தமிழகத்தில் மீண்டும் மிரட்டும் கொரோனா: 17 பேருக்கு தொற்று பாதிப்பு

தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

author-image
WebDesk
New Update
நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய கோவிட் மாறுபாடு எரிஸ் பற்றிய உண்மைகள்

தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது. கடந்த 12 நாட்களில் 17 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் 4 பேர் உட்பட 12 நாட்களில் 17 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத் துறை தகவல் தெரிவித்துள்ளது. 

Advertisment

இந்தியாவில் கடந்த 2019-ம் ஆண்டு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து நோய் தொற்று வேகமாக பரவி கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். பலர் உயிரிழந்தனர். இதையடுத்து தடுப்பூசி செலுத்தப்பட்டு நோய் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. கொரோனா பரவல் குறைந்தது.

இந்நிலையில், தமிழகத்தில் கடந்த 11ஆம் தேதி 67 பேரிடம் நோய் அறிகுறிகள் தென்பட்டதில் சோதனை மேற்கொண்டதில், சென்னை, சேலம், திருநெல்வேலி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

ஒரே நாளில் 4 பேர் உட்பட 12 நாட்களில் 17 பேர் தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மீண்டும் அச்சம் ஏற்பட்டுள்ளது. 

Advertisment
Advertisements

இருப்பினும் மக்கள் இது குறித்து பயம் கொள்ள வேண்டாம் எனவும், தொற்று ஏற்பட்டால் ஆரம்பக் கட்டத்திலேயே மருத்துவரை அணுக வேண்டும் எனவும் பொது சுகாதராத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us: