இராமேஸ்வரம் மீன் பிடித்து துறைமுகத்திலிருந்து நேற்று காலை சுமார் 400 க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றனர். இன்று அதிகாலை மீன்பிடித்து கொண்டிருந்த போது மன்னார் கடற்பரப்பில் இலங்கை கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை கைது செய்த இலங்கை கடற்படை, ஒரு படகையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள, தலைமன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். மீனவர்களிடம் முதற்கட்ட விசாரணைகள் முடிந்த பின்னர் மேல் நடவடிக்கைககாக மீனவர்கள் மன்னார் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவர். மீனவர்கள் பிடித்துசெல்லப்பட்ட சம்பவம் இராமேஸ்வரம் மீனவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.