மறுசுழற்சி நூல் மில்களும் வேலை நிறுத்தம் அறிவிப்பு : தமிழக அரசிடம் கோரிக்கை

கோவையில் உள்ள தனியார் ஹோட்டலில் மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு சார்பில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.

கோவையில் உள்ள தனியார் ஹோட்டலில் மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு சார்பில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.

author-image
WebDesk
New Update
Tamilnadu

மறுசுழற்சி நூல் மில்கள் வேலை நிறுத்தம்

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஸ்பின்னிங் மில்கள் வேலை நிறுத்தத்தை அறிவித்ததை தொடர்ந்து கழிவுப் பஞ்சுகளில் மறுசுழற்சி செய்து நூல் தயாரிக்கும் மில்களின் ஜவுளி கூட்டமைப்பும் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு கோரிக்கைகளை நிறைவேற்றித் தருமாறு கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

Advertisment

கோவையில் உள்ள தனியார் ஹோட்டலில் மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு சார்பில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. மறுசுழற்சி ஜவுளிக் கூட்டமைப்பின் தலைவர் ஜெயபால் பேசுகையில்,

கழிவுப் பஞ்சுகளில் மூலம் மீண்டும் மறுசுழற்சி செய்து 25 லட்சம் கிரே மற்றும் கலர் நூல்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. கடந்த பத்து மாதங்களாக ("50 சதவீதத்தில் இருந்த கழிவு பஞ்சுகளின் விலை 75 சதவீதம்") வரை உயர்ந்துள்ளது. இதன் காரணமாக ஸ்பின்னிங் மில்களில் ஜவுளிகளின் மீட்டர் "விலை 200 முதல் 4000 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்ய வேண்டி இருக்கிறது.

ஆனால் கழிவுப் பஞ்சுகளில் உற்பத்தி செய்யப்படும் "காடாவுக்கு மீட்டர் 28 முதல் 50 ரூபாய் விற்க வேண்டிய சூழல் ஏற்படும் ஆனால் 75% உயர்வு என்பது ஏற்றுக்கொள்ள முடியாததாக உள்ளது. தமிழக மின்சார வாரியமும் மின் கட்டணத்தை உயர்த்தி உள்ளது. மேலும் குஜராத் மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் மறுசுழற்சி செய்யும் மில்கள் இடம் பெயர்ந்து அங்கு நூல் மறுசுழற்சி மில்கள் அதிக அளவில் முதலீடு செய்து வருகிறது. இதனால் தமிழகத்தில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.

Advertisment
Advertisements

முதலீட்டு பொருட்களின் விலையால் சுழற்சி செய்யப்படும் மில்களில் தயாரிக்கப்படும் பொருள்களுக்கும் விலை அதிகளவு வைக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இதனால் நடுத்தர மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள் மின்கட்டணம் 75% உயர்ந்துள்ளது இதுவும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தற்போது 170 மில்கள் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அமைச்சர்களிடம் கோரிக்கை அளித்துள்ளோம். தமிழகம் முழுவதும் இதுகுறித்து அழைத்துப் பேசி தமிழக அரசு நல்ல முடிவை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

பி.ரஹ்மான் கோவை மாவட்டம்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: