Advertisment

சொகுசு காரில் குட்கா கடத்தல் : ராஜஸ்தான் வாலிபர் திருச்சியில் கைது

ராஜஸ்தான் வாலிபர் குட்கா பொருளுடன் திருச்சியில் வந்தபோது போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

author-image
WebDesk
New Update
Arrest Trichi

சொகுசு காரில் குட்கா கடத்தல்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

திருச்சி கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த சொகுசு கார் மீது சந்தேகம் அடைந்த போலீசார் அதை நிறுத்தி சோதனை செய்தனர். இந்த சோதனையில் அந்தக் காரில் மூட்டை மூட்டையாக குட்கா இருப்பது தெரிய வந்தது.

Advertisment

பின்னர் நடத்திய விசாரணையில்,  ராஜஸ்தானை சேர்ந்த சுனில்குமார் (23) என்பவர் ராஜஸ்தானில் இருந்து தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்கள் 62 மூட்டைகளை திருச்சிக்கு காரில் கடத்தி வந்தது கண்டறியப்பட்டது.  இதனை அடுத்து கோட்டை காவல் ஆய்வாளர் சிவராமன் தலைமையிலான போலீசார் வாகனத்தை பறிமுதல் செய்து, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்திய குற்றத்திற்காக ராஜஸ்தானை சேர்ந்த சுனில்குமார் என்பவரை கைது செய்தனர்.

க.சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Trichy
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment