளது.
மேலும் தொடர் மழை காரணமாக தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூர் தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (டிச.9) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோயம்புத்தூர், திருப்பூர், விழுப்புரம், கடலூர், திண்டுக்கல், ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி உள்ளிட்ட 10 மாவட்டங்களிலும் புதுச்சேரி பகுதிகளிலும் அடுத்த மூன்று மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.